செவ்வாய், 26 ஏப்ரல், 2016

31-வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம் May 2016 கும்பகோணம்.

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் 
அளிக்கும் 31வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.

உணவே மருந்து.
மருந்தே உணவு.

நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள்உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாகஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம்வாயு உபத்திரவம்மலச்சிக்கல்நெஞ்செரிச்சல்(அசிடிடி-Acidity) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும்குறைவற்ற செல்வத்தையும் தரும். 

ஒரு இனிய செய்தி:

கும்பகோணத்தில் வருகிற மே மாதம்  இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

இம்மாதம் 21.5.2016 முதல் 27.5.2016 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம். 

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் திரு.இராமலிங்கஅம், அவர்கள் முகாம் இயக்குனராக இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்நல்வாழ்வு நிலையம்தண்டரைப்பேட்டைமதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும்.

இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவக்கம்:21.5.2016 (சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவு: 27.5.2016(வெள்ளிக்கிழமை-பிற்பகல் நான்கு மணி வரை)

இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.

பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.2600 /- மகளிர்: ரூ.24௦௦ 
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2200.

அணுக வேண்டிய முகவரி:

திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலர், 
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம், 
14, அக்ரஹாரம்தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
அலைபேசி:9486768930

ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அலைபேசி எண்: 9486768930 மூலம்  செயலரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

வாழி நலம் சூழ...

புதன், 13 ஏப்ரல், 2016



தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


புத்திள மலராய்ப் 
பூத்ததிந்தப் புத்தாண்டு.

நித்தமும் நலவாழ்வு 
தரட்டும் நம் இறைவன்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஐந்து இறுதி பகுதி.

வாழி நலம் சூழ...

சிறுநீர் மருத்துவம் பற்றிய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை கீழே காணலாம்;

சிறுநீரின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய மேலும் சில விவரங்களை இங்கே தருகிறோம். இந்தத் துறையில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகள் இதோ.

1. சர்வரோக நிவாரணி, ஆசிரியர் சுவாமி பூமானந்தா, நூல் வெளியீடு: இராசிபுரம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்.



2. கேரளாவில் இந்த சிவாம்பு சிகிச்சை முறை திரு.நாராயணன் மாஸ்டர் அவர்களால் வெகு திறம்பட சொல்லித் தரப்படுகிறது. அவரது மொபைல் எண்: 8547146191 தொலைபேசி எண்: 04962446191

3. சிறுநீர் சிகிச்சையின் இயற்கை நன்மைகள் எனும் தமிழ் நூல்
விலை ரூ. 220.00

 

இந்நூலை NOTIONPRESS.COM எனும் வலைத் தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜகதீஷ் ஆர்.புராணி (AUTHOR MR JAGATHESE R PURANI) அவரை தொடர்பு கொள்ள மொபைல் எண்: 093428 72578
திரு புராணி அவர்களின் வலைத்தளம் www.urinetherapy.in 
அவரது மின்னஞ்சல் :  jbhurani@gmail.com                                  

திரு.புராணி அவர்களின் வலைத் தளத்தில் சிவாம்பு முறையால் சிகிச்சை பெற்று பயனடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளின் ஸ்கேன் ரிப்போர்டுகளுடன் காணலாம். சிவாம்பு சிகிச்சை முறையை எவ்வாறு பின்பற்றுவது என்ற விவரங்களையும் காணலாம். சிறுநீரை எவ்வாறு நாற்றமற்ற வகையிலும், நிறமற்ற வகையிலும் பெறுவது என்பதற்கான முறைகளை திரு புராணி இந்த வலைதளத்தில் விவரமாக தந்துள்ளார்.

4. Wonders of Uropathy by Dr.G.K.Thakkar

 


WONDERS OF UROPATHY எனும் இப்புத்தகத்தை B.JAIN PUBLISHERS (P)LTD. வெளியிட்டு உள்ளனர். இப்புத்தகத்தை பெற விரும்புவோர்  www.bjainbooks.com எனும் வலைத்தளம் மூலமாக பெறலாம். புத்தகத்தின் விலை ரூ. 39.00இப் புத்தகத்தின் ஆசிரியர் Dr.ஜி.கெ.தக்கர் (DR G K THAKKAR) இந்த சிகிச்சை முறையை தமது WATER OF LIFE FOUNDATION (INDIA) எனும் அமைப்பின் மூலம் மும்பையில் (MUMBAI) இருந்து பரப்பி வருகிறார்.

5. Miracles of Urine Therapy.



MIRACLES OF URINE THERAPY BY DR C P MITHAL MBBS MD
விலை ரூ. 285 INCLUDING  TRANSPORT CHARGES.  AMAZON.IN வலைத் தளம் மூலமாக  இந்தப் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சிறுநீர் மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பின் பற்றி வந்த முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் அணிந்துரை இந்த நூலில் உள்ளது.

6. MANAV MOOTRA BY RAOJIBHAI MANIBHAI PATEL .. இந்த மின்னூலை இணையவெளியில் இருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். பயனடைந்தோரின் விவரங்களுடன் சிவாம்புச் சிகிச்சைகளைப் பற்றி சிறப்பான முறையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
7. சிறுநீர் சிகிச்சை பற்றிய மேலும் ஒரு சிறப்பான நூலை இந்த வலைத் தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://www.whale.to/a/The-Golden-Fountain-Coen-van-der-kroon-1994.pdf


8. பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா எனும் அமைப்பின் நிறுவனரான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் “A systematic course in the ancient tantric techniques of Shivambu by Swami Satyananda Saraswati, Bihar School of Yoga” நூலில் சிவாம்பு சிகிச்சை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
.
9. சிறுநீரை மேற்பூச்சாக வெளி உபயோகம் செய்வது எப்படி எனும் விளக்கத்தை காணொளி மூலம் காண விரும்புவோர். இந்த youtube தளத்தை நாடலாம். Urine Therapy: External use of Shivambu or Urine Therapy 

திரு அ.மெய்யப்பன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்களையோ அல்லது புத்தகங்களையோ பெற விரும்பினால் அவரது முகவரி மற்றும் அலைபேசி/தொலைத் தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மின் பொறியாளர்  திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip in Yoga 
இல்ல முகவர்: புதிய எண்:15, முதல் தளம், 
திரு.வி.க. மூன்றாவது தெரு, 
கேசரி உயர்நிலைப் பள்ளி அருகில்,
மைலாப்பூர், சென்னை 600004
அலைபேசி: 9444323730
தரை இணைப்பு: (044)24990565

 to change your lifestyle.practice yoga and adopt nature cure and eat more fruits and vegetable salads.

சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐந்து பகுதிகளை பொறுமையாகப் படித்த வலைப்பூ வாசகர்களுக்கு நன்றி. இந்த முறையிலான மருத்துவம் மிகச் சிறந்த மருத்துவம். பொருட் செலவோ, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியமற்ற சிகிச்சை முறை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதனை இந்த சிகிச்சையின் மூலம் பயன் பெற்றவர்களை கொண்டு அறியலாம். இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது. 

வாழி நலம் சூழ.. வலைப்பூவில் மேலும் பல நலவாழ்வியல் செய்திகளை படித்து பயன் பெற்று மகிழ அழைக்கிறோம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி நான்கு


வாழி நலம் சூழ வலைப் பூவின் வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த மூன்று பகுதிகளில் நாம் முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுத தாரணை என்றெல்லாம் அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றி பல செய்திகளைப் படித்தோம். உலகளாவிய அளவில் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஆய்வுகள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன. சிறுநீரில் இருக்கும் பொருட்களின் துணை கொண்டு அலோபதி மருந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் Google தேடலில் Auto Urine Therapy (AUT) என தட்டச்சிட்டு தேடினால் சிறுநீரின் பயன்கள் பற்றிய லட்சக்கணக்கான பக்கங்கள் உலகளாவிய அளவில் காணக் கிடைக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்களில் சிறுநீரின் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக றிகிறோம்.

தமிழ்நாட்டில் பலர் இந்த காசு செலவில்லாத, எளிய மருத்துவ முறையைப் பயன்படுத்தி சொரியாசிஸ் (Psoriasis), கான்சர் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அலோபதியினால் நெடுங்காலமாக தீர்க்கமுடியாத நலக்கேடுகளுக்கு ஆரோக்கியத் தீர்வுகளைப் பெற்று வருகிறார்கள்.

இந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒரு பெரியவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வதில் வாழி நலம் சூழ வலைப்பூ பெருமிதம் கொள்கிறது.

மின்பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., M.B.A., PGDip(Yoga) அவர்கள் சிறுநீர் சிகிச்சையில் வல்லுநர். யோகா ஆசிரியராகவும், இயற்கை நலவாழ்வியல் அறிஞராகவும் திகழும் அவர் இயற்கை நலவாழ்வியல் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

திரு அ.மெய்யப்பன் எழுதிய நூல்கள்: 

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் 

உயிர் காக்கும் உணவு மருத்துவம். 
 

இன்றளவிலும் சேவைகளில் முன்னோடியாகத் திகழும் மதுரை காந்தி சங்கத்தின் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ அறக்கட்டளை போன்ற தமிழகத்தின் முன்னணி இயற்கை நல இயக்கங்களின் நிறுவன காலத்தில் இருந்தே உறுப்பினராகவும், அந்த அமைப்புக்களின் பலவேறு பதவிகளில் இருந்து கொண்டும் தளராத சேவை செய்து வருபவர். தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் Post Graduate Diploma in Yoga பட்டயம் பெற்றவர். புனேவில் உள்ள இயற்கை மருத்துவக் கழகத்தின் இயற்கை மருத்துவக் கல்வி  பயிற்சி பெற்றவர்,

இயற்கை நலவாழ்வு குறித்த புத்தகங்களை எழுதிய தமிழகத்தின் நலவாழ்வியல் முன்னோடி (சரஸ்வதி சங்கம் நிறுவனர்) தவத்திரு.பிக்ஷு சுவாமிகளின் அடிப்பொடி என தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர். தமிழகத்தின் முன்னோடி இயற்கை நல வாழ்வியல் அறிஞர்களான, திரு.ம.கி.பாண்டுரங்கனார், சிவசைலம் மு.இராமகிருஷ்ணன் போன்றோரின் வழித் தோன்றல்களான

மு.ஆ.அப்பன் (குலசேகரப்பட்டினம்), திரு இர.இராமலிங்கம் (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்), திரு. ஸ்ரீராமுலு (காந்தி இயற்கை மருத்துவமனை, மதுராந்தகம்), யோகாகுரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் (திருமூலர் இயற்கை மருத்துவ அறக்கட்டளை) போன்றோருடன் இணைந்து செயல்படுபவர். தமிழகமெங்கும் இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்திக் கொண்டு வருபவர்,

இயற்கை நலவாழ்வியல் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரும், எழுபதுகளைத் தாண்டி சீரான ஆரோக்கியத்தை கொண்டிருப்பவருமான திரு அ. மெய்யப்பன் சிறுநீர் மருத்துவம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

தமிழ்நாட்டில் உள்ள ராசிபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிவானந்தரின் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், அமைப்பின் தலைவர் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்களை சந்தித்து சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய சர்வரோக நிவாரணி நூல் வாங்கச் சென்ற போது ராசிபுரத்தில்  சுவாமி குரு பிரகாசானந்தா அவர்கள் சிவாம்பு சிகிச்சை பற்றி சொன்ன நாளில் இருந்து சிவாம்பு அருந்தத் தொடங்கி விட்டேன். நான் 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாம்பு அருந்தி வருகிறேன். இயற்கை மருத்துவத்தையும் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு பல நூல்களைப் படித்த பிறகு ஓரளவு தெளிவு பெற்றேன். பெங்களூர் புரானி அவர்கள் சிறுநீர் நாற்றமடிக்காமலும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் இருப்பதற்கு யோசனை சொல்லியுள்ளார். இளநீர், நீர்மோர், தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரிக்காய் பார்லித்தண்ணீர் இவற்றை அருந்த வேண்டும். நாள் முழுவதும்  3லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும்.  தனக்குத் தானே வைத்தியம் செய்வதற்கும் செலவில்லாத  வைத்தியம் செய்வதற்கும் தீராத நோய்களிலிருந்து விடுதலை பெறவும் உதவுவது சிவாம்பு மருத்துவம். எளிய வைத்தியம். விருப்பு வெறுப்பு இல்லாமல் திறந்த மனத்தோடு சிவாம்புச் சிகிச்சையை முதலில் மஜாஜ் செய்வதில் தொடங்கிப் பிறகு அருந்தத் தொடங்கலாம். பலர்  பயனடைந்துள்ள போது அதை நாம் ஏன் செய்து பார்க்கக்கூடாது?  டாக்டருக்கும் பீஸில்லை. மருந்துக்கும் காசில்லை.

என்கிறார் திரு.அ. மெய்யப்பன் அவர்கள்.

சிவாம்புச் சிகிச்சை என்று அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐயங்களுக்கு தீர்வுகளையும், நோய்களுக்கான ஆலோசனைகளையும் நீங்கள் விரும்பினால் இவரிடம் இருந்து பெறலாம் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

சென்னையில் வசிக்கும் திரு.அ.மெய்யப்பன் அவர்களது அழைபேசி எண்:9841667695 / 9444323730 

இந்தத் துறையில் பலர் புத்தகங்களை பல மொழிகளில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவைகளில் சில புத்தகங்கள், குறிப்புக்கள், காணொளிகள், மின்னூல்கள் போன்ற வடிவில் உள்ளவை பற்றி அடுத்து வெளியாக விருக்கும் இத் தொடரின் இறுதிப் பகுதியில் காணவிருக்கிறோம்.

அடுத்த பகுதி. நிறைவுப் பகுதி.

வாழி நலம் சூழ...

வியாழன், 31 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று


அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திப் பகிர்வுகளின் மூன்றாம் பகுதியாக சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய 'சர்வ ரோக நிவாரணி' எனும் நூலில் இருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்.

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று

சிறுநீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

(இது நமது வாசகர் முரளிதரன்.கே நமக்கு அனுப்பி வைத்த பதிவு.. வாசகர்கள் பதிவில் கூறப்பட்டுள்ளவையை மருத்துவ ஆலோசனையின்றி நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
சமீபத்தில் சர்வரோக நிவாரணி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதை மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி பூமானந்தா அவர்கள்.
காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.

ருத்ரயாமளடாமர தந்திரம் என்ற புத்தகத்தில் சிவாம்பு கல்பம்என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரில் பத்தொன்பது போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அளவில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள். சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ளவராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலையில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.

உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு கழுவுவதால், மூலவியாதி, வலி, எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிறது.

சிறுநீரின் உபயோகம்:
இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நோயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும். சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள் வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால் (Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்கக் கூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ள வேண்டும். இருதய நோய் இல்லாதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப் பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வளர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கியத்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.


வீடியோ இணைப்புக்கு:


அடுத்த பகுதியில் நிறைவு.


ஞாயிறு, 27 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி இரண்டு


பகுதி இரண்டு

பகுதி இரண்டுக்குள் செல்லுமுன்:

முற்காலத்தில் சித்தர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்த மருத்துவமுறை இடையில் சுணக்கம் கொண்டிருந்தாலும், தற்காலத்தில் மீண்டும் மக்கள் மத்தியிலும், வெளி நாடுகளிலும் பெருமளவில் புகழ் பெற்றுவருகின்றது. 

சிறுநீர் மருத்துவம் பற்றிய திருமூலரின் திருமந்திரத்தில் அமுரிதாரணை எனும் தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. திருமந்திரத்துக்குள் அமுரி தாரணையைப் பற்றி காண்போமா?
--------------------------

(அமுரி - வீரியம்தாரணை - தரித்தல்அமுரிதாரணையாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர்சிவநீர்வானநீர்ஆகாய கங்கைஅமுத நீர்உவரிதேறல்மதுகள்மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும்சூக்குமத்தில் ஒளியாகவும்பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின் பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரிஅமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)

849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்துமிளகுநெல்லிப் பருப்புகஸ்தூரிமஞ்சள்வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும்ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது
--------------------------------------------------------------------------------------
ஆதாரம்: தமிழ்க்கச்சேரி வலைப்பூ.
இணைப்பு: http://tamilkacheri.blogspot.in/2014/10/blog-post_6701.html
தொடரும் (பகுதி மூன்றில் மற்றொரு செய்தி)
அடுத்து வெளியாக இருக்கும் பகுதி மூன்றில் தவத்திரு பூமானந்தா அவர்கள் எழுதிய நூல் ஒன்றில் இருந்து சில பகுதிகளை காண இருக்கிறோம். மேலும் சென்னையைச் சேர்ந்த பெரியவர் திரு அ.மெய்யப்பன் அய்யா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கப் போகிறோம்.

வியாழன், 24 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஒன்று



ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்கள்.

வசந்த காலம் இன்றில் இருந்து தொடங்குகிறது.

வாழி நலம் சூழ.. வலைப்பூ வாசகர்களுக்கு என் இனிய வணக்கம்.

மிக நீண்ட நாட்களாக பதிவுகளை இட இயலாத சூழ்நிலை.

இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.

இன்றைய சூழலில் பலவிதமாக நோய்கள், அவற்றிற்கு தீர்வுகள் என மனிதகுலத்தின் தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பலவிதமாக மருத்துவ முறைகள் உலகில் உள்ளன. மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாக சித்த மருத்துவம் அறியப்படுகிறது. சித்தர்கள் கண்டுபிடிப்பான சிவாம்பு மருத்துவம் எனும் அமுரி மருத்துவம் அதில் ஒன்று. சிறுநீர் மருத்துவம் பற்றிய சில கட்டுரைகளை இணைய தளத்தின் வலைப்பூக்களில் இருந்து இங்கே வெளியிடுகிறேன். மூன்று பகுதிகளாக அவை வரும். இறுதிப் பகுதியில் சென்னையில் உள்ள ஒரு பெரியவர் பற்றி குறிப்பிட உள்ளேன். அவர் மூலமாக இந்த மருத்துவம் பற்றிய விவரங்களையும், வழிகாட்டல்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். அதுவரை சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திகளை தொடர்ந்து படியுங்கள்.

வாழி நலம் சூழ.. 

நன்றி.


சிவாம்பு மருத்துவம் எனும் அமுரி தாரணை 
(சிறுநீர் மருத்துவம்)
பகுதி ஒன்று.



சிறுநீர் மருத்துவம்

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்-1

முதல் படி: சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்

சிறுநீர் சிகிச்சையை முதன்மைப்படுத்தும் ஒரு அறிவியல் வலைப்பூ. சித்தர்கள் முதல் நிறைய சான்றோர்கள் ஆதரித்த முப்பு மருத்துவம்சிவாம்பு மருத்துவம் அல்லது சிறுநீர் மருத்துவத்தின் மேன்மைகளைப் பரப்ப இவ்வலைப்பூ முயலும். கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை:

RMR.இராஜசேகரன்
காரைக்குடி

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்
ஆரோக்கியத்திற்கான அடிப்படை:
இன்றைய உலகில் மனித சமுதாயம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக வசதியான வாழ்க்கை பெற முடிகிறது. ஆனால் மனத்தளவில் நிறைவோஅமைதியோ அல்லது உடலளவில் ஆரோக்கியமோ இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. நவீன மருத்துவம்  வளர்ந்துள்ள இந்நாளில் ஏன் நோய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது;  மருத்துவமனைகளின் எண்ணிக்கையும்,  மருந்துக் கடைகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. 

மேலும் இன்று நாட்பட்ட நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதோ என்ற நிலை உள்ளது. இதை நவீன மருத்துவமும் மறுப்பதாக இல்லை. நவீன மருந்துகளின் பக்க விளைவுகளையும்பின் விளைவுகளையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நோய்களைக் குணப்படுத்த வேண்டிய மருந்துகள்புதிய தீராத நோய்களுக்கு வழிகோலுவதுதான். அடுத்து நோய்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து கொண்டே போவதுதான். மனதைச் செம்மையாகவும்உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வழிகாட்ட பலவேறு யோகா மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் தோன்றிக் கொண்டே இருந்த போதும்பெரிதாக பலன் கிட்டியிருப்பது போல் தோன்றவில்லை.

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தபோதும்மன அமைதியும்உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும்அப்படியெனில் இதற்கு வேறு வழியே இல்லையா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண இக்கட்டுரை முயல்கிறது.

நமது ஆய்வை பரிணாமத்திலிருந்து துவக்குவோம். பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாருக்கும், ஆன்மிகத்தாருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம். 

உயிர் என்பது சிற்றுயிர்களிலிருந்து பேருயிர்களாகப் பரிணமிக்கின்றது. விலங்கினங்கள் எளிய, சிக்கலற்றமகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் துன்பங்கள்துயரங்கள்கவலைகள் என்று அதிருப்தியான வாழ்க்கை வாழ்கின்றது. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மனித இனம் ஆறாம் அறிவைப் பெற்ற ஒரே உயிரினம் என்று பெருமை பேசுகிறோம்பரிணாமத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியிருக்க ஏன் இந்த துன்பமானதுயரமான வாழ்க்கை?

விலங்கினங்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. அவை இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கையில் எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே உணவை உட்கொள்கின்றன. உணவை அவை மாற்றவோசீர்திருத்தவோருசி கூட்டவோ முயல்வதில்லை. ஆனால் மனிதனோ தனது பரிணாம வளர்ச்சி பெற்ற புலன்களால் இயற்கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தனது தேவைக்காகவோருசிக்காகவோ மாற்ற விரும்புகின்றான். சுருங்கச்சொன்னால் இயற்கையை வெல்ல மனிதன் விரும்புகின்றான். மனிதன் மாறுதல்களை விரும்புகின்றான். இவ்வாறாகமனிதனது வாழ்க்கை முற்றிலும் செயற்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. உணவை எடுத்துக் கொண்டால்உணவை வேறு பொருட்களுடன் சேர்த்துசமைத்துநிலைமாற்றி தனது ருசிக்கேற்ப அல்லது தேவைக்கேற்ப உண்ண விரும்புகின்றான். இதனால் உணவுப் பொருட்களின் குணாதிசயங்கள் சமயத்தில் முற்றிலுமாக மாறிவிடுகின்றன. மூலப் பொருட்களில் இருந்த குணங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதுதான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணமா?

பரிணாமத்தில் எல்லா உயிர்களுக்குமே புலன்கள், உள்ளுணர்வுகள், தேவைக்கேற்பவும், சுற்றுச் சூழலுக்கேற்பவும்காலத்திற்கேற்பவும் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை இயல்பாகவே பெற்றுள்ளன.

விலங்கினங்கள் இயல்பானஇயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. வாழ்வை உள்ளபடி அவை எதிர்கொள்கின்றன. உணவைப் பொறுத்தவரை கிடைத்தவற்றைஎதையும் மாற்ற முயலாமல் அப்படியே உண்கின்றன. அவைகளுக்கு வியாதி என்பது சாதாரணமாக உண்டாவதில்லை. அப்படியே நோய்நொடி உண்டானாலும் தன்னை எப்படி குணப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது. அவை மருத்துவர்களையோ அல்லது வெளி உதவியையோ, பிறரது ஆலோசனையையோ நாடிச் செல்வதில்லை.

உலகின் பல்வேறு இடங்களிலும்பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த சான்றோரும்தத்துவ ஞானிகளும்மதத் தலைவர்களும் மனித வாழ்க்கைக்கு நிச்சயமான குறிக்கோள் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். உன்னையே நீ அறிவாய்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த இலக்கை அடையமனிதனுக்கு ஆறாம் அறிவு தேவைப்பட்டதுஅதனாலேயே பரிணாமம் நமக்கு ஆறாம் அறிவை வழங்கியுள்ளது. இந்த ஆறாம் அறிவால் உந்தப்பட்டுமனிதன் எல்லாவற்றிலும் காரண காரியத்தைத் தேடுகிறான். இப்பேரண்டத்தில் ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்று உணர்கிறான். மனிதனுக்கு பரிணாமம் செயலாற்றும் வல்லமை கொண்ட இரு கரங்களைத் தந்துள்ளது. தனது அறிவையும்கரங்களையும் கொண்டு மனிதன் நுட்பமான கருவிகள்உபகரணங்கள்எந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளான். இவற்றைக் கொண்டு தனது தேவைக்கான பல புதிய புதிய பொருட்களை உருவாக்கவும் செய்கிறான். இது அவனது ஆறாம் அறிவால் கிடைத்த பேறு அல்லது சிறப்பு. எனவே அவன் எல்லாவற்றையும் வெவ்வேறு வகையாக மாற்றிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான்.

இந்நிலையில் நோய்நொடிகள் தவிர்க்க இயலாதவை. விலங்கினத்தைப் பொறுத்தவரையில் துன்பம் விளைவிப்பவைதீங்கு விளைவிப்பவை ஆகியவற்றை தவிர்க்க அவைகளின் உள்ளுணர்வு வழிகாட்டுகின்றது. ஆனால் மனிதனுக்கு அவனது உள்ளுணர்வு வழிகாட்டஎச்சரிக்க தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:

1. ஆடுகள் ஊமத்தைஎருக்கு போன்றவற்றை தின்றாலும் அவைகளுக்கு ஊறு நேர்வதில்லை.

2. சில பூச்சிகளின் வாழ்க்கையில் லார்வா என்றொரு பருவம் வருகிறது. இப்பருவத்தில் அவைகளுக்கு பார்க்கும் சக்தி இருப்பதில்லை. எனினும் அவை தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்துவேண்டிய இலை தழைகளை மட்டும் உண்டு உயிர் வாழ்கின்றன.

3. சாதாரணமாக சமையலுப்புவெங்காயம்புளிஇஞ்சிபூண்டுமிளகுகடுகுமிளகாய் போன்றவற்றை மனிதன் அப்படியே உண்பதில்லை. ஆனால் அவற்றை வேறுவேறு அளவில்வேண்டிய இடங்களில் தேவைக்கேற்ப உணவுடன் சேர்த்து உண்கின்றன. அவ்வாறு செய்யும் போது சுவை கூடிஏற்புடையதாக உணவு மாறுகின்றது.

4. இன்றைய நவீன யுகத்தில்நம் வாழ்வில் நாம் பல இரசாயனப் பொருட்களையும்தாதுக்களையும்உலோகங்களையும் கையாள நேர்கிறது. இவற்றில் பல நம் உடலினுள் சென்றுஅவற்றின் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன. கிட்டத்தட்ட நாம் உட்கொள்ளும் அனைத்துப் பொருட்களுமே நம் உடலிலும்மனிதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை அனுபவரீதியாகப் பார்க்கிறோம். இத் தாக்கங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லைமாறுபடுகின்றன. மரபுக் கூறுகள், உடலமைப்புஉணவின் தன்மை, குணங்கள், எண்ணங்கள், சுற்றுச்சூழல், காலம், செயல்எந்தக் கட்டத்தில் மனிதன் வாழ்கிறான்அவனது பழக்க வழக்கங்கள், தனித் தன்மைகள் போன்றவற்றால் மாறுபடுகின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தின் பதார்த்த குண சிந்தாமணி (Materia Medica) யைப் படித்தால் பொருட்களின் தாக்கங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம் என்ற உண்மை எளிதில் விளங்கும். இத்தாக்கங்களின் தன்மையும்அளவும் மாறுபடுகின்றது. எனவே காரண காரிய விளக்கம் என்பது சிக்கலாகிறது. மேலும் பல சமயங்களில் இத் தாக்கங்கள் எளிதில் காணக் கூடியவையாகவோ அல்லது உணரக் கூடியவையாகவோ இருப்பதில்லை.

இப்போது நமக்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன: மனித இனத்திற்கு துன்பம் என்பது தவிர்க்க முடியாததாநம் பரிணாமத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா?

வல்லுனர்கள் இப்பேரண்டத்தில் நுட்பம்வரைமுறைஒன்றுக்கொன்று தொடர்பு (Pattern, Precision, Regularity) போன்றவற்றை எல்லாவற்றிலும் காண்கின்றனர். இது பரிணாமம் எவ்வளவு சரியாகநேர்த்தியாகச் செல்கிறதுஅதில் விபத்து என்றோ எதிர்பாராதது என்று எதையும் கூறுவதற்கில்லை என்ற பேருண்மையை உணர்த்துகிறது. இதை சிற்றுயிர்களிலும் விலங்கினத்திலும் கண்ணுறலாம். எனவே இது மனித இனத்திற்கும் பொருந்தாமலிருக்க காரணம் இல்லை. மேற்கண்ட இரண்டு வினாக்களுக்கும் பதில் இல்லை” என்பதே.

மனிதனின் துன்பங்களுக்கும்துயரங்களுக்கும் பரிணாமத்தைக் குறைகூறுவது என்பது சரியில்லைமுறையில்லை என்பது தெளிவாகிறது.

நோய்நொடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலைஅவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பரிணாமம் வழங்காதிருக்க முடியாது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை மீறி நோய் வாய்ப்படும் போது எளிய முறையில் சீர் செய்துகொள்ள வழிமுறைகளையும், மருந்துகளையும் இயற்கை வழங்காதிருக்க முடியாது.

விலங்குகள் தங்கள் நோய்நொடிகளுக்கு மருந்துதேடி யாரிடமும் செல்வதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். மனிதனுக்கும் இது பொருந்த வேண்டும். அப்படியானால்அப்படி மருந்தைத் தேடஏதாவது வழி தெரிகிறதாஎங்கே மருந்தைத் தேடுவது?

மனம்புத்திபுலன்கள்உடற்கட்டுதிறமைகள் எப்படி எல்லாவற்றிலுமே மனிதன் விலங்குகளிடமிருந்து மாறுபடுகிறான். மனிதனின் துன்பத்திற்கான காரணங்களும், நிவர்த்திகளும் அவனது புலன்களிலேயே இருக்க வேண்டும். முரண்பாட்டுத் தத்துவத்தின்படி நோயின் காரணங்களும்அவற்றை குணப்படுத்தும் வழிகளும் இரண்டுமே – ஐம்புலன்கள் அறிந்ததாக இருக்கவேண்டும். தன்னையறிதலிலும் ஐம்புலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஒவ்வொரு உடல் உறுப்பும் இயற்கையின் பல சோதனைகளுக்குப் பின்னரே தேவைநோக்கம்சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறுப்பும் அனாவசியம் என்றோதேவையில்லை என்றோ கூறமுடியாது. இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்: மரங்கொத்திப் பறவைக்கு அதன் இரை தேடும் தேவைக்கேற்ப நீண்ட அலகு அமைந்துள்ளது. மீன்கொத்திப் பறவை தன் இரையைத் தேடிக்கொள்ள ஆற்றல் மிக்க கண்களையும்செங்குத்தாகக் கீழே இறங்கிஇரையைப் பற்றிசெங்குத்தாக மேலெழும்பும் ஆற்றலையும் (Vertical Landing and Vertical Take-off) பெற்றுள்ளது. மீன்களுக்கு நீந்த ஏதுவான உடலமைப்பு உள்ளது. தவளைகள் நிலத்திலும்நீரிலும் வாழ்வனஅதற்கேற்ற உடலமைப்பை அவை பெற்றுள்ளன.

பெண் கங்காரு தன் குட்டியைச் சுமந்து செல்ல ஏற்றவாறு வயிற்றில் ஒரு பை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம். கங்காரு ஒரு மம்மல் (Mammal) – அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தது. அது மூன்றடி உயரம் வரை வளரும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவித்தாவி வேகமாக குதித்துச் செல்லும். எனவேகுட்டிக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில்வயிற்றில் சுமக்கும் கரு சிதைந்துவிடும்அல்லது தூக்கிச் செல்லும் குட்டிக்கு ஆபத்து நேரிடலாம். கங்காருக்குட்டி தனது முதல் ஆறு மாதங்களை தன் தாயின் வயிற்றிலுள்ள பையிலேயே கழிக்கிறது. பால் சுரக்கும் உறுப்பும் அந்தப் பையிலேயே அமைந்துள்ளது. எனவே வெளியே வராமலேயே தாயின் வெளிப் பக்கத்திலுள்ள அந்தப் பையிலிருந்தே குட்டி பால் குடிக்க முடியும். இயற்கை எவ்வளவு நேர்த்தியாகபிரமிக்கும்படியாக செயல்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

அடுத்து யானையை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு மம்மல்தான். அதன் வடிவமைப்பும் வித்தியாசமாகசிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். உயரமானமிகக் கனத்த, மிகப் பெரிய உடலமைப்பு. நினைத்துப் பாருங்களேன்: எளிதில், நீட்டசுருக்கமடிக்கஉறிஞ்சி வைத்துக் கொள்ளஏதுவான துதிக்கை மட்டும் இல்லையெனில் அது நீர் பருக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும்! இயற்கை யானையின் வடிவையும்தேவைகளுக்கும் ஏற்ப வேண்டிய உறுப்புகளை படைத்துள்ளது.
இப்போது மனிதனை எடுத்துக் கொள்வோம். நான்கு கால் பிராணிகளிடமிருந்து பரிணமித்தவன் மனிதன். படுக்கைவாட்டிலிருந்துசெங்குத்தாக நிமிர நிமிர, முன்னங்கால்கள் இரண்டும் முன்னங்கைகளாகின. இந்த மாற்றத்தில் மனிதனின் கரங்கள் இரண்டும் எளிதாக அவனது பிறப்புறுப்பை அடையமுடியும். தன் உள்ளங்கையை ஒரு கோப்பையைப் போல் ஆக்கிக்கொண்டு திரவப் பொருட்களை கையிலேந்த முடியும். இதன் நோக்கம் என்ன?

தற்போது நாம் வேறு சில உயிரினங்களைப் பார்க்கலாம். சிங்கம், புலி, வரிக்குதிரை, குரங்குஆடுமாடுஓணான் போன்றவை தன் சிறுநீரைத் தானே பருகுகின்றன. மனிதனுக்கு உள்ளதுபோல் கோப்பை போன்ற உள்ளங்கை அமைப்பு இல்லாததால் அவை சிறுநீரை நேரடியாகவே சுவைக்கின்றன. குட்டி போட்டபின் குட்டியைச் சுற்றியுள்ள ஜவ்வை நாவினால் நக்கிச் சுவைக்கின்றன. குட்டி வெளிப்படுத்தும் சிறுநீரை அவை அருந்துகின்றன. தனது சிறுநீரை தானே நேரடியாக சுவைக்க இயலாத சில பிராணிகள் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவற்றின் சிறுநீரைச் சுவைக்கின்றன. நமக்கு இது விநோதமாகவோவித்தியாசமாகவோ படலாம். ஆனால் அவை இதை இயல்பாகச் செய்கின்றன. அவை தனது பிறப்பு உறுப்பையோ அல்லது தன் இனத்தின் மற்றையவற்றின் பிறப்புறுப்பையோ நுகர்கின்றனசுவைக்கின்றன. நாய்ஆடு மாடு போன்றவற்றைக் கவனித்தால் இவ்வுண்மை புரியும். இது ஏன்?

எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை மூன்று: உயிர் வாழவும்வளரவும் தேவையான உணவுவசிக்க உறைவிடம்மற்றும் இனப்பெருக்கம். ஆனால் விலங்குகளைப் போல் மனிதன் சிறுநீரைப் பருகுவதில்லை. மனிதனின் உடலமைப்பு தன் சிறுநீரைத் தானே நேரே பருக ஏற்றதாக இல்லை. அவனது உள்ளுணர்வும் சிறுநீரைப் பருக உந்துவதில்லை. மேலும்சிறுநீரை ஒரு கழிவாக மனிதன் கருதுவதாலும்அதன் மேல் ஒரு அருவருப்பு உண்டாகிவிட்டது.

தன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில்சிறுநீரைப் பருகுவதற்கும்ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா

உடல்நிலை சரியில்லாதபோதோகாயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்கஅதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலிகாயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோய் நொடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.

மற்ற விலங்குகளோடு சண்டையிடும் போது ஏற்பட்ட காயங்களையும்மற்ற உபாதைகளையும் தன் சிறுநீர் மூலம் சிற்றுயிர்கள் போக்கிக் கொள்வது அவற்றின் உள்ளுணர்வால். தன் குட்டிக்குத் தான் எப்படி உள்ளுணர்வால் பாலூட்டுகிறதோ அதைப் போல். எனவே மனிதனுக்கும் காயங்களையோஉடல் உபாதைகளையோமற்ற நோய் நொடிகளையோ போக்கிக் கொள்ள ஒரு வழி இருக்கவேண்டும்.

இக்கருத்தை மறுப்பவர்கள் கூறுவதுசிற்றுயிர்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பியுள்ளனஎனவே அவற்றிற்கு இது பொருந்தலாம். ஆனால் ஆறறிவு படைத்த, முன்னேற்றமடைந்த மனிதனுக்கு இது பொருந்தாது.

எவ்வுயிராயினும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் அடிப்படையான தேவை. மனிதனைத் தவிர அனைத்துயிர்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவும்நோய் வாய்ப்படும்போது குணப்படுத்திக் கொள்ளவும் தாமே வழி தேடிக் கொள்கின்றன. மனிதர்கள் நோயுறும்போது மற்றவரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் நோயை தானே போக்கிக் கொள்ள முடியும்.

உள்ளுணர்வால் உந்தப்பட்டுகன்றுக்குட்டி தாயின் மாடு தேடி பால் குடிக்கிறது. ஆனால்மனித இனத்தில் தாய்தான் சேயின் குறிப்பறிந்து பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு அழ மட்டுமே தெரியும். தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும் உள்ளுணர்வு குழந்தையிடம் இல்லை. தாயுமே உள்ளுணர்வால் குழந்தைக்கு அமுதூட்டுவதில்லை. பட்டறிவினாலும்கற்றறிவினாலும் மட்டுமே அவள் செயல்படுகிறாள்.அதேபோல்நோய்நோடிக்கு மருந்து காண உள்ளுணர்வு உதவுவதில்லை.

விலங்குகள் (யானையைத் தவிர) நீரை நேரடியாகவே பருகுகின்றன. மனிதர்கள் நீர் பருக ஏதாவது ஒரு பாத்திரத்தை – டம்ளரை – பயன்படுத்துகின்றனர். ஆனால்தேவை வைக்கும்போது அவர்கள் தங்கள் கையினால் நீரையள்ளிப் பருக முடியும். சாதாரண நிலையில்கைகள் பிறப்புறுப்பின் அருகே நிலை பெறுகின்றன. எனவே சிறுநீரை கையில் எடுத்துப் பருகுவது என்பது எளிமையானது. அடிக்கடி நோய்நொடிக்கு ஆளாகும் விலங்குகளுக்கு அடிக்கடி சிறுநீர் பருகும் தேவை இருப்பதால் இவ்வாறு அமைந்திருக்கலாம்.

சிறுநீர் கழிவல்ல!
சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானாஎந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.

அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோஅது போல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ அதுபோல் சிறுநீரும்.

பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!
தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுழற்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்கு முன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.

சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால்அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை (Auto Urine Therapy) எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4). தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.” மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால்நமது சுற்றுச் சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில்நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.

மேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும்நமது எச்சிலிலும்நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன. 

ஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம்ஹோமியோபதி மற்றும் யூனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன. 

அதேபோல் இயற்கை மருத்துவம்அக்குப்ரஷர்அக்குப்பஞ்சர்காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும்அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.

ஆதாரம்: பரமரகசியம் வலைப்பூ: 
https://paramarakasiyam.wordpress.com/மூலிகைகள்/


இரண்டாவது பகுதியில் இது தொடர்பான இன்னொரு செய்தியைப் பார்க்கலாம்)

(தொடரும்)