வியாழன், 20 ஜனவரி, 2011

Learn Yoga and Earn from Home. 

யோகா கற்றுக்கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுக் கொள்வது மட்டுமின்றி, பிறருக்கும் கற்றுக் கொடுப்பது மூலம் உங்களுக்கென ஒரு கவுரவமான முழு நேர மற்றும் பகுதி நேர வருமான வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.

திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு அறக்கட்டளை நிறுவனம் மூலமாக தமிழக அரசு விளையாட்டுத் துறையின் தமிழ் நாடு உடற்கல்வி மற்றும்  விளையாட்டு பல்கலைக் கழகம் (Tamil Nadu Physical Education & Sports University of Tamil Nadu Government) நடத்தும் பகுதி நேர Certificate Course in Yoga, Diploma in Yoga & PG Diploma in Yoga படிப்புகளை முடித்து சுயமாக உங்களுக்கென ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் எவரும் இந்த வகுப்புகளில் சேரலாம். சர்டிபிகேட் இன் யோகா படிக்க குறைந்த பட்சக் கல்வித் தகுதியான எட்டாம் வகுப்பு போதுமானது. ப்ளஸ் டூ படித்தவர்கள் டிப்ளமா வகுப்பில் சேரலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமாவில் இணையலாம். சனி, ஞாயிறுகளில் நேரடிப் பயிற்சி பெற்று மற்ற நேரங்களில் பாடங்களை வீட்டில் இருந்தே படித்து தேர்வு எழுதி ஆறு மாதங்களுக்குள் உங்கள் படிப்புகளை முடித்து பின்னர் பட்டயங்களை பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக் கழக மான்யக் குழுவினரால் (யு.ஜி.சி) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் இந்த பல்கலைக் கழகம் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு கல்வி ஆணையத்தினரால் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு பல பயனாளிகளை உருவாக்கி உள்ளது. 

இந்தியாவின் மிகச் சிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவரான திரு.Dr.Yogi T.A.கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து நேரடியாக யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

திருமூலர் மற்றும் பதஞ்சலி முனிவரின் பாரம்பரிய யோக முறைகளின் விற்பன்னராக திகழும் இவர் தொடர்ந்து பல புதிய யோகாசனங்களை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். அறுபத்து ஐந்து வயதிலும் இளைஞரைப் போல சுழன்று பணியாற்றும் இவர் இந்த வயதில் அட்வான்ஸ் ஆசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் திறமை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் இயற்கை உணவை மட்டுமே உட்கொள்பவரான இவர் சமைத்த உணவை உண்ணுவதில்லை.  யோகா மற்றும் இயற்கை உணவு முறைகளைப் பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

தற்சமயம் ஐஏஎஸ் ஐபிஎஸ்களுக்கு யோகா பயிற்சியாளராகவும், இந்திய அரசின் மொரார்ஜி தேசாய் தேசீய யோகா கல்விக்கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும், தமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் யோகா கல்வி ஒருங்கிணைப்பாளராகவும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைகழம், சென்னைப் பல்கலைக் கழகங்களுக்கு சிறப்பு யோகா மாஸ்டராகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் மற்றும் மனித நேய அறக்கட்டளை போன்றவற்றுக்கான யோகா பயிற்சியாளர் ஆக இருக்கிறார்.இவர் வெளிநாடுகளுக்கு சென்று யோகா கற்பித்து வருகிறார்.

சொந்தமாக நிறுவி நடத்தி வரும் திருமூலர் யோகா, இயற்கை உணவு அறக்கட்டளை மூலமாக நேரடி வகுப்புகளை எடுப்பதுடன், முப்பது முறை மாநில அளவிலான யோக போட்டிகளை நடத்தி பல சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பி.ஜி.டிப்ளமா பெற்றவர்கள் இந்த ஆண்டு எம்.எஸ்சி (யோகா) வகுப்பில் (லேட்ரல் என்ட்ரி) இரண்டாம் ஆண்டு படிப்பில் இணைந்து பலர் இவரிடம் படித்து வருகிறார்கள். எம்.எஸ்சி தேர்ச்சி பெற்ற இவர்கள் அடுத்த ஆண்டு Ph.D வகுப்பில் சேர்ந்து ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட முறையில் இவர் மூலமாக எம்.எஸ்சி படித்து வரும் பலரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் மேற்கண்ட படிப்புகளுக்கான சிறப்பு அட்மிஷனுக்கு மிகக் குறைந்த நேரமே இருப்பதினால் மேற்கண்ட படிப்புகளில் இணைய விரும்புவோர் 25-01-2011-க்குள் யோகா குரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்களை 9444837114 என்ற செல்பேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

புதன், 19 ஜனவரி, 2011

ஆரோக்கிய ஆத்திச்சூடி...
திக உணவு ஆபத்து உயிர்க்கு
ற்றாப் பசிக்கு அரைவயிறே புசி..
னிப்பை ஒதுக்கி இன்னலைக் குறை
டில்லா வாழ்விற்கு இயற்கை நலவழி நோக்கு
டலைக் குறைத்து உடல் நலம் பெருக்கு.
ண் பெருக்கம் வாழ்நாளை குறைக்கும்
ளிமை உணவு இனிமை உயிர்க்கு
றி விட்ட எடையை இறக்குவது கடினம்
ம்புலன் கவனம் ஆற்றலை பெருக்கும்
ருபோது உண்பான் யோகி; மூன்றுபோது உண்பான் ரோகி
டி உழைக்க உணவு செரிக்கும்; உடல் நலன் செழிக்கும்
வைக்கு மட்டுமல்ல
நெல்லிக்கனி
தே அனைவருக்குமாம் கல்பம்.
4. இயற்கை நலவாழ்வியல் புத்தகம் அறிமுகம்.

நூலின் பெயர்: இயற்கை மருத்துவம்.
நூல் ஆசிரியர்: மகரிஷி க.அருணாசலம்.
நூல் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை-625020

முன்னூற்று ஐம்பத்தோரு பக்கங்களில் இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களையும், இயற்கை நலவாழ்வியல் முறைகளையும் இருபத்துமூன்று அத்தியாயங்களில் அழகுற விளக்கும் அருமையான நூல்.

இப்புத்தகத்தின் சில பகுதிகளை ஏற்கனவே ''வாழி நலம் சூழ'' வலைப்பூவில் ''இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்)'' மகரிஷி க.அருணாசலம்'' என்னும் தலைப்பில் தொடராக வெளியிட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவுகளை http://frutarians.blogspot.com/2010/03/1.html என்ற இணைப்பில் சென்று காணலாம். இந்த பதிவைப் படித்து விட்டு தொடர்பதிவுகளை வலைப்பூவிலேயே காணலாம்.

இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

அஷ்வின்ஜி

திங்கள், 17 ஜனவரி, 2011

3. இயற்கை நலவாழ்வியல் 
பற்றிய புத்தகம் அறிமுகம்.

இந்த பதிவில் நாம் காணப் போகும் புத்தகம் 
''நோய்கள் நீங்க எனிமா'' 
என்னும் மிகவும் பயனுள்ள ஒரு நூல்.

இந்த நூலை எழுதியவர் திரு. Dr. R. சுப்பிரமணியன், இயற்கை மருத்துவர், மருதமலை, கோவை. இவர் 1978 முதல் இயற்கை நலவாழ்வியலுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தற்போது பவித்ரா இயற்கை மருத்துவமனை என்ற ஒரு நிறுவனத்தை மருதமலையில் வெற்றிகரமாக நடத்திவருகிறார். நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை பெருமளவில் குறைத்து, பலருக்கு முழு நிவாரணமும் தரவல்ல இயற்கை மருத்துவ முறைகளை இந்த மருத்துவமனை பல நோயாளிகளுக்கு தந்துள்ளது.

"ஆஸ்பத்திரிகளில் கொடுக்கும் எனிமாவுக்கும்,இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெற்றுள்ள எனிமா முறைக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உண்டு. இது முற்றிலும் அகிம்சை முறையில் அமைந்த சிகிச்சை வழி. இதனைப் பல வழிகளில் அன்பர் ஆர். சுப்பிரமணியம் தமது பட்டறிவின் மூலம் தெள்ளத் தெளிய விளக்கியுள்ளார். (இந்த கையேடு) இயற்கை நலவாழ்வியல் வாழ்வு வாழ விரும்பும் அன்பர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய ஒன்று. செயற்கை வழி சென்று தனது உடல் நலனைக் கெடுத்துக் கொண்டவர்கள் இயற்கைவழி திரும்ப விரும்பும் போது இது (அஹிம்சை எனிமா முறை) துணை நிற்கும் என்பது உறுதி" என்று இந்நூலின் அணிந்துரையில் மகரிஷி டாக்டர் க.அருணாசலம், (முன்னாள் எம்.எல்.சி, மதுரையில் உள்ள அகில இந்திய காந்தி நினைவு நிதி நிறுவனம் மற்றும் தமிழ் நாடு இயற்கை மருத்துவ சங்கம் தலைவர்) கூறுகிறார். 

பல நோய்களையும் நமது உடல்தான் தீர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் முடிந்த முடிவு. அவ்வாறு உடல் செயல்படுவதற்கு நம் குடலைச் சுத்தம் செய்து கொள்வது இன்றியமையாதது என்பதை உணர்ந்து, மலிவான விலையில் அதற்கான கருவியை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு "எனிமா கேன்" ஒன்றை உருவாக்கிப் பலருக்கும் தந்து உதவி வருகிறார் டாக்டர் திரு. ஆர்.சுப்பிரமணியன்.

"குடலைக் கழுவி உடலை வளர்" என்னும் முதுமொழியை முழு விளக்கத்துடன், அறிவியல் காரணங்களுடனும், படங்களுடனும், நோயாளிகள் வாயினாலயே அவர்கள் எவ்வாறு இந்த எளிமையான முறையை பயன்படுத்தி முழு நலம் பெற்றார்கள் என்பதனையும் இப்புத்தகம் அருமையாக விளக்குகிறது.

எந்த நோயானாலும் உணவை நிறுத்தி எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு காலியானாலே நோயின் தீவிரம் குறையும். சுத்தமான குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எனிமா கேனில் நிரப்பி செருகி (nozzle) மூலம் ஆசனவாயில் நுழைத்து சிறிது முன் சாய்ந்தோ அல்லது குனிந்தோ நிற்பதின் மூலமாகவோ அல்லது பக்கவாட்டில் படுத்திருப்பதின் மூலமாகவோ, கேனில் நிரம்பிய நீர் மலக்குடலில் செல்லும். சிறிது நேரம் நீரை மலக்குடலுக்குள் நிறுத்தி (ஓரிரு நிமிடங்கள் கழித்து) பின்னர் வெளியேற்றினால் மலம் நீருடன் சேர்ந்து பீய்ச்சிக் கொண்டு வெளி வரும். வயிற்றில் கிருமிகள் இருப்பின், வேப்பிலையை வேகவைத்து ஆறவைத்த நீர் (அ) ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் நீர் கலந்தும் எனிமா கேனின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட  முறையில் உள்ளே ஏற்றி வெளியேற்றலாம். 

இந்த முறையால் பயன் பெற்ற பல ஆயிரக்கணக்கான அன்பர்களில் ஒருவரான திரு வி.தாண்டவராயர் (அட்வகேட், திருவண்ணாமலை), ''கடந்த பதின்மூன்று வருடங்களாக இம்முறையை உபயோகித்து என் எண்பத்தாறாவது வயதில் நோய் நொடியின்றி சுகமாக வாழ்ந்து வருகிறேன். மலச்சிக்கல், வயிற்றுச் சூடு, வயிற்று வலி, பேதிகள், உணவு சீரணம் ஆகாமை ஆகியவற்றிற்கு எனிமாவே கைகண்ட மருந்து"என்கிறார். கடுமையான வயிற்றுப் போக்கு இருக்கும் போது எனிமா கொடுப்பதின் மூலம், பல தடவை பேதியாவதை தடுப்பதோடு, உடலின் சுரப்பு நீர்கள் வெளியேறுவதையும் தடுக்க இயலும் என்கிறார் இந்த அட்வகேட்.

எனிமா சிகிச்சை என்பது ரிஷிகளால் பண்டைய காலம் தொட்டே கண்டுபிடிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். அஷ்டாங்க யோகத்தில், க்ரியாக்கள் என்று சொல்வார்கள். பலவகையில் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை ஷத்க்ரியாக்கள் என்று கூறுவார்கள். அதில் ஒன்று பஸ்திக்ரியா என்பது பஸ்திக்ரியாவின் நவீனப்படுத்தப்பட்ட முறையே எனிமா கேன் ஆகும்.

வெவ்வேறு மருத்துவ நிபுணர்களால் இம்முறை உலகெங்கிலும் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், 1913-ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆச்சார்யா லட்சுமண சர்மா அவர்களால் அஹிம்சா எனிமா என்ற பெயரில் எளிய கருவியாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த எனிமா கருவி. இயற்கை மருத்துவ ஆராய்ச்சியாளராகிய லட்சுமண சர்மா அவர்கள் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பரவச் செய்தவர். இயற்கை மருத்துவம் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் தனது 86 (1965) வயதிலும் இந்தத் துறையில் தளராது உழைத்தவர்.

நோய்கள் நீங்க எனிமா என்னும் டாக்டர் ஆர்.சுப்பிரமணியனின் புத்தகத்தில் கீழ்க்கண்ட தலைப்புகளில் அஹிம்சா எனிமா முறை விளக்கப்படுகிறது.
இயற்கையின் இனிமை.
(மலச்)சிக்கலுக்குச் சில காரணங்கள்.
மலம் செய்யும் மாற்றங்கள்.
எனிமா விளக்கம்.
ஒரே உடனடி நிவாரணி.
எனிமா எடுத்துக் கொள்ளும் முறைகள்.
கிடைக்கும் பலன்கள்.
உடற்கூறு இயலும், எனிமாவும்.
எனிமா வகைகள்.
Vaginal douche.
எனிமா தீர்க்கும் நோய்கள். 
அனுபவங்கள் ஆயிரம் ஆயிரம்.
மேலும் கண்கழுவுதல், மூக்குக் கழுவ்தல் பற்றிய விவரங்களையும், அருகம்புல்லின் மகிமையைப் பற்றியும் இந்நூலின் பிற்சேர்க்கையாக மருத்துவர் ஆர்.சுப்பிரமணியன் அழகாகத் தொகுத்துள்ளார்.

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் நாடாமல் இருக்க வேண்டுவோர் பயன்படுத்தவேண்டிய முறைகளைப் பற்றிய இந்த நூல் இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான நல்வாழ்க்கைத் துணைவன்  என்பதில் சற்றும் ஐயமில்லை.

வாழி நலம் சூழ....

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தண்ணீரே சிறந்த மருந்து....

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? 

அது தான் தண்ணீர். 

செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெரும்பாலோர், தனியாரிடம் வாங்கி சாப்பிடும் `கேன் வாட்டர்’தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மெட்ரோ தண்ணீரை குடித்தாலே போதும், முக்கியமாக காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது. உணவு சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது.

தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். 

உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. 

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம்.

நன்றி: tamilcnn.com