செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010


மாதுளம் பழ ஜூஸ் ஆக்ஸிஜனேற்றத்தை சீராக்கும்.

பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.

எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.  

அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.  

இதனால் மாதுளம் பழச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.   

கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது. 

உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. 

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது. 

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது. 

மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. 

தவிர, குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.

நன்றி: வெப்துனியா தமிழ்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஓண திருநாள் வாழ்த்துகள்..



Glitter Graphics,Glitters,Glitter,Malayalam Glitters
"பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து
 
மும்பை : "பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால், சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். நேர விரயத்தை தவிர்ப்பதை தவிர, இந்த உணவுப் பண்டங்களால் வேறு பயன் இல்லை. மாறாக, உடலுக்கு தீங்கையே அவை விளைவிக்கின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, மும்பை மருத்துவ அறிவியல் மைய பேராசிரியர் டாக்டர் கிருபாளினி, மும்பை, ஏசியன் இருதய மருத்துவமனையின் சிறுநீரகத் துறை மருத்துவர் உமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கூறியதாவது:பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள், கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு, ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்தியாவில்,  சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளன.நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்,  தற்போது பாக்கெட்டுக்களில்  அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பண்டங்களில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை.

மாறாக, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய ரசாயனங்கள் தான் உள்ளன. மேலும், சிறுநீரகம் தொடர்பாக சிறுசிறு பாதிப்பு இருப்பவர்களுக்கும், இந்த உணவுப் பண்டங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பாக்கெட் உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

(நன்றி:தினமலர்-ஆகஸ்ட் 22,2010)