வியாழன், 12 மே, 2011

உப்பில்லா உணவு.

இசைஞானியின் பத்தியம்!
 [ Wednesday, 11-05-2011 19:21 ]
 
ilaiyaraja-11-05-11













இனிப்பை தவிர்ப்பார்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள். ஆனால் கடந்த இரண்டல்ல, ஐந்தல்ல, இருபதைந்து ஆண்டுகளாக உப்பை தன் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வருகிறாராம் இசைஞானி இளையராஜா. இத்தனைக்கும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. கோபம், குரோதம், காமம், இத்யாதி, இத்யாதிகளை தவிர்ப்பதற்காகவே இப்படி பத்திய சாப்பாட்டினை பல வருடங்களாக ஃபாலோ செய்து வருகிறாராம் இளையராஜா! இளையராஜாவின் இந்த உப்பில்லா உணவு கட்டுப்பாடு கடந்த பலவருடங்களாக அவருடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சர்யத்திலும் பெரிய அதிசயம்!

Courtesy: http://tamilstar.net/news-id-ilaiyaraja-11-05-11615.htm

திங்கள், 9 மே, 2011

7. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.

கனி இருப்ப...
(பகுதி ஏழு தொடர்கிறது)

பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். கடந்த மூன்றாம் தேதி மாலை மூன்றரை மணி முதல் எட்டாம் தேதி பகல் ஒன்றே கால் மணி வரை பெருகமணி (திருச்சி)யில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றேன். அந்த அனுபவங்களை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  நான் எழுதி கொண்டிருக்கும் கனி இருப்ப.... தொடரிலேயே இந்த அனுபவப் பதிவுகள் தொடரும்.

பெருகமணி முகாம் பற்றிய ஒரு முன்னோட்டம்.
காலை நான்கரை மணிக்கு துவங்கி இரவு பத்தரை வரை (மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு தவிர்த்து )நீடித்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தன. சுமார் 75 பேர்கள் முகாமில் கலந்து கொண்டனர். எண்பத்தைந்து வயது பெண்மணியில் இருந்து துவங்கி ஆறு வயது சிறுமிகள் உட்பட பலர் ஒரு குடும்பமாக சங்கமித்து இருந்தனர். 

வாழி நலம் சூழ வலைப்பூவில் நான் தந்திருந்த செய்தியைப் பார்த்துவிட்டு பட்டுக்கோட்டை டி.மணிகண்டன் அவரது நண்பர்களுடன் வந்து கலந்து கொண்டு மகிழ்வோடு பயன் பெற்றார்.

சென்னையில் இருந்து சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர். அதில் பத்து பேர் யோகி தி.ஆ.கிருஷ்ணன் அவர்களின் திருமூலர் யோகா டிரஸ்டில் யோகா பயிலும் மாணவியர்கள். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பலகலைக் கழகத்தில் Diploma in Yoga,  PG Diploma in Yoga, பயிலுபவர்கள். இவர்களோடு கூட M.Sc(Yoga) பயிலும் நான்கு மாணவர்கள் (என்னையும் சேர்த்து) கலந்து கொண்டனர்.

ஐந்து நாள் முகாமில் அனைவரும் சேர்ந்து சில ஆயிரம் புகைப்படங்கள், மற்றும் காணொளிகள் எடுத்தனர். எனது காமிரா மூலம் (காமிரா இரவல் தந்த நண்பர் ஜி.கே.சுவாமிக்கு நன்றி) நான் சுமார் 350 படங்களை எடுத்தேன்.

அவற்றில் இருந்து சில புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு.


பெருகமணி முகாம் - புகைப்படத் தொகுப்பு.

சங்கமம் நுழை வாயிலில்..

குடில் (நான்கைந்து பேர்கள் தங்கலாம்) 

 அழகிய சோலை 

 மற்றும் ஒரு குடில்...

 காணும் இடங்களில் எல்லாம் பசுமை.

 வாழை மரங்கள்..

 வாழை மரங்களின் பின்னணியில் கப்புசின் இல்லம்.

 கோடை வெப்பம் தெரியாத அளவுக்கு நிழல் தரும் மரங்கள்.

 மூங்கில் காடுகள்..

காய்கள் காய்த்து குலுங்கும் மாமரங்கள் 

 பசுமை. பசுமை. பசுமை.

 கண்ணுக்கு விருந்து..

 தென்னந் தோப்பு..

 நுழையு முன்னர் உள்ள பாலம்.

 குளிர்ந்த நீரோடை..

 காவிரி ஆற்றில் இருந்து வரும் நீரோடை..

 மூன்று வேளையும் இயற்கை உணவு..

 நாக்கில் சுவை நீர் ஊற வைக்கும் உணவுகள்..

 ஆஹா. தினம் தோறும எத்தனை வகைகள் ?

 பரிமாறத் தயாராக..

 மதிய உணவு வகைகள்.

 உணவு தயாரிக்கும் குழுவினர்...

 முகாமின் பதிவு பகுதி.

எங்கள் யோகா ஆசான் யோகி டாக்டர் தி.ஆ. கிருஷ்ணன் அவர்கள்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய மிகவும் அரிய செய்திகளை ஒரே இடத்தில் நாங்கள் பெற்றிட உதவியாக மின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன் (சென்னை) அவர்கள் முழு நிகழ்ச்சியையும் நெறிப்படுத்தினார். தமிழகத்தின் சிறந்த இயற்கை நலவாழ்வியல் அறிஞர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழே சந்திக்க நல்வாய்ப்பாக இந்த முகாம் அமைந்தது. 

சங்கமம் இயற்கை நலவாழ்வியல் மையத்தின் டைரக்டர், அருட்தந்தை திரு.ஜேகப் அவர்களது ஆர்வமான ஒத்துழைப்பும் அவரது இல்லத்தின் அனைத்துப் பணியாளர்களும் மிக அன்புடன் செய்த சேவைகளும் நெஞ்சை நிறைக்கின்றன.

முகாம் நிகழ்ச்சிகளைப் பற்றிய அனைத்து செய்திகளையும் வரும் தொடர் பதிவுகளில் விவரமாக பார்க்கலாம். 

நன்றி.

(தொடரும்)

வாழி நலம் சூழ...

அஷ்வின்ஜி
@A.T.ஹரிஹரன், MSc-Yoga Final.