புதன், 9 ஜூன், 2010

பகுதி 17 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.

இயற்கை நியதிகள்

உலகத்தில் எல்லாம் ஒருநியதியின் கீழ் நடைபெறுகின்றன. வானத்திலுள்ள உடுக்கள் ஓடி ஆடுவது கூட ஒரு நியதியோடுதான். சூரிய சந்திரர்கள் நியதியோடு இயங்குவது நாம் அறிந்ததே. நியதி என்றால் கணக்கிற்கு உட்பட்டது. அளவிட முடியும் எண்ணால் குறிப்பிடலாம். ஒழுங்குமுறை என்பது இதனின் ஒருவகையே கணக்கில் கூடுதலோ, குறைதலோ இருக்கும் போது சமநிலைச் சீரழிவு ஏற்படுகிறது. அமைதி குறையும். மனிதர்கள் பெரும்பாலும் விரும்புவது அமைதியையே. இதனை நிலை நாட்ட விரும்புபவர்கள் விதிமுறைகளை அறிந்து சமநிலைக்குக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். விதிமுறைகளில் ஒன்று, எல்லாம் ஏழு, ஏழாகத் தொகை நிலையில் கூடி நிற்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. படைப்பு ஆறு நாட்களில் நடந்தது ஏழாம் நாள் ஓய்வு பெற்று மறுபடியும் படைப்புக்குப் பரமன் தயாரானார் என்பது ஒரு சாரார் கொள்கை. சந்திர கலைகளும் இந்த அளவிலேயே நடைபெறுகின்றன. திங்களை முதல் நாளாகக் கொண்டு கணக்கிடுகிறார்கள். சூரிய ஆதிக்கத்தில் நம்பிக்கையுடையவர்கள் ஞாயிற்றுக்கிழமையை முதல் நாளாகக் கொண்ட கணக்கிடுகிறார்கள். எப்படியும் ஏழுக்குள் ஒன்று பரிபூரண ஓய்வுக்காக என்பது கோட்பாடு. உழைப்பும், ஓய்வும் ஆறும் ஒன்றுமாகக் கூட்டளவில் இருந்தால் இது ஆரோக்கியநிலை: சமநிலை இதுவே அழியாத ஆனந்தத்தைக் கண்டு கொள்ள இயலாது

இந்த ஏழின் எழில் நிறைந்த சட்டத்தை அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக விளங்கிக் கொள்ள முயலுவோம்.

(இயற்கை இன்னும் வளரும்)