செவ்வாய், 14 ஜூன், 2011

உணவு பசிக்கா? ருசிக்கா?






































































நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும். ?

காஞ்சி பரமாச்சாரியார் அருளியவை.

  • சாப்பாடு நம் உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக இருப்பதால் நாம் திட்டமிட்டு அன்றாடச் சாப்பாட்டை கவனமாக அமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். 
  • மரக்கறி (சைவ) உணவின் சிறப்பு என்னவென்றால் அது நமக்கு சாந்த குணத்தை தருகிறது.
  • மரக்கறி (சைவ) உணவிலும் கூட காரம், புளிப்பு முதலியன ராட்சஷ உணர்வைத் தூண்டிவிடக் கூடியவை. பழைய ஆறின உணவு வகைகள் தாம்ச (சோம்பல்) குணத்தை வளர்ப்பவை. பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போன்ற உணவுகள் சத்வ குணத்துக்குவிரோதமானவை. இவற்றை தவிர்ப்பது நல்லது.
  • ருசிக்காக சாப்பிடும்போது தான் அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டி வருகிறது. பசி என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி உண்ணத் தொடங்கினால் சாப்பிடும் அளவில் நிதானத்தைக் கடைபிடிக்கலாம். அஜீரணம், மனதில் அசுத்தம் போன்றவற்றை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம். 
  • அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன.

நன்றி தினமலர்: மார்ச் 27, 2009

திங்கள், 13 ஜூன், 2011

கனி இருப்ப.. தொடர் கட்டுரை பற்றிய ஓர் முக்கிய அறிவிப்பு..

அன்பர்களே.

வணக்கம். 

நான் நலமே. 

நீங்கள் அனைவரும் நலம் தானே?

எனது யோகா முதுகலை அறிவியல் இறுதித் தேர்வு மற்றும் அது தொடர்பான ப்ராஜெக்ட் அறிக்கைகள், தீசிஸ் போன்றவற்றை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதினால் ''கனி இருப்ப.." தொடர் கட்டுரைகளை தயாரித்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 

தங்கள் ஆர்வத்துக்கு தடையாக இருப்பதற்கு மன்னியுங்கள். ஜூன் மாத இறுதி வரை நான் உங்களிடையே பங்கெடுத்துக் கொள்ள இயலாது சூழ்நிலையில் இருக்கிறேன். ஜூலை முதல் வாரம் வரை காத்திருங்கள். 
இயற்கை நலவாழ்வியல் தொடர்பான மிகச் சிறப்பான செய்திகளை உங்களை இடையே பகிர்ந்து கொள்வதற்காக வைத்திருக்கிறேன். தங்களின் பொறுமைக்கும், ஆர்வத்துக்கும், தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் என் இதய நன்றி.

வாழி நலம் சூழ..

அன்புடன்,
அஷ்வின்ஜி.