வெள்ளி, 28 மார்ச், 2014

யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம்.

இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வு, யோகா மற்றும் பிராணாயாம, முத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

28.04.2014 to 04.05.2014 ஆகிய ஏழு நாட்களில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும், முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேற, பயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 28.04.2014 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 04.05.2014 (பிற்பகல் இரண்டு மணி வரை)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
ஆண்கள்: ரூ.2400 /-
பெண்கள் ரூ.2200/-
மாணவர்கள் ரூ.2000/-

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் ஆடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

கடந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் முகாம் இயக்குனரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலாளர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்,
தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு.

முன்பதிவுக்காக மட்டும் முகாம் இயக்குனரை அவரது இல்லத் தொலைபேசி 0435-2472816 எனும் எண்ணில் காலை எட்டு மணிமுதல் ஒன்பது வரையிலும், இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையில் அழைக்கவும்.

முகாம் பற்றிய மற்ற விவரங்களுக்கு திரு.அ.மெய்யப்பன், (சென்னை) அவர்களை 9444323730 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாழி நலம் சூழ...