ஞாயிறு, 7 டிசம்பர், 2014

யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம். 26.12.2014 to 29.12.2014

இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வுயோகா மற்றும் பிராணாயாமமுத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

26.12.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 29.12.2014 (திங்கட்கிழமை) வரை சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும்முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முகாமில் நான்கு நாட்கள் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேறபயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும்,  முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா, யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், பொறியாளர் மெய்யப்பன் ஐயா போன்ற மூத்த பயிற்சியாளர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மேலும் பல சிறப்புப் பயிற்சியாளர்களிடம் இருந்து  ஒரே குடையின் கீழ் யோக முறைகளைப் பற்றியும், இயற்கை வழியிலான நலவாழ்வியல் நுட்பங்களை  கேட்டறிய நல்வாய்ப்பு.  

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்,  நல்வாழ்வு நிலையம்,  தண்டரைப்பேட்டை,  மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 26.12.2014 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 29.12.2014 (பிற்பகல் நான்கு மணி வரை)

இடம்: குமரகுருபரர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
குறைந்த பட்சம் ரூ.1400/-

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் ஆடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

இந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

50 பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப் படுவார்கள். எனவே முன்பதிவினை முதலில் பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும்..

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் CAMP REGN என டைப் செய்து உங்கள் பெயர் முகவரியுடன் 9486768930 என்ற அலைபேசி எண்ணுக்கு உங்கள் பதிவுகளை SMS (குறுஞ்செய்தி) அனுப்பிட வேண்டுகிறோம்.

முக்கிய அறிவிப்பு:
இந்த செல்பேசி எண் குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்ய மட்டுமே. மற்ற விசாரணைகளுக்கு இந்த அலைபேசியை அழைக்க வேண்டாம்...

முகாம் நெறியாளர்: 
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)

இயற்கை நல ஆர்வலருக்கான சேவையில்..
வாழி நலம் சூழ...