புதன், 11 செப்டம்பர், 2013

உணவு உப்பு மயம் ; உலகம் துன்ப மயம் !

உப்பு தப்பு.

உணவு உப்பு மயம்: உப்பு ஒரு தப்பு தான்,சந்தேகமேயில்லை; ஆனால், நம் நாவும் உடலும் உப்புக்குப் பழக்கப்பட்டு விட்டனவே? என்ன செய்வது அறியாமையால் உப்பைத் தின்று சீரழிகிறது மனித இனம்.  இரும்பைக்கூட அரிக்கும்  இந்த இரசாயனம்,உடலையும் உள்ளத்தையும் பாடாய்ப்படுத்துகிறது.அதனால்,மனிதன் உலகத்தைப் பாடாய்ப்படுத்துகிறான்.

உலகம் துன்ப மயம்: உப்பு இல்லாவிடில் சமையல் இல்லை .  உப்பு இல்லையெனில் களைப்பு இல்லை:நோய் இல்லை:உப்பால் உடற்சூடு அதிகரிக்கும். இதயத் துடிப்பு , இரத்த அழுத்தம், மூச்சு எண்ணிக்கை அதிகமாகி பதட்டமும் படபடப்பும் உண்டாகும்.

இப்படி எல்லாக் கெடுதல்களையும் கொண்டு வந்து சேர்த்தது உப்பு: உப்புக்காகப் புளிப்பையும், புளிப்புக்காக காரத்தையும், .காரத்திற்காக எண்ணையையும் உணவில் சேர்க்க வேண்டியதாகிறது:    உப்பைத் தவிர்த்தால் இவற்றைச் சேர்த்து வேக வைக்காமல்  ,உணவை மட்டும் நேரடியாக  உண்டு நோயின்றி வாழலாம்.

ஒவ்வொரு மனிதனும் 1-கிராம் உப்புக்கு 72-கிராம் தண்ணீரை உடம்பில் தேக்கி வைத்துக் கொள்கிறான்;2.5 லி.தண்ணீரைத் திணித்துக் கொள்கிறோம்  என்பதே பொருந்தும்.இதனால், இதயம், நுரையீரல் சுருங்கி  விரிய சிரமத்துக்கு உள்ளாகிறது ;
நன்றி: கூகிள் படங்கள்.

தக்க உணவுக்கு உப்பு தேவையில்லை.
நம் உடலுக்குப் பொருந்திய, தக்க உணவு என்பது தேங்காயும் பழங்களுமே; இவற்றுக்கு உப்பு தேவையா என்ன? அனால், அவற்றை  விட்டு  அரிசி, கோதுமை,சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற  உலர்ந்த உணவுப்பண்டங்களை நேரடியாக உண்டு வாழும்போது  இரத்த ஓட்டம் தடைபடுகிறது; எனவே, இவையெல்லாம்  மனித உடலுக்குப் பொருத்தமற்ற உணவுப் பண்டங்களாகும். அடுப்பெரிக்க விறகு பயன்படுவதைப் போல, உடலில் அதிக இரத்தத்தை  உண்டாக்கவும் ,அதிக தண்ணீரைத்  தேக்கவும் உப்பு உதவுகிறது. தவறான உணவுப்பண்டங்களை உண்டு வாழ உப்பு துணை போகிறது; உப்பு, மனிதனுக்கு, இந்த ஒரே ஒரு உதவியைச் செய்து  விட்டு  மற்றெல்லாத் துன்பங்களையும் கொண்டு வருகிறது.  
நன்றி: கூகிள் படங்கள்.

உப்பை விட்டால் ஏற்படும் நன்மைகள்  
உப்பை விட்டு, இயற்கை உணவுகளான தேங்காய், பழங்களை உண்டு வந்தால்  யோகாசனம்-பிராணாயாமம்,தியானம் ஆகியவற்றைச் செய்யாமலேயே  அதன் பயன்களை  அனுபவிக்க முடியும்.

ஆண்  பெண் வேறுபாடு இருக்காது; காமவெறி  இல்லை; பெண்களுக்கு மாதவிடாய் நின்று வருட விடாயாக  நீளும். 

விவசாயம்  செய்யத் தேவையிருக்காது; கனி தருமரங்களும், செடிகொடிகளுமே  தானாக விளைவதே போதுமானதாக இருக்கும். உப்பை விட்டால் 20மணி நேரம் களைப்பே இல்லாமல் உழைக்க முடியும்;  4மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கும். மூச்சின் எண்ணிக்கை நிமிடத்திற்கு  6 முதல் 8க்குள் அமையும்; நாடித்துடிப்பு சீராகும். இரத்தக்கொதிப்பு ஏற்படாது.

முடிவுரை: உப்பு உடலை உப்பை வைக்கும் உப்பினால் நரையும் புளியினால் திரையும் உண்டாகும்.எனவே,உப்பை விட்டு விடுதலை பெறுவோம்.விழித்துக் கொள்வோம்;உடல் நலம் பெறுவோம்.

(நெய்வேலி இயற்கை உணவாளர் திரு. சண்முகம்அவர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து )

நன்றியுடன் பெறப்பட்டது.

தொகுப்பு
மா.உலகநாதன், 
முனைவர் பட்ட ஆய்வாளர் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) ,
திருநீலக்குடி.
அலைப்பேசி:9442902334

திங்கள், 9 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.2013

வரம் தரும் தும்பிக்கை

வளம் தரும் நம்பிக்கை.


வாழி நலம் சூழ 
இறையருள் நாடுகிறேன்.

அஷ்வின்ஜி@ஹரிஹரன்.
சென்னை.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கொழுப்பைக் குறைத்தால், இதய வலியைத் தவிர்க்கலாம்.

கொழுப்பைக் குறைத்தால், 
இதய வலியைத் தவிர்க்கலாம்.

சொல்கிறார் பிரபல இதய நோய் மருத்துவர் பிமல் சாஜர்.

(இணைப்பினைச் சொடுக்குக)


இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.

இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், பிரபல இதய நோய் மருத்துவர் பிமல் சாஜர்  அதற்கு என்ன காரணம் என்றும், இதய நோய் வராமல் தடுப்பது எப்படி என்றும் அவர் விளக்குகிறார். 

அது தொடர்பான கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்:

*நம் உடலை, எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. இயற்கையின் அற்புதப் படைப்பு அது. கம்ப்யூட்டர், பிரிஜ், "டிவி' போன்றவற்றை, மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், செடி, பூ, காய், கனி ஆகியவற்றை, மனிதனால் உருவாக்க முடியாது; அவை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை. கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டாலோ, அது உடைந்து விட்டாலோ, நம்மால் சரி செய்ய முடியும். 

ஆனால், ஒரு பழம், மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பின், அதை மீண்டும், மரத்தோடு சேர்த்து வைக்க முடியுமா? முடியாது. இயற்கையைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல; அது, கேட்டை விளைவிக்கும். அது போல், கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதை தொந்தரவு செய்வது நல்லதல்ல. இயற்கையாக உருவான உபாதை, இயற்கையாகவே சரியாக அனுமதிக்க வேண்டும்.

* உடலை ஊடுருவிப் பார்க்கும் சிகிச்சை முறையை விட, உபாதைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதை சரி செய்வதே சிறந்தது. ஒரு பிரச்னை உருவானால், அதை இடைமறித்துச் செல்வது தவறு. பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து, காரணத்தைச் சரி செய்ய வேண்டும். மனிதன் கண்டுபிடித்த, கருவிகள் செய்வதை விட, நம் உடல், தானாகவே, தன் பிரச்னைகளைச் சரி செய்து கொள்ளும். ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் காரின் பெயின்டை சுரண்டுங்கள்; உங்கள் உடலையும் கீறிக் கொள்ளுங்கள். 

பென்ஸ் கார் தானாக தன் கீறலை சரி செய்து கொள்ளாது; ஆனால், உடல் செய்து கொள்ளும். எனவே, இதயத்தில் அடைப்பு இருந்தால், அதை இயற்கை முறையில் நீக்க வேண்டுமே தவிர, உடலில் அறுத்து சிகிச்சை மேற்கொள்வது நல்லதல்ல.

* காரணம் அறிந்து கொண்டால் நோயை தவிர்க்கலாம். இதய நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின், அது குறித்து பயமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. இதற்காகச் செய்யப்படும் ஆஞ்சியோபிளாஸ்டியோ, பைபாஸ் சிகிச்சையோ, இந்த பயத்தை முதலீட்டாகக் கொண்டே செய்யப்படுபவை. இதய அடைப்பு என்றால் என்ன, இது ஏன் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை, அறிந்து கொண்டால், நோயைத் தவிர்த்து விடலாம். 

இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.


* இதய நோய் என்றால் என்ன?
இதய தசைக்கு, ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் கொழுப்பு படிந்து, ரத்தம் செல்வது தாமதமானாலோ, முற்றிலும் தடைபட்டாலோ, அடைபட்ட இடத்தைத் தாண்டி உள்ள தசைகள் இறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படும். அந்த சமயத்தில் தான், மார்பில் கடுமையான வலி, உடல் முழுதும் வியர்த்தல், மூச்சு உள்ளிழுக்க முடியாமல், திணறல் ஆகியவை ஏற்படும். நடக்கும்போதோ, ஓடும்போதோ இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்தியாவில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 80 சதவீதத்தினர், இத்தகைய பாதிப்புகளையே சந்திக்கின்றனர். மீதமுள்ளவர்கள் தான், இதய தமனியிலேயே குறைபாடு, ஓட்டை ஆகியவற்றால் பாதிப்படைகின்றனர்.

* நெஞ்சு வலி எவ்வாறு ஏற்படுகிறது?
இதய தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில், 100 சதவீத அடைப்பு ஏற்படும்போது தான், இதய வலி ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், இது, எந்த முன் அறிகுறியையும் காட்டாமல், திடீரெனவே ஏற்படுகிறது. இதய தசைகளுக்கான குழாயில் கொழுப்பு படியும்போது, நாளடைவில், அதன் மீது மெல்லிய சவ்வு உருவாகும். இந்த இடத்தில் மேலும், மேலும் கொழுப்பு சேரும்போது, ஒரு நாள், சவ்வு கிழிந்து, ரசாயனம் வெளியேறும்.  இது இரண்டே நிமிடங்களில், அந்த இடத்தை, முழுவதுமாக அடைத்து விடும். அந்த நேரத்தில் தான், குழாயில் ரத்த ஓட்டம் முழுதும் தடைபடுகிறது. அப்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது. ரத்தம் கிடைக்காத நிலையில், இதய தசை இறக்க நேரிடுகிறது. அடைப்பு ஏற்பட்ட பாதை, பெரிதாக இருந்தால், மனித உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. இந்தியாவில், 40 முதல் 50 லட்சம் மக்கள் வரை, ஆண்டுதோறும், இத்தகைய இதய நோயால் இறக்கின்றனர்.

* நெஞ்சு வலி ஏற்பட காரணம் என்ன?
ரத்தக் குழாயில் சேரும் கொழுப்பு மீது, மெல்லிய சவ்வு உருவாகிறது. இது, "இன்டிமா' என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த சவ்வின் தடிமனைப் பொறுத்தே, அது கிழியும் அல்லது வெடிக்கும் நாள் நிர்ணயிக்கப்படுகிறது. 

சிலருக்கு, 50 சதவீத அடைப்பு ஏற்பட்டாலே, சவ்வு கிழியும்; சிலருக்கு, 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு, சவ்வு புஷ்டியான நிலைக்குத் தள்ளப்படும்போது வெடிக்கிறது. அதனால் தான், உடலில் கொழுப்பு சேரக் கூடாது என்று கூறப்படுகிறது.

* நெஞ்சு வலி ஏற்படாமல் தவிர்க்க முடியுமா?
அடைப்பு மேலும் ஏற்படாமல் தவிர்த்தால், நெஞ்சு வலியையும் தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு என்ற இரு விதக் கொழுப்புகள் தான், ரத்த நாளங்களில் படிகின்றன. ஒருவருக்கு, ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில், 130 மிலி கிராம் அளவில் கொலஸ்ட்ராலும், 100 மிலி கிராம் டிரைகிளிசரைடும் இருக்கலாம். அதற்கு மேலான அளவில் இவை இருந்தால், கொழுப்பு படிமானம் அதிகரிக்கும்.

* நெஞ்சு வலி ஏற்படுகிறது என்பதை, நோயாளி எப்போது உணர முடியும்?
இதய தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள், இதயத்திற்குத் தேவையான ரத்தத்தை விட, 70 முதல் 80 சதவீதம் அதிகமாகவே ரத்தத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், இதயம் இயங்க, 30 சதவீத ரத்தமே போதும். அதிகப்படியான, 70 சதவீத ரத்த சப்ளையில் குறைபாடு ஏற்படும்போது தான், நோயாளி, தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதை உணர முடியும். 

ரத்த குழாய்கள் முழுதுமாய் அடைக்க, 30 முதல் 40 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், சிலருக்கு, 15 ஆண்டுகளிலேயே தெரிந்து விடுகிறது. 80 சதவீத அடைப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் வலி, "ஆஞ்ஜைனா' என்றழைக்கப்படுகிறது. நெஞ்சின் இடது புறத்தில் வலி அல்லது பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். ஓய்வு எடுத்தால், சரியாகி விடும். 

சிலருக்கு வலி இல்லாமல், மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமை, நடு மார்பில் எரிச்சல் ஆகியவை உருவாகலாம். 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு, சவ்வு கிழிந்த நிலைக்குத் தள்ளப்படுவோர், கடுமையான வலியை உணருவர். அதிகமாய் வியர்த்து, உயிர் பிரியும் நிலை ஏற்பட்டு விடும்.

டாக்டர் பிமல் சாஜர், 
சாஓல் மருத்துவமனை, சென்னை.

For more details click:  www.saaolheartcenter.com

சனி, 7 செப்டம்பர், 2013

சென்னை குறளகத்தில் மண் குளியல் நீராவி குளியல்

சென்னை குறளகத்தில் மண் குளியல் நீராவி குளியல்

கடந்த வியாழன் அன்று மாண்பு மிகு தமிழக அமைச்சர் பூனாட்சி அவர்கள் சென்னை குறளகத்தில் இயற்கை நல வாழ்வு மையம் ஒன்றினை திறந்து வைத்தார்கள்.

பாரம்பரிய இயற்கை சிகிச்சை முறைகளான மண் குளியல், நீராவிக் குளியல், முதுகுத் தண்டு குளியல் போன்ற சிகிச்சை முறைகளை இப்போது இயற்கை நல விரும்பிகள் குறளகத்தில் சென்று செய்து பலன் பெறலாம்.

அரும்பாக்கத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இருந்து ஒரு இயற்கை மருத்துவரும், இரண்டு தெரபி வல்லுனர்களும் இந்த மையத்தில் பணி புரிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

7-9-13 தேதி தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தியை  Now enjoy mudbath in Khadi showroom படியுங்கள்.

பலன் பெற்று வாழி நலம் சூழ என வாழ்த்துகிறேன்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

நீண்ட நாட்கள் கழித்து...

எல்லோருக்கும் எனது இனிய வணக்கங்கள்.

நீண்ட நாட்களாக பதிவிடுவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சுணக்கம் இன்னும்  சில மாதங்கள் தொடரலாம்.

அதுவரை பொறுமை காப்பதற்கு வேண்டுகிறேன்.

நன்றி.

அன்புடன்

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ..

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஜெய விஜயீ பவா.




ஜெய விஜயீ பவா.





எல்லார் வாழ்விலும் 

விஜய ஆண்டு 

வெற்றி தரும் ஆண்டாக மலர 

வாழ்த்துக்கள்.

பணிவான வணக்கங்களுடன்,

அஷ்வின்

சனி, 6 ஏப்ரல், 2013

28வது இயற்கை 
நலவாழ்வியல் 

முகாம்-2013  

திருப்பனந்தாள்

நோயில் தள்ளும் உணவுப் பழக்கங்களையும், நவீன வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த நலவாழ்வு வாழ ஓர் அரிய வாய்ப்பு. 

யோகப் பயிற்சி, தீமை தரும் சமையல் உணவுக்குப் பதிலாகபழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் நலவாழ்வு வாழ, நோயற்ற வாழ்வு வாழக் கற்றுக் கொள்ள வாருங்கள்.  


சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 


இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இயற்கை வாழ்வியல் பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த பயிற்சி முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சிகளை பீஷ்மாச்சார்யா, யோகரத்னா திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலம் நேரிடையாகப் பெற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுடன் வழங்கப்படும். 

இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள ஆண், பெண் எவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு நிறைபயன் பெறலாம்.

முகாம் துவங்கும் நாள் : 06-05-2013 ( 2 P.M முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 12-05-2013 ( 2 P.M. வரை)

பயிற்சி நடைபெறும் இடம்: ஸ்ரீகுமரகுருபரர் மெட்ரிக் ஹையர்செகண்டரி பள்ளி திருப்பனந்தாள் - 612504, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: 
ஆடவர் ரூ.1800, மகளிர் ரூ.1600
மாணவ, மாணவியர் (வயது 10 முதல் 18க்குள்) ரூ.1200.

இரயிலில் வருபவர்கள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு செல்லவும். அங்கிருந்து 9, 34, 44, 27, 64 ஆகிய இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாள் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி முகாமுக்கு வரலாம்.

முன்பதிவு செய்து கொள்பவர்க்கே முன்னுரிமை.

எனவே பயிற்சியில் கலந்து கொள்ள விழைபவர் ஒரு கடிதம் மூலம் தங்கள் முகவரியை கீழ்க்கண்ட விலாசத்தில் தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ளவும். பணத்தை நேரில் வரும் போது மட்டுமே செலுத்தினால் போதும். பணத்தை முன் கூட்டியே அனுப்பவேண்டாம். பதிவு செய்யாமல் பயிற்சிக்கு வருவதை தவிர்க்கவும். பயிற்சி முகாமின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். 

அமைப்பாளர் முகவரி: 
திரு.இர.இராமலிங்கஅம் அவர்கள்,
செயலர்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
14, அக்ரஹாரம், 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.

0435-2472816 ( 8a.m to 9 a.m.)

நலம் நாடி வெளியிடுபவர்:

அஷ்வின்ஜி@

A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), M.Sc(YogaTherapy)

வாழி நலம் சூழ...

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

ஓம் சிவாய நம..

ஆங்கிலப் புத்தாண்டு 
மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.



வாழி நலம் சூழ என 
வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்...

அன்புடன் 

அஷ்வின்ஜி
வலைப்பூ நிறுவனர்

திங்கள், 3 டிசம்பர், 2012

யோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..



நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும். 

யோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை. 

ஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.

முறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

கிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.

இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.

எல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங்கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.  உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.

குடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.

இரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.

எளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:

காலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.

உப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:

தாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.

முன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.

ஒரு இனிய செய்தி:

இம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பன்னிரண்டு) இருபத்தேழு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது  தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

நான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவைக் கற்றுக் கொள்ளலாம்இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள் :27-12-2012 (பிற்பகல் இரண்டு மணிக்கு)
முகாம் நிறைவடையும் நாள்: 30-12-2012 (மாலை நான்கு மணிக்கு)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி, 
திருப்பனந்தாள் - 612504, 
தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1000 (ஆயிரம்) மட்டுமே.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு திசம்பர் திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 9486768930 
இல்லம்: 0435-2472816

வாழி நலம் சூழ...

செவ்வாய், 13 நவம்பர், 2012

தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்.



இந்நாள் மட்டுமின்றி எந்நாளும்
இனிக்கட்டும் இறையருள் 
நிறையட்டும் சிவனருள். 
  
சிவாய நம.



வலைப்பதிவர் 
அனைவர்க்கும் 
என் இதயம்  நிறைந்த 
தீபாவளி நன்னாள் 
 வாழ்த்துக்கள்.

அஷ்வின்ஜி 

புதன், 17 அக்டோபர், 2012

யோக நலமே வாழ்வின் வளம்.


யோக நலமே வாழ்வின் வளம்.

யோகா ஆசான் டாக்டர் தி.ஆ. கிருஷ்ணன் 

தமிழ் நாடு விளையாட்டுக் கல்வி பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து யோகா பாடப் பிரிவுகளையும், சென்னை திருமூலர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வு மையத்தின் ஸ்தாபகராகவும், இயக்குனராகவும் விளங்கி வரும் யோக ரத்னா, யோக பீஷ்மாச்சாரியா டாக்டர் திரு. தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலமாக நிறையப் பேர் யோகா கற்றுக் கொண்டு  யோகா ஆசிரியர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.  பல்கலையின் இந்த ஆண்டு சேர்க்கை துவங்கி உள்ளது.  

Certificate Course In Yoga
Diploma in Yoga
PGDiploma in Yoga
MSc (Yoga)
MSc (Yoga Therapy)
போன்ற பாடப் பிரிவுகளில் கற்றுத் தேர்ச்சி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும், சுயமாக வகுப்புகள் நடத்தவும் தலை சிறந்த ஆசிரியர்களின் மேற்பார்வையில் நேரடி பயிற்சி பெற்றிட ஒரு நல்வாய்ப்பு.

யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளோர் திருமூலர் யோகா மையத்தின் ஸ்தாபகரும், இயக்குனருமான யோகி திரு.தி.ஆ.கிருஷ்ணன் ஆசான் அவர்களை  9444837114 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

யோகா கற்றுக் கொள்வீர்; 
வாழ்வின் வளம் சேர்ப்பீர்.

வாழி நலம் சூழ...

வியாழன், 11 அக்டோபர், 2012

முக்கிய அறிவிப்பு


வாழி நலம் சூழ...

யோக நலமே, வாழ்வின் வளம்.

முக்கிய அறிவிப்பு 

ஆசனா ஆண்டியப்பன்

யோகி தி.ஆ.கிருஷ்ணன் 

12.10.2012 அன்று காலை 06.15 கலைஞர் தொலைக்காட்சியில் தமிழகத்தின் தலைசிறந்த யோகா விற்பன்னர்களாக திகழும் திருவாளர்கள் டாக்டர் ஆசனா ஆண்டியப்பன் அவர்களுடன் யோகி Dr.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் இணைந்து வழங்கும் யோகாசனம் பற்றிய ஒரு சிறப்பு நேர்முகத்தினை கண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

வாழி நலம் சூழ..

அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு, என் பிரியமான வணக்கங்கள்.

நான் நலமே. நீங்கள் நலமா?


தவிர்க்க இயலாத காரணங்களால் நீண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் எழுதாமல் விட்டு விட்டேன். 

மன்னியுங்கள். 

விரைவில் பயன் தரு செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். 

உங்கள் அனைவரின் பொறுமைக்கும், நல் ஆதரவுக்கும், மாறா அன்புக்கும் என் இதய நன்றிகள்.

அஷ்வின்ஜி.

புதன், 13 ஜூன், 2012

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?


இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவினைப் பற்றி சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்(S&P) எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவைவிட இந்திய பொருளாதாரம் முன்னுக்கு சென்றுவிடுமோ என்ற பயம் தான். அதனால் தான் இந்த கோமாளி அமைப்பை (சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்) வைத்து நம்மைப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் பின் தங்க காரணம் நாம் தான். யாரும் அரசாங்கத்தை குறை சொல்ல கூடாது. ஏன் என்றால் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை உண்டு வந்த நாம் இப்போது, மக்டொனல்ட், கே.எஃப்.சி என்று மாறிவிட்டோம். இயற்கையான ச்த்துக்களைக் கொண்ட ஆப்பிள், மேங்கோ பழச் சாறுகளைக் குடிப்பதற்கு பதிலா பெப்சி, கோக், ஸ்பிரைட் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்கை பானங்களைக் குடிக்கிறோம். இவற்றின் உண்மையான விலை வெறும் ௦.90 பைசா தான் ஆனால் இதை 10 ரூபாய்க்கு மேல் வாங்கி குடிக்கிறோம். உங்கள் ஆரோக்கியம் மேம்படவும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படவும் சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குவது என்று நீங்கள் முடிவெடுத்தால் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவிலேயே மாறிவிடும். இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்:

பருகிட ஏற்றவை: இயற்கையான எலுமிச்சம் சாறு, இயற்கையான பழச் சாறுகள், லஸ்ஸி,  மோர், இளநீர், ஜல்ஜீரா, மசாலா பால் போன்றவற்றினை பருகுங்கள்.
தவிர்க்க:- கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா, ஸ்ப்ரைட் போன்ற செயற்கையான குளிர்பானங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை.

குளியல் சோப்புகள், வாங்க:: சிந்தால் போன்ற காத்ரெஜ் நிறுவனத்தின் பொருட்கள். சந்தூர், விப்ரோ சிகைக்காய், மைசூர் சாண்டல், மார்கோ, எவிட்டா,  மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா குளியல் சோப் மற்றும் சந்திரிகா.
தவிர்க்க: லக்ஸ், லைபாய், ரேக்சொனா, லிரில், டவ், பியர்ஸ், ஹமாம், லிசான்சி, காமே, பால்மாலிவ் போன்றவற்றை வாங்காதீர்கள்.

பற்பசைகள்:. ப்ரூடன்ட், அஜந்தா, ப்ராமிஸ், நீம், பாபுல், விக்கோ வஜ்ரதந்தி, டாபர், மிஸ்வாக் போன்ற இந்திய தயாரிப்புகளை கேட்டு வாங்கவும்:.
தவிர்க்க: கோல்கெட், க்ளோஸ்அப், பெப்சொடன்ட், போர்ஹான்ஸ், ஓரல்-பி போன்றவை.

சவர பிளேடுகள்: சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா வாங்கவும்.
தவிர்க்க:- செவன் ஓ கிளாக், 365, ஜில்லட் தயாரிப்புகள்.

முகப்பவுடர் வாங்க: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்லஸ்.
தவிர்க்க: பாண்ட்ஸ், ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன்ஸ்& ஜான்சன்ஸ், ஷவர் டு ஷவர்,

பால் பவுடர்: வாங்குக: இந்தியானா, அமுல, அமுலா, ஆவின் தயாரிப்புகள்.
தவிர்க்க:- ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

ஷாம்பூக்கள்: வாங்கவும்:- NIRMA, VELVETTE.
தவிர்க்க:- HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

உணவுப் பொருட்கள்: வாங்கவும்:- Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.
தவிர்க்க:- KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது
இந்தியத் தயாரிப்புக்களை கேட்டு வாங்குங்கள்
இந்தியனாய் இருங்கள்.

BUY INDIAN TO BE AN INDIAN FOR EVER.

வியாழன், 12 ஏப்ரல், 2012

இயற்கை நலவாழ்வியல் முகாம் - மே மாதம் - திருப்பனந்தாள்

நோயில் தள்ளும் உணவுப் பழக்கங்களையும், நவீன வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த நலவாழ்வு வாழ ஓர் அரிய வாய்ப்பு. 

யோகப் பயிற்சி, தீமை தரும் சமையல் உணவுக்குப் பதிலாக பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் நலவாழ்வு வாழ, நோயற்ற வாழ்வு வாழக் கற்றுக் கொள்ள வாருங்கள்.  

சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 
இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இயற்கை வாழ்வியல் பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த பயிற்சி முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சிகளை பீஷ்மாச்சார்யா, யோகரத்னா திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலம் நேரிடையாகப் பெற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுடன் வழங்கப்படும். 

இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள ஆண், பெண் எவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு நிறைபயன் பெறலாம்.

முகாம் துவங்கும் நாள் :06-05-2012 ( 2 P.M முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 12-05-2012 ( 2 P.M. வரை)

பயிற்சி நடைபெறும் இடம்: ஸ்ரீகுமரகுருபரர் மெட்ரிக் ஹையர்செகண்டரி பள்ளி திருப்பனந்தாள் - 612504, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1200 (ஆயிரத்து இருநூறு) மட்டுமே.

இரயிலில் வருபவர்கள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு செல்லவும். அங்கிருந்து 9, 34, 44, 27, 64 ஆகிய இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்து கொள்பவர்க்கே முன்னுரிமை.
எனவே பயிற்சியில் கலந்து கொள்ள விழைபவர் ஒரு கடிதம் மூலம் தங்கள் முகவரியை கீழ்க்கண்ட விலாசத்தில் தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ளவும். பணத்தை நேரில் செலுத்தினால் போதும். பணத்தை முன் கூட்டியே அனுப்பவேண்டாம். பதிவு செய்யாமல் பயிற்சிக்கு வருவதை தவிர்க்கவும். பயிற்சி முகாமின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். 
அமைப்பாளர் முகவரி: 
திரு.இர.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 94867688930
இல்லம்: 0435-2472816
நலம் நாடி வெளியிடுபவர்:
அஷ்வின்ஜி@A.T.ஹரிஹரன், M.Sc(Yoga)
வாழி நலம் சூழ...

வியாழன், 29 மார்ச், 2012

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி?
மா.உலகநாதன், திருநீலக்குடி

என்னங்க, இதுகூட எங்களுக்குத் தெரியாதா?பெரிசா சொல்ல வந்தீட்டிங்கன்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது! 

ஆனால், நாம தெரிஞ்சு வச்சிருக்கிறதெல்லாம் தெரிஞ்சதா ஆகுமா? 

சாப்பிட வாங்க. அம்மா கூப்பிடறாங்க.

இன்னைக்கி இருக்கிற யந்திர உலகத்தில, மணி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? பசி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? 

மணியைப் பாத்துக்கிட்டே, நேரமாயிடுச்சி, இருக்கறதைக் குடு, நெறைய வேலை கிடக்குன்னு நின்ன நெலயிலேயே சாப்பிடறவங்க ரொம்பப்பேர்! 

அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் ?  அதுனாலதான் இந்த முன்னுரை! 

எனவே ஆரோக்கியத்துக்காக உண்ணுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர் கடைப் பிடிக்கவேண்டிய டிப்ஸ்:
  1. உண்ணும உணவை நன்றாக மென்று கூழாக்கி, உமிழ் நீரோடு  உள் இறக்க வேண்டும். பல்லுக்கு நல்லா வேலைகுடுங்க (ஏன்னா வயத்துல பல் கிடையாதுல்ல!) 
  2. சாப்பிடுவதை ஒரு தவமாக, உணவின் மீது கவனம் வைத்து உண்ண வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்!
  3. எனவே, உணவு உண்பதற்கென சாவகாசமாக நேரம் ஒதுக்கி, குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக சாப்பிடலாமே. 
  4. சோறு இரண்டு பங்கும், நீர் ஒரு பங்கும் உண்ணவேண்டும். காற்றுக்காக கால் பங்கு இடம் காலியாக இருக்க வேண்டும். 
  5. சுவையுள்ள உணவு நிம்மதி, வலிமை, உற்சாகம் ஆகியவற்றைத் தரும். 
  6. வறண்ட உணவும், மிகக் குளிர்ச்சியான உணவும் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. இதனால் செரிமானக் கோளாறு வரலாம். மிகச் சூடான உணவு குடல் வலிமையைக் கெடுக்கும்.
  7. சுறுசுறுப்பு, உற்சாகம், பசி, தாகம் உள்ள நேரங்களில் சாப்பிடுவது உகந்தது. 
  8. உணவு உட்கொள்வதையும், மலம் சிறுநீர் கழிப்பதையும் , கலவியையும் தனிமையில் செய்ய வேண்டும்.இந்த விஷயத்துல காக்கை குணம் வேண்டுமாம். அது என்ன காக்கைக் குணம்? 
காலை எழுந்திருத்தல்,காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல்---சால உற்றாரோடு உண்ணல், உறவாடல், இவ் ஆறும்
கற்றாயோ காக்கைக் குணம்.   (பழம் பாடல்) 
உணவு உண்ணும முறைமைகளைப் பற்றிய மேலும் சில பயனுள்ள குறிப்புகள்:
  • தினந்தோறும்,அறுசுவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் சுவையுள்ள உணவுகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். 
  • செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கடினமான உணவு பொருட்களை விலக்க வேண்டும்.  
  • சரி! ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை வேளை உண்ண வேண்டும்? .   
ஒரு போது உண்பவன் யோகி!
இரு வேளை உண்பவன் போகி!!
முப்போதும் உண்பவன் ரோகி!!!
அதற்கு மேலும் சாப்பிடுபவன் துரோகி!
ஏனெனில், அடுத்தவன் உணவையுமல்லவா எடுத்துக்கொள்கிறான் ? நம் முன்னோர்கள் உணவின் குணங்களை அறிந்திருந்தார்கள். அதனால், அவர்கள் உணவை வேண்டும் போது கூட்டியும், வேண்டாத போது குறைத்தும், விலக்கியும் மருந்து போலப் பயன்படுத்தி வந்தனர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள்)

உண்ணும் போது தவிர்க்க வேண்டிய ஒன்று உண்டு: 
உண்ணும் போது சிலர் ஒரு வாய் சோறு ஒரு வாய் தண்ணீர் எனச் சாப்பிடுவர். இதனால் இரைப்பையில் சுரக்கும் செரிமான நீர் நீர்த்துப் போய், செரிமானம் கெடும். எனவே,சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்தோ தான் தண்ணீர் அருந்தவேண்டும். 
  • நம் உடலைச் சோற்றுத்துருத்தி என்பார் பட்டினத்தார்.
  • ஐயம் இட்டு உண்! என்று ஆத்திசூடி சொல்லும். 
  • இக் கருத்தையே, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்  என்று  கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.
  • வேளாளன்  என்பவன் விருந்திருக்க உண்ணாதவன்! என்ற முதுமொழியும் உண்டு..
பார்த்தீர்களா? உணவைப் பற்றி எப்படியெல்லாம், முன்னோர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் பெருந்தீனி குறித்து நிறையவே பேசியுள்ளார். சிலர் அறியாமையின் காரணமாக ,கிடைக்கிறதை எல்லாம் வாரி உள்ளே தள்ளுவார்கள். உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ணவேண்டும். இதையே வள்ளுவப் பெருமானார் "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" என்று தமது குறள் மொழியாக தருகிறார். ஒருவன் நிரம்ப உண்ண வேண்டும்என்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவுக்கு குறைத்து உண்டால், அவனுக்கு நோயினால் துன்பம் உண்டாவதில்லை என்பார் வள்ளுவர்.  அக்காலத்தில் மன்னர்கள் மண்கலத்தில் சமைத்து, பொன் கலத்தில் உண்பார்களாம்.

சரி! நேரமாச்சு! சாப்பிடப் போகலாமா? ஆனா, சாப்பிடறதுக்கு முன்னே பசிக்குதான்னு   பாத்துக்குங்க!!

நன்றி:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய முன்னாள் பயிர் நிபுணர் திரு.சு. வைரவன் அவர்கள்  ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் ஆற்றிய உரைக்கு கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்து நமது வலைப்பூவுக்கு அளித்திருக்கும் திரு.மா.உலகநாதன், திருநீலக்குடி அவர்களுக்கு என் நன்றி.