கனி இருப்ப.. இயற்கை நல வாழ்வியல் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனி இருப்ப.. இயற்கை நல வாழ்வியல் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

15. கனி இருப்ப... இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகள்.

வணக்கம். 

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வல்லாரை எப்படி மூளையை போலவே காட்சி அளிக்கிறது. அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு மூளையை பலமாக வைத்திருக்க உதவும் என்பதை படித்திருக்கிறோம். தொடர்ந்து சில கனி வகைகளை உண்பவர்களுக்கு ஏற்படும் நலம் குறித்து தொடர்ந்து படிக்கலாம். 

நன்றி.  

மனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.
நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்ற சொலவடைக்கு ஏற்றவகையில் நம் உணவு எந்த வடிவில் இருக்கிறதோ அந்த வடிவிலான நம் உடல் உறுப்புக்களுக்கு அவை வலிமை சேர்ப்பவையாக இருக்கின்றன என்பது ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். 


சில கனிவகைகளை கீழே காணலாம்.


1. காரட்டும், கண் விழியும்.
Courtesy: iStockphoto
காரட்டை பச்சையாக மென்று தின்பவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். காரட்டை குறுக்காக நறுக்கி வைத்துப் பார்த்தால் கண்ணின் கருவிழியில் உள்ளது போல தெரியும். காரட்டில் நிறைய விட்டமின்களும், ஆண்டி ஆக்சைடன்ட்களும் உள்ளன. விழித்திரைக் குறைபாடுகளை நீக்கும் தன்மை காரட்டுக்கு உண்டு என்கிறார் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த டாக்டர் சாசன் மௌலாவி.


2. வால்நட்டும், மனித மூளையும்.
Courtesy: iStockphoto
வால்நட்டில் நாம் காணும் மடிப்புக்களும், சுருக்கங்களும், மூளையை ஒத்திருக்கின்றன. இரண்டு பாகங்களை பிரிக்கும் பிரிவுகள் கூட மூளையை போலவே இருப்பதை காணலாம். இவை மூளைக்கான உணவு என்றே அழைக்கப் படுகின்றன. ஒமேகா த்ரீ பாட்டி ஆசிட்களை நிறையக் கொண்ட வால்நாட்களை மூளையின் வாழ்நாட்களை அதிகரிக்கும். ஆரோக்கியமான மூளையை பெற வால்நட்டுகளை விரும்பி உண்ணுங்கள்.


3. செலரியும், எலும்பும்:



செலரியின் நீண்ட மெல்லிய தண்டுகள் மனித உடலின் எலும்பைப் போலவே காட்சி அளிக்கின்றன. எலும்புக்கு வலிமை சேர்ப்பவை செலரி என்பதில் ஐயமே வேண்டாம். எலும்பில் இருபத்து மூன்று சதவீதம் சோடியம் சத்து உள்ளது. செலரியிலும் சோடியம் அதே அளவில் இருக்கிறது என்பது வியப்பூட்டும் உண்மை. செலரியில் உள்ள சிலிக்கன் மூலக் கூறு எலும்பின் கட்டுமானத்தின் அடிப்படையாக விளங்கும் ஒன்று. செலரி சாப்பிடுவோருக்கு எலும்பு தொடர்பான தொல்லைகள் நீங்கும்.


4. அவாகேடோவும், கர்ப்பப்பையும்.

முட்டை பல்பை போல காட்சி அளிக்கும் கருப்பையும், அவேகாடோ பழமும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளவை. கருப்பை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட துணை புரிவது அவேகாடோ. ஃ பாலிக் ஆசிட் நிறைய கொண்ட அவேகாடோ உண்பதால் செர்விகள் டிச்பெப்சியா என்னும் குறைபாட்டை நீக்கலாம். இதன் மூலம் கருப்பை கான்சர் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சொமேர் எனும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்.


5. சாத்துக்குடி பழமும், மார்பகமும்.


இரண்டும் பார்க்க ஒன்று போல  இருப்பதின் ரகசியம் லிமொனாயிட்கள் எனும் பொருள் சிட்ரஸ் வகை பழங்களில் நிறைந்திருப்பது தான். மார்பக புற்று நோயை வராமல் தடுக்கும் ஆற்றல சிட்ரஸ் வகை பழங்களுக்கு உண்டு.

6. தக்காளியும், இதயமும்.

தக்காளிப் பழத்தை குறுக்காக நறுக்கிப் பாருங்கள். அவற்றில் காணப்படும் அறைகள் இதயத்தின் உள்ளே உள்ள அறைகளைப் போன்றே இருக்கும். தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் என்சைம் தக்காளியை உண்பதன் மூலம் இதய நோய்களை தடுத்துக் கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சோமர். தக்காளியுடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டால், லைகொபீன் சத்து பத்து மடங்காக உடலில் சேரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.



7. இஞ்சியும், இரைப்பையும்.


வயிற்றுப் பொருமல் வந்தால் ஜிஞ்சர் பீர் சாப்பிட்ட அனுபவம் உண்டா? 


ஆம் என்று சொல்பவருக்கு இஞ்சியின் பெருமைகளை விளக்கவே வேண்டாம். குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கும் வல்லமையும், வயிற்றின் ஜீரணக் கோளாறுகளை நீக்கும் வல்லமையும், இஞ்சிக்கு உண்டு. இஞ்சியை உணவில் அளவாய் சேர்த்து வளமாய் வாழ்வோம்.


8. சர்க்கரை வள்ளிக் கிழங்கும், கணையமும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பலர் மறந்தே போய் விட்டோம். இதனைப் பார்த்தால் கணையத்தை பார்க்க வேண்டாம். இரண்டும் ஒன்று போலவே காட்சி அளிக்கும். சர்க்கரை வெள்ளியில் உள்ள பீடா கராடின் கணையம் வயதாவதாலும், கான்சராலும் பழுது படாமல் காக்கும்.
ஆதாரம்: http://www.womansday.com

சமூக நலம் கருதி வெளியிட்டவர்: 

வாழி நலம் சூழ. 
அஷ்வின்ஜி.

வியாழன், 7 ஜூலை, 2011

13. கனி இருப்ப... (இயற்கை நலவாழ்வியல் சிந்தனைத் தொடர்)



வணக்கம். 

கடந்த பதிவில் அருகம்புல் சாறு பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் வல்லாரைச் சாறு பற்றி பார்க்கப் போகிறோம். வல்லாரை ஒரு அற்புத மூலிகை. தெய்வீக ஞான மூலிகைகளில் ஒன்று வல்லாரை. மனித உடலின் ஞான பாகம் என்று அழைக்கப்படும் சிரசு (தலை)பகுதியில் அமைந்துள்ள மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மூலிகை வல்லாரை ஆகும். கல்வி, ஞானம், அறிவு இவற்றிற்கு தெய்வமாக விளங்கும் கலைவாணியின் பெயரால், சரஸ்வதி மூலிகை என்று அழைக்கப்படும் வல்லாரை இலையின் அமைப்பும், மூளையின் அமைப்பும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் அதிசயத்தை கீழே உள்ள படங்களில் இருந்து ஒப்பு நோக்கி அறியலாம்.


 வல்லாரை இலை.
மனித மூளை.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது தமிழ் நாட்டின் சித்தர்கள் ஆய்வின் மூலமே வல்லாரை என்னும் இம்மாமருந்து உலகிற்கு அறியப்படுத்தப்பட்டது. வடமொழியில் இந்த மூலிகை பிரம்மி என்று அழைக்கப்படுகிறது. காய கல்ப மூலிகைகளில் வல்லாரையும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இன்று வணிக ரீதியாக வல்லாரை கலந்த மருந்து மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் போன்றவை விற்கப் படுகின்றன. ஆயினும் வல்லாரைச் சாறு அருந்துவதன் மூலம் ஒருவர் நேரடியான பலனை உடனுக்குடன் பெற்றிடலாம்.

இப்படிப்பட்ட ஒரு தெய்வீக ஞான மூலிகையான வல்லாரை இலைச் சாற்றினை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஏற்படும் பயன்களைப் பற்றி திரு.மூ.ஆனையப்பன் அவர்களின் ‘நோயின்றி வாழ’’ என்னும் கட்டுரையின் அடுத்த பகுதியைக் கீழே காணலாம்.

வல்லாரைச் சாறு.

வல்லாரை தழைகளை பிழிந்து சாறு எடுத்து நீர் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தவும்.


வல்லாரை இலைச் சாறு குணப்படுத்தும் நோய்கள்.

1.         நரம்புத் தளர்ச்சி.
2.         நினைவாற்றல் இன்மை.
3.         மூளை வளர்ச்சிக் குறைவு.
4.         வயிற்றுப் புண்
5.         காமாலை.
6.         தொழு நோய்.
7.         வாதம்.
8.         நீரிழிவு.
9.         சளி.
10.      சிறுநீர் அடைப்பு.
11.      மாதவிடாய்க் கோளாறுகள்.
12.      யானைக் கால்
13.      காய்ச்சல்.
14.      இதய பலம் இன்மை.
15.      தாதுக் குறைவு.
16.      காமம் தொடர்பான குறைபாடுகள்/நோய்கள்.


(நல வாழ்வியல் சிந்தனைகள் தொடரும்)

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ. 

நன்றி: இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு. மூ.ஆ. அப்பன், குலசேகரன்பட்டினம். 

திங்கள், 2 மே, 2011

6. கனி இருப்ப... மனித உடல் எனும் மாபெரும் 'ஆ'ச்சரியம்

கனி இருப்ப.
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்.)

முந்திய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்:






கனி இருப்ப... தொடர்கிறது....

பகுதி ஆறு:
'என்னை இறைவன் நன்றாக வைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' என்பார் திருமூலர். உடம்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையே மெய்யுணர்வு (அ) மெய்ஞானம் என்றும் கூறலாம். இதைத்தான் 'உள்ளத்திலே சீவன் உறைகின்றானென்று உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்ததேனே' என்பார் திருமூலர். உலகிலேயே மிகப் பெரிய பொய், நிலையாத இந்த உடல்தான் என்னும் மெய்யை உணர்த்துவதால்தான் பொய்யான இந்த உடலை மெய் என்றார்கள் ஞானிகள்.  ஆனால் உலக வாழ்வுக்கு இந்த உடல்தேவையாக இருப்பதினால் உடலை வளர்க்கும் உபாயம் பற்றி எல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள். மனித உடல் ஒரு அற்புதமான இறையருட்கொடை. உடலின் எல்லா உறுப்புகளும் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்களும் அறிவியலார்களும் வியந்து பாராட்டுகிறார்கள்.பல மில்லியன் ஆண்டுகளாக தொடர் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மூலம் இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஓயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.
  • கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 
  • மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 
  • நீரின் அளவு:மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.
  • இதயம்:இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பி:மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 
  • உடலின் வளர்ச்சி:ஒருமனிதன் 25 வயதில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குருத்தெலும்புகள்   காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 
  • இதயத் துடிப்பு:ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும் நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 
  • சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான்.  வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் முதுகில் உள்ள குருத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 
  • ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 
  • எலும்புகள்:குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம். 
இப்படி எண்ணற்ற வேலைகளை ஓயாமல் உடல் செய்து கொண்டே இருக்கிறது.  இந்த வேலைகள் நின்றுவிட்டால் வாழ்க்கை ஓட்டமும் நின்று விடுகிறது. இந்த செய்திகளை நான் திரு வடிவுடையானின் வலைப்பூவில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன். அருமையான செய்திகளை தந்தமைக்கு நன்றி: திரு.வடிவுடையான் அவர்களின் வலைப்பூ:http://vcvadivudaiyan.com/blog/archives/282

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

4. கனி இருப்ப..
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்)

பகுதி நான்கு.

இந்தத் தொடருக்கு பொருத்தமான செய்தியை ஒரு வலைப்பூவில் கண்டேன் அதனை இங்கே மீள் பதிவாக இடுகிறேன்.

உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவ முறையை நாடுகின்றனர்.

சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இயற்கை மருத்துவம் என்றால்…?

தாவரங்கள் ஊசி போடுமா…?

மரங்கள் மருந்து தடவுமா…?

என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம்.

ஆனால் இயற்கை மருத்துவத்தின் தாத்பரியம் அதுவல்ல.மனிதன் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.

மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தாத்பரியங்களும் புதிதாக, புதிராக இருக்கலாம்.

ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல. மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக் கொண்டு தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.

இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.

நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது ஆதாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான்.

அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது.

அந்த வெற்றியின் காரணமாக 'இயற்கையை வெல்லமுடியும்’ என்கிற ஆசையும், நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன.மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போனான்.

தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும்.

ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம் புதிய நோய்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன.

அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.

வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.

இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.

இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளை விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.

தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது.

இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.

உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?

மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.

இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையற்ற உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.

உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.

மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழ்ந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.

பெருவாழ்வு ரகசியம்

நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும்.

பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டு வாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.

ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.

மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.

முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்

ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்

பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்

மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்

மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது.

இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.

உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், பச்சையாக (அல்லது குறைந்த பட்சம் ஆவியில் வேகவைத்து) உண்டால் நீண்ட நாள் வாழலாம்.

ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம். நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

(நன்றி: http://thendral-thangavel.blogspot.com/2010/12/blog-post_25.html)

(தொடரும்..)


அடுத்த பகுதிக்கு: கனி இருப்ப... பகுதி ஐந்து
--

'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

திங்கள், 28 மார்ச், 2011

2. கனி இருப்ப...


கடந்த பதிவு ஒரு முன்னறிவிப்பாக வந்ததை நிறையப் பதிவுலக அன்பர்கள் பார்வை இட்டிருக்கிறார்கள் என்பதை கண்டேன். அனைவருக்கும் என் இதய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

நாட்டில் மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கான வசதிகள் உட்கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? அரசு சார்பான மக்கள் நலத்துக்கான முனைப்புக்கள் என்ன? தனியார் துறையின் ஈடுபாடும், முதலீடும், நோக்கமும் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இன்றைய அளவில் நமது நாட்டில் மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யூனானி, இயற்கை மருத்துவம் என்று பல பலவிதமான பாரம்பரிய மாற்று மருத்துவ முறைகள் இருப்பினும், அலோபதி என்னும் ஆங்கில முறை மருத்துவமே மிகவும் பிரபலமாகவும், மக்களால் விரும்பிச் சென்று எடுத்துக் கொள்ள கூடிய மருத்துவ முறையாகவும் இருக்கிறது.
ஆனால் தற்போது மருத்துவம் என்பது மிகப் பெரும் செலவுகளை உண்டாக்கக் கூடிய, தொடர் பக்க விளைவுகளை உண்டாக்கக் கூடிய, எப்போதுமே மருந்துகளை சாப்பிட வேண்டிய, மருத்துவர்களை தேடி ஓடக் கூடியதான ஒரு சாத்தானின் சங்கிலித் தொடராக மாறிவிட்டது. இதற்கான காரணங்கள் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளையும், நம் முன்னோர்கள் வாழ்கை முறையாக விட்டுச் சென்ற எளிமையான அருமையான, பின்பற்றுவதற்கு எளிதான இயற்கை நல வாழ்வியல் தத்துவங்களை கடைப் பிடிக்க மறந்து போனதே ஆகும்.
நச்சத் தன்மை கொண்ட மருந்துகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விரும்புகிறீர்களா?
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா?
மருத்துவ மனைகளில் நேரத்தையும் பணத்தையும், உற்றார் உறவினர்களின் உதவிகளை எதிர்பார்த்து, வைத்தியம் பார்த்துக் கொள்வதை தவிர்க்க விரும்புகிறீர்களா?
இதற்கான தீர்வு.
இயற்கை உணவுகளை தினமும் உண்பது.
யோகாசனங்கள் பயில்வது, அவற்றை தினமும் செய்வது.
தியான முறை ஒன்றினை கற்றறிந்து தினமும் தவறாமல் செய்வது.
பிராணாயாம முறைகளை தினமும் பின்பற்றுதல்.
நல்லோருடன் அடிக்கடி சந்தித்து அவர்களுடன் உரையாடி நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வது; நாம் கற்றுக் கொண்டவற்றை பற்றி மற்ற நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு சொல்லி அவர்களையும், இயற்கை நலவாழ்வியல் முறைகளைப் பின் பற்றச் சொல்லி ஆலோசனைகள் சொல்வது.
சரியான நபர்களிடம் மேற்கண்ட முறைகளை கற்றுக் கொள்வது.
அஷ்வின்ஜி.

தொடரும்.....

அடுத்த பகுதியை படிக்க: கனி இருப்ப. பகுதி மூன்று