இயற்கை நலவாழ்வியல் முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை நலவாழ்வியல் முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

யோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..

நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும். 

யோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை. 

ஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.

முறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

கிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.

இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.

எல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங்கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.  உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.

குடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.

இரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.

எளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:

காலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.

உப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:

தாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.

முன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.


ஒரு இனிய செய்தி:
இம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பதினொன்று) இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது, முப்பத்தொன்று ஆகிய  தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 


இந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.


நான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  


தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.


இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவை செய்யக் கற்றுக் கொள்ளலாம். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.


முகாம் துவங்கும் நாள் :28-12-2011 (பிற்பகல் இரண்டு மணிக்கு)
முகாம் நிறைவடையும் நாள்: 31-12-2011 (மாலை நான்கு மணிக்கு)


இடம்: ஸ்ரீ கயிலை முனிவர் கலையரங்கம், 
திருப்பனந்தாள் - 612504, 
தஞ்சை மாவட்டம்.


முகாம் கட்டணம்: ரூ.800 (எண்ணூறு) மட்டுமே.


கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.


முகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.


திரு.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 94867688930
இல்லம்: 0435-2472816


வாழி நலம் சூழ...

செவ்வாய், 22 நவம்பர், 2011


இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து. 


குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்


இந்திய அரசு நிறுவனமான 
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஒரு வார இயற்கை நலவாழ்வியல் பயிற்சி 
மற்றும் சிகிச்சை முகாம்

நாள்:- 01-12-2011 to 07-12-2011


நடைபெறும் இடம்:
இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், 
தூத்துக்குடி மாவட்டம்.



பயிற்சிக் கட்டணம் ரூ.800/- ரூ. எண்ணூறு மட்டும்.
(மூன்று வேளை இயற்கை உணவு, தங்கும் இடம், 
பயிற்சி கட்டணம், நோய்க்கான ஆலோசனை, 
சிகிச்சை உள்பட) 

மேலும் விவரங்களுக்கு 
தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )

9944042986, 9380873465

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை

Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

ஞாயிறு, 19 ஜூன், 2011

9. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.


அன்பர்களுக்கு வணக்கம்.

சில வாரங்களாக உங்களிடையே தொடர்ந்து வர இயலாமல் போனமைக்கும், உங்களை காக்க வைத்தமைக்கும் என்னை  மன்னியுங்கள்.

உங்கள் ஆதரவு, அன்பு, ஆசிகளுடன் எனது எம்.எஸ்சி (யோகா) தேர்வுகளையும், ப்ராஜெக்ட்களையும், தீசிசையும் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன். உங்களுக்கு என் இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இன்னும் நிறைய நலவாழ்வுச் செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ள எனது கல்விப் பயணம் உதவி இருக்கிறது. நான் கற்றுக் கொண்டவற்றை வரும் நாட்களில்  உங்களிடையே அவற்றை பகிர்ந்து கொள்வேன்.

தமிழகத்தைச் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் மிக மிக முக்கியமாக கருதப்படுபவர்கள் அமரர் பிக்ஷு ஸ்வாமிகள், அமரர் ம.கி.பாண்டுரங்கனார், அமரர்  மூ.ராமகிருஷ்ணன் போன்றோர்கள் ஆவர்.

அவர்களிடம் அணுக்கத் தொண்டர்களாக குருகுலவாசிகளாக இருந்து நலவாழ்வுப் பாடங்களைப் பயின்றவற்றை தற்சமயம் வாழ்ந்து காட்டிக் கொண்டே வழிகாட்டிகளாக செயல்பட்டு வரும் ஆசான்கள் திருவாளர்கள் குலசேகரன்பட்டினம் மூ.ஆனையப்பன் (இவர் சிவசைலம் அமரர் மூ.ராமகிருஷ்ணன் அவர்களின் இளவல்).
சுவாமி நாகலிங்கனார், ஆடுதுறை இர. இராமலிங்கம்,  யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், தண்டரைப்பேட்டை ஸ்ரீராமுலு, சென்னை யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நலவாழ்வியல் நெறியாளர் அ.மெய்யப்பன்  போன்ற பல ஆசான்களிடம் நேரடியாகப் பாடம் பயில எனக்கு தொடர் வாய்ப்பு கிடைத்து வருவது என் முன்னோர் செய்த நற்பலன்களே காரணம்.

அந்த வகையில் மேலே குறிப்பிட்ட பெரும்பான்மையான முன்னோடிகளிடம் நான் பெருகமணி முகாமில் பயின்றவற்றையும், கடந்த இருபது ஆண்டு காலமாக சேகரித்து வைத்திருக்கும் இயற்கை நலவாழ்வியல் செய்திகளையும் இனி ஒவ்வொரு வாரமும் தவறாமல் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். 

திரு மூ.ஆ. அப்பன் எழுதிய ''நோயின்றி வாழ'' என்னும் கட்டுரையை இங்கே வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

நோயின்றி வாழ...
மூ.ஆ.அப்பன்

இயற்கையில் படைக்கப்பட்ட மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்வதால், அவ்வுயிரினங்களுக்கு மூளை நோய், கண் நோய், செவி நோய், இதய நோய், சிறுநீரக நோய், தொழு நோய், வாதம், காசம், ஆஸ்துமா, ஆட்கொல்லி புற்று நோய், எயிட்ஸ், எலும்பு முறிவு மற்றும் எவ்வித நோயுமின்றி நரை, திரை, மூப்பு இன்றி உடல், உள  ஆரோக்கியமிகுந்து  வாழ்கின்றன. எடுத்துக் காடாக, பறவைகள் தானியங்களை பச்சையாக உண்கின்றன. விலங்கினங்கள் புல், இலை, தழை 
மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்கின்றன. மண்புழுக்கள் மண்ணையே உணவாக உண்ணுகிறது.

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்களில் உயர்ந்த உயிரினமான மனிதனோ, தனக்குரிய இயற்கை உணவாக கொட்டைப் பருப்புகளையும், பழவகைகளையும் உண்ணாமல்,பறவையினங்களின் உணவான  தானியங்களையும்,விலங்கினங்களின் உணவான இலைகளையும்,காய்கறிகளையும், சமைத்து உண்பதால்தான் எண்ணற்ற உடல், உள நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றான். மனிதனது எண்ணற்ற நோய்களுக்கு, எண்ணற்ற மருந்துகள், மருத்துவமனைகள்  இருந்தும் அவற்றை முழுமையாக நீக்கி கொள்ள முடியாது, திசை மாறிய பறவையைப் போல மனிதன் திணறுகின்றான்.

இயற்கை உணவு.
ஆப்பிளை விட தேங்காய் மிகவும் உன்னதமான உணவு.

மனிதனுடைய அனைத்து உடல், உள நோய்களுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் காரணம், சமைத்து உண்ணும் பழக்கம் தான்.எனவே மனிதனின் அனைத்து பிணிகளிலிருந்தும் குணம் பெறவும், பிணிகள் வராமலும், நோயின்றி வாழவும் விரும்பினால் அவன் தனது உணவாக கொட்டைப் பருப்புகள் (தேங்காய், முந்திரி, வால்நட், அக்ரூட், பாதம், பிஸ்தா போன்றவை), பழ வகைகள் (வாழை, மா, பலா, ஆப்பிள், பப்பாளி, சீதா, ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி மற்றும் இதர பழங்கள்), மற்றும் பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளுடன் கூடிய பழவகைகள், முளை விட்ட தானியங்களுடன் கூடிய பழவகைகள் என இயற்கைக்கு மாறுபாடு இல்லாத உணவு வகைகளை பசித்த போதெல்லாம் உண்டு வாழ முயலுதே உயரிய இயற்கை நெறியாகும்.

எனவே தான் பொய்யாமொழிப் புலவரான திருவள்ளுவரும்,  "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" எனவும், "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்" என்றெல்லாம் மானிடருக்கு இயற்கை ஆரோக்கிய நெறியை உணர்த்தியுள்ளார்.

சமைத்த உணவின் தீமைகள் என்னென்ன? இயற்கை உணவுகளை எவ்வாறு தேர்ந்தெடுத்து உண்பது? என்பதை வருகிற தொடரில் காண்போம்.

(தொடரும்) 

தொடர்ந்து படித்து, பின்னூட்டம் தந்து வரும் அன்பர்களுக்கு என் இதய நன்றி.

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ...

சனி, 21 மே, 2011

8. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.


பெருகமணி (திருச்சி) அருகே கடந்த வாரங்களில் நிகழ்வுற்ற இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் தொடர்பான படங்கள். இவை ஏற்கனவே வெளியிடப்பட்டு ப்ளாக்கர் சீரமைப்பு தொடர்பாக நீக்கப் பட்டவை. பதிவில் நீடிக்க மீண்டும் வெளியிடப் பட்டுள்ளது.

முகாமில் வைக்கப் பட்டிருந்த பேனர்கள்.
















நான் படித்து வரும் எம்.எஸ்.சி (யோகா) பாடத்தின் பல்கலைக் கழக தேர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளதால் 'கனி இருப்ப' தொடர் கட்டுரைகள் ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெளி வரும். அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ.