ஞாயிறு, 26 ஜூன், 2011

10. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.


இயற்கை நலவாழ்வியல் பற்றிய திரு. மூ.ஆனையப்பன் அவர்களின் ''நோயின்றி வாழ'' கட்டுரையின் அடுத்த பகுதி:-

மனிதன் நோயின்றி வாழ என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

மனிதன் நோயின்றி வாழ விரும்பினால், சமைத்த செயற்கை உணவுகளான சோறு, இட்டிலி, தோசை, சப்பாத்தி, வடை, ரொட்டி மற்றும் பிற செயற்கை பானங்களான, காப்பி, ஹார்லிக்ஸ், டீ, விவா, சோடா, பாட்டிலில் அடைத்து கடைகளில் விற்கப்படும் அனைத்துவிதமான குளிர் பானங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். 

மேற்கண்ட உணவுகள் இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகி விட்டனவே. பின்னர் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும்?

மனிதன் உண்மையிலேயே நோயின்றி வாழ விரும்பினால், அவன் இயற்கை உணவுகளை சாப்பிடவேண்டும். அவையாவன:

1. கொட்டைப் பருப்புகள், பழவகைகள், பச்சைக் காய்கறிகள், முளை விட்ட தானியங்கள் போன்றன.

2. இயற்கை பானங்களான நிலத்தடி நீர் (பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் செயற்கை நீர்), இளநீர், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை முதலியவற்றால் தயாரான வெள்ளைச் சர்க்கரை, எசன்ஸ் போன்ற செயற்கை சுவையூட்டிகள் சேர்க்காத சாறுகள்.

மேற்கண்ட நூறு சதவீத இயற்கை உணவுக்கு மாறுதல் எளிது. பயன்களும் கணக்கற்றவை. நோயின்றி வாழ இவை உதவும்.

முழுமையாக மாற இயலாதவர்கள் ஒரு வேளை (நண்பகல்) சமைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு மீதம் இரு வேளைகளிலும் (காலை, இரவு ) மேற்குறிப்பிட்ட வகையில் இயற்கை உணவு வகைகளை உண்டு வரவேண்டும். 

இதுவும் முடியாதவர்கள் சமைத்த சைவ உணவுகளை உண்டு கொண்டு இரவு மட்டுமாவது பழங்கள் நிறைந்த இயற்கை உணவுகளை உண்ணலாம்.

ஏன் சமைத்த உணவு ஆபத்தானது? 


சமைத்த உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

(தொடரும்)
நன்றி: திரு. மூ.ஆ.அப்பன், இயற்கை நலவாழ்வியல் அறிஞர், குலசேகரன்பட்டினம்(திருச்செந்தூர்), தமிழ்நாடு.


வாழி நலம் சூழ..
தொகுப்பு:
அஷ்வின்ஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக