புதன், 4 ஆகஸ்ட், 2010

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்...

புவி வெப்பமாதலில் இருந்தும் ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டை வழியாக வரும் புறஊதாக் கதிர்களில் இருந்தும் பூமியைக் காப்பாற்றும் வழியைக் கண்டுபிடித்தாயிற்றா? 

துருவப் பனிமலைகள் உருகுவதால் உலகின் ஒருபாகம் விரைவில் கடலில் மூழ்கப் போகிறதே அதற்குத் தீர்வு கண்டாயிற்றா? 

அணுக்கழிவுகளை ஆபத்தில்லாமல் ஆக்குவதில் வெற்றி கண்டு விட்டீர்களா? 

அல்லது புலிவாலைப் பிடித்த கதையாக இன்னும் திணறிக்கொண்டுதான் இருக்கிறீர்களா? 

ஐயா விஞ்ஞானிகளே! நீங்களும் மக்களாகிய நாங்களும் கொஞ்சகாலத்தில் போய்ச்சேர்ந்து விடுவோம். 

நமது அடுத்த சந்ததிகள் வாழ்வதற்கு வழி இல்லாமல் பூமியைக் கெடுத்துவிட்டு செல்லாமல் இருப்பதற்கு முதலில் வழி கண்டு பிடியுங்கள்! 

அடுத்து வரும் காலங்களிலாவது பூமியை மாசுபடுத்தாத அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! 

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அறிவியலுக்கு விடை கொடுங்கள்!.

(இணையத்தில் கண்ட குமுறல் வரிகள்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக