ஞாயிறு, 21 நவம்பர், 2010

11.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.

பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 


பகுதி 11  தொடருகிறது:
  

ஈரமண்பட்டி
சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2  மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம்.  பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது.   சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

ஈரத்துணிபட்டி
மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம். 

சூரிய ஒளிக் குளியல்
குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம்.  சுரிய ஒ:ளி நமக்கு  நிறைய ஆற்றலை வழங்குகிறது.  விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.
சூரிய ஒளியின் நன்மைகள்:
    (1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.

    (2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.

    (3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.

    (4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும்.

சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில்  20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

எண்ணெய் கொப்பளித்தல்
இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது.  இது தீங்கு  விளைவிக்காது.  நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும்.  பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.  1 ஸ்பூன் போதுமானது.  வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.  பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும்.  விழுங்கினால் தவறேதும் இல்லை.   ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது.  பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.  காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம்.  சவ்வூடு  பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது. 

(தொடரும்)

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக