வெள்ளி, 14 ஜனவரி, 2011



வாழி நலம் சூழ... 


இதயம் நிறைந்த பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்.


மதிப்பிற்கும் பாசத்துக்கு உரிய வலைப்பூ அன்பர்களுக்கும், 
நண்பர்களுக்கும், வணக்கத்திற்குரிய பெரியவர்களுக்கும், 
எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம், 
தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இந்நன்னாளில் நமக்கு,
ஆன்றோர் ஆசி,
சான்றோர் நட்பு,
சகோதர பாசம்,
மத நல்லிணக்கம்,
தோழமை நேசம்,
சுற்றிச் சூழும் நலம்,
என்றும் மங்கா வளம்,
மன மகிழ்ச்சி, 
உங்கள் எல்லார் 
உள்ளங்களிலும், 
இல்லங்களிலும் 
என்றென்றும் 
பொங்கிப் பிரவகித்து 
நல் இன்பம் என்றென்றும் 
வற்றாத ஜீவநதியாய்
ஊற்றெடுத்துப் பெருகிட
வாழ்வில் வளம் சேர்த்திட,
எல்லாம் வல்ல 
ஆடல் வல்லான் 
என் அம்மையப்பனை 
இறைஞ்சி 
வேண்டுகிறேன்.

--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

திங்கள், 10 ஜனவரி, 2011

2. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்

ஒரு நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமது வாழி நலம் சூழ.. வலைப் பூவில் திருமதி ரதி லோகநாதன் அவர்கள் எழுதி வந்த ஆரோக்கியம், ஆனந்தம் என்கிற இயற்கை நலவாழ்வியல் தொடர் ''ஆரோக்கியமே ஆனந்தம்'' என்ற தலைப்பில் ஒரு அருமையான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. எழுபத்தைந்து பக்கங்களில் இயற்கை நலவாழ்வு பற்றிய சுவையான செய்திகளை ஆசிரியர் வெளியிட்டிருக்கிறார்.  நமது வலைப்பூவில் வெளியிட்ட அவரது முதல் கட்டுரையான ''உலகை மாற்ற உணவை மாற்று'' என்னும் கட்டுரையும் இந்தப் புத்தகத்தில் இணைக்கப் பட்டுள்ளது. 

அச்சுகூலி, மற்றும் காகிதம் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்த நல்லதொரு புத்தகத்தின் விலை ரூபாய் இருபது என்று நிர்ணயித்துள்ளதுதான். இந்தத் தொகையைக் கூட மீண்டும் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடத்தான் உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன் என்று ஆசிரியர் தன் முகவுரையில் கூறி இருக்கிறார். சேவை சிந்தனை கொண்ட சகோதரி திருமதி ரதி லோகநாதன் அவர்களை பாராட்டியே தீரவேண்டும். எல்லா வகைகளிலும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் அன்பர் திரு லோகநாதனுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது குடும்பம் நலம் சூழ வாழிய என்று வாழ்த்துவோம்.

புத்தகம் வேண்டும் என்று விரும்புபவர்கள் நூல் ஆசிரியர் திருமதி ரதி லோகநாதன் அவர்களை lram12062000@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சலில் தொடர்பு கொள்ள, அவரது இல்ல முகவரி:

திரு. அ.லோகநாதன், 
24, ஆர்.வி. லே அவுட், 
ஒண்டிப்புதூர், 
கோயம்புத்தூர் - Pin: 641016, 
தமிழ்நாடு (இந்தியா).

இன்றைய கால கட்டத்தில் எல்லா தரப்பு மக்களையும் இந்த இயற்கை நலவாழ்வுச் செய்தி போய் சேர வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட அன்பர்கள் இந்த நூலை வாங்கி பரிசளிக்கலாம். மொத்தமாக வாங்கியும் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.