சனி, 26 பிப்ரவரி, 2011


உண்மை வயதும், 
ஆரோக்கியத்தின் வயதும்..


உங்களது நலம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் உங்கள் ஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணமாக புகை பிடிக்கும் வழக்கம் ஒருவரது ஆயுளை பல ஆண்டுகள் குறைத்து விடும்.

அது போலவே, மன அழுத்தம், சரியான உறக்கம் இன்மை, உணவு மற்றும் உடல் எடை போன்றவை ஒரு மனிதனின் ஆயுளை பாதிக்கின்றன. 

நாற்பது வயது கொண்ட ஒருவர் புகைக்கும் வழக்கம் உடையவராக இருந்து, அவருக்கு மன அழுத்தமும் இருந்து, சரியான உறக்கமின்றி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரமே உறங்குகிறார், மேலும் உடல் எடை அதிகம் கொண்டவராக இருக்கிறார் எனில், அவரது பிறந்த தேதியில் இருந்து கணக்கிடப்படும் வயது நாற்பது எனினும், அவரது தேக ஆரோக்கியம் நாற்பத்து எட்டு வயதுடையவர் போல இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இதற்கு ஆரோக்கியத்தின் வயது அல்லது உடலின் வயது என்று பேரிட்டு உள்ளனர். நமது பிறந்த தேதியில் இருந்து கணக்கிடப்படும் வயதும், நமது ஆரோக்கியத்தின் வயதும் ஒன்றாக இருந்தால் நீங்கள் நூறு சதவீதம் நலமாக இருக்கிறீர்கள் என்று பொருள். 

உங்கள் பிறந்த வயதும், உடம்பின் வயதும் என்ன என்று கண்டு பிடியுங்கள். இரண்டு வயதையும்  ஒன்றாகவே வைத்திருக்க முயலுங்கள். 

இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின் பற்றி மேலே சொன்ன நலத்தை பெறுங்கள். 

வாழி நலம் சூழ.
வாழ்த்துக்கள்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்! 
வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் வேர் வரை அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. 
வன்னி மரம். (நன்றி: கூகிள் இமேஜஸ்)
இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கட்டினார்கள் என்று சொல்வார்கள். எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவசமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு. இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும். வன்னிக்காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விகிதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விகிதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும். 
நன்றி: வெப் துனியா (தமிழ்), புதன், 23 பிப்ரவரி 2011
-- 
வாழி நலம் சூழ... 
வலைப்பூவில் வெளியிட்டவர்: 
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி

திங்கள், 21 பிப்ரவரி, 2011



உடல் ஆரோக்யமாக உள்ளதா? என பரிசோதிக்க ஒரு எளிய பயிற்சி. 

பின்னர் இடது காலையும் இதே போல தூக்கவும்.

முதலில் கண்ணை மூடி நிமிர்ந்து நில்லுங்கள், அதன் பின் வலது கால் மட்டும் மடக்கியும், தொடர்ந்து கால்மாற்றி இடதுகால் மட்டும் மடக்கி நில்லுங்கள். உங்கள் உடல் ஆடாமல் இருந்தால் முழு ஆரோக்யமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

உடல் ஆடினாலோ ஆரோக்ய குறைவு என அறியலாம். 

நன்றி: தினமலர் (21 FEB 2011)