வியாழன், 10 அக்டோபர், 2013

சென்னையில் ஒரு நாள் இயற்கை மருத்துவ முகாம்.


சதானந்தபுரம் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையமும்
தவமிகு பிட்சு சுவாமிகள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வு மையமும்
இணைந்து நடத்தும் ஒரு நாள் இயற்கை இயற்கை நலவாழ்வியல் முகாம்

நாள்: 09-நவம்பர், 2013 (இரண்டாம் சனிக்கிழமை)
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: பிள்ளையார் கோவில் கூடம், சதானந்தபுரம் (பெருங்களத்தூர், சென்னை)

நோக்கம்: இயற்கை மருத்துவம், யோகாவை கற்கும்/கடைப்பிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவது.

பாடங்கள்: இயற்கை வாழ்வு, இயற்கை மருத்துவம், பஞ்ச பூதச் சிகிச்சை,  மூலிகை மருத்துவம்.

பயிற்சிகள்: யோகாசனம், பிராணாயாமம், வாழையிலை/மண் குளியல், உணவை மென்று உண்ணும் பயிற்சி மற்றும் கண் பயிற்சி.

பயிற்சிக் கட்டணம்- ரூ.200/- (வாழையிலைக் குளியலுக்கு தனியாக ரூ.60)
மாணவர், மாணவியர்க்கு வாழையிலைக் குளியலுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.120/-மட்டுமே.

கட்டணத்தை முகாமிற்கு வந்த பின் செலுத்தலாம்.

முகாமின் ஆசிரியர்கள்
1.இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு என்.கே. ஸ்ரீராமுலு,  நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306. கைபேசி-9786866774

2.பீஷ்மாச்சாரியா யோகி டாக்டர் தி.ஆ.கிருஷ்ணன்,யோகா ஆசான்,இயற்கை உணவாளர். நிறுவனர், திருமூலர் யோகா இயற்கை உணவு டிரஸ்ட், சென்னை.
கைபேசி - 9444837114

3.டாக்டர் ஆர்.சுப்பிரமணியன், BNYS, இயற்கை மருத்துவர், வர்மக் கலை நிபுணர், கைபேசி-9442756971

4.பொறியாளர்.கு.சித்தையன், B.E., MIE., M.A. இயற்கை வாழ்வியல் பரப்புநர், கைபேசி-8825189903

5.பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Dip(Yoga) யோகாசன ஆசிரியர் & நிறுவனர், தவமிகு பிட்சு சுவாமிகள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வு மையம். கைபேசி-9444323730 

6.A.T.ஹரிஹரன், M.Sc.(Yoga) தணிக்கை அதிகாரி, தென்னக ரயில்வே, சென்னை. கைபேசி:- 9444171339. இயற்கை நலவாழ்வியல் செய்திகளை அறிய வலைப்பூ: www.frutarians.blogspot.com

7. டாக்டர் லோகநாதன், தென்னக ரயில்வே, சென்னை.

8. யோகி.இளம் வழுதி Diploma in Yoga, யோகாசனஆசிரியர் நிறுவனர், யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம், சதானந்தபுரம்.

பயில்வோர் கொண்டு வர வேண்டுபவை:- யோகாசன உடை, துண்டுகள் இரண்டு, மாற்று உடை

நடை முறை
·          காலை 8 மணி முதல் 8.30 வரை:- பதிவு, மூலிகைச் சாறு அருந்துதல்
·          8.30 முதல் 9.30 வரை:- யோகாசனம் பிராணாயாமம்
·          9.30 முதல் 10.20 வரை:- நலவாழ்வியல் பாடங்கள்
·          10.20 முதல் 11.00 வரை:- நலவாழ்வியல் பாடங்கள்
·          11.00 முதல் 11.15 வரை:- பழச்சாறு அருந்துதல்
·          11.15 முதல் பிற்பகல் 1.00 வரை:- மண் குளியல் அல்லது வாழை இலைக் குளியல்
·     பிற்பகல் 1.00-மாலை 3.00 வரை:- அடுப்பில் ஏற்றாத இயற்கை உணவை மென்று உண்ணும் பயிற்சி, மற்றும் ஓய்வு
·          மாலை 3.00 முதல் 4.00 வரை:- நலவாழ்வியல் பாடங்கள்
·          மாலை 4.00:- சுக்குக்காபி
·          மாலை 4.00 முதல் 5.00 வரை:- இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை

முகாமை அடையும் வழி
பெருங்களத்தூர் ரயில் நிலையம்(அ)பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மாநகரப் பேருந்து(அ)ஆட்டோ(அ)ஷேர் ஆட்டோ மூலம் சதானந்தபுரத்திற்கு வரலாம். (இரண்டு கி.மீ தூரம் என்பதால் நடந்து கூட வரலாம்.)

முன் பதிவிற்குத் தொடர்பு:
திரு.இளம்வழுதி, எண்: 123/5, காந்தி ரோடு, சதானந்தபுரம்,சென்னை-63. கைபேசி-9444447922
அமெய்யப்பன், 044-24990565, கைபேசி-9444323730

செலவில்லாத இயற்கை மருத்துவத்தை கற்க/பின்பற்ற ஒரு அரிய வாய்ப்பு.

முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுக.

இயற்கை நலவாழ்வியல் நலம் விரும்பிகளுக்காக... 
வாழி நலம் சூழ...

திங்கள், 7 அக்டோபர், 2013

56000 + ஹிட்ஸ்களை கடந்து வெற்றிப் படிகளில் உங்கள் வலைப்பூ...

வெற்றிப் படிகளில் உங்கள் வலைப்பூ...

அனைவருக்கும் என் வணக்கம். 31.01.2010 நான் விளையாட்டாக தொடங்கிய வாழி நலம் சூழ வலைப்பூ இப்போது (06-10-2013) வரை 56926 ஹிட்ஸ்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

நான் உறங்குமுன்னர் பல காதங்கள் பயணிக்க வேண்டி இருக்கிறது என்னும் ராபர்ட் ஃப்ராஸ்டின் வரிகளை நினைவில் கொண்டு பயணிக்கிறேன்.

Inline images 1

இந்த பயணம் உங்களது துணையின்றி நடந்திருக்க முடியாது என்பதினால் உங்கள் அனைவருக்கும் எனது இதய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் தொடர் நல்லாதரவை நல்கும்படி வேண்டுகிறேன்.

நன்றியுடன் 
அஷ்வின்ஜி 
வாழி நலம் சூழ வலைப்பூ.