செவ்வாய், 26 ஏப்ரல், 2016

31-வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம் May 2016 கும்பகோணம்.

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் 
அளிக்கும் 31வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.

உணவே மருந்து.
மருந்தே உணவு.

நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள்உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாகஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம்வாயு உபத்திரவம்மலச்சிக்கல்நெஞ்செரிச்சல்(அசிடிடி-Acidity) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும்குறைவற்ற செல்வத்தையும் தரும். 

ஒரு இனிய செய்தி:

கும்பகோணத்தில் வருகிற மே மாதம்  இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

இம்மாதம் 21.5.2016 முதல் 27.5.2016 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம். 

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் திரு.இராமலிங்கஅம், அவர்கள் முகாம் இயக்குனராக இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்நல்வாழ்வு நிலையம்தண்டரைப்பேட்டைமதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும்.

இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவக்கம்:21.5.2016 (சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவு: 27.5.2016(வெள்ளிக்கிழமை-பிற்பகல் நான்கு மணி வரை)

இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.

பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.2600 /- மகளிர்: ரூ.24௦௦ 
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2200.

அணுக வேண்டிய முகவரி:

திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலர், 
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம், 
14, அக்ரஹாரம்தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
அலைபேசி:9486768930

ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அலைபேசி எண்: 9486768930 மூலம்  செயலரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

வாழி நலம் சூழ...

புதன், 13 ஏப்ரல், 2016



தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


புத்திள மலராய்ப் 
பூத்ததிந்தப் புத்தாண்டு.

நித்தமும் நலவாழ்வு 
தரட்டும் நம் இறைவன்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஐந்து இறுதி பகுதி.

வாழி நலம் சூழ...

சிறுநீர் மருத்துவம் பற்றிய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை கீழே காணலாம்;

சிறுநீரின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய மேலும் சில விவரங்களை இங்கே தருகிறோம். இந்தத் துறையில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகள் இதோ.

1. சர்வரோக நிவாரணி, ஆசிரியர் சுவாமி பூமானந்தா, நூல் வெளியீடு: இராசிபுரம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்.



2. கேரளாவில் இந்த சிவாம்பு சிகிச்சை முறை திரு.நாராயணன் மாஸ்டர் அவர்களால் வெகு திறம்பட சொல்லித் தரப்படுகிறது. அவரது மொபைல் எண்: 8547146191 தொலைபேசி எண்: 04962446191

3. சிறுநீர் சிகிச்சையின் இயற்கை நன்மைகள் எனும் தமிழ் நூல்
விலை ரூ. 220.00

 

இந்நூலை NOTIONPRESS.COM எனும் வலைத் தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜகதீஷ் ஆர்.புராணி (AUTHOR MR JAGATHESE R PURANI) அவரை தொடர்பு கொள்ள மொபைல் எண்: 093428 72578
திரு புராணி அவர்களின் வலைத்தளம் www.urinetherapy.in 
அவரது மின்னஞ்சல் :  jbhurani@gmail.com                                  

திரு.புராணி அவர்களின் வலைத் தளத்தில் சிவாம்பு முறையால் சிகிச்சை பெற்று பயனடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளின் ஸ்கேன் ரிப்போர்டுகளுடன் காணலாம். சிவாம்பு சிகிச்சை முறையை எவ்வாறு பின்பற்றுவது என்ற விவரங்களையும் காணலாம். சிறுநீரை எவ்வாறு நாற்றமற்ற வகையிலும், நிறமற்ற வகையிலும் பெறுவது என்பதற்கான முறைகளை திரு புராணி இந்த வலைதளத்தில் விவரமாக தந்துள்ளார்.

4. Wonders of Uropathy by Dr.G.K.Thakkar

 


WONDERS OF UROPATHY எனும் இப்புத்தகத்தை B.JAIN PUBLISHERS (P)LTD. வெளியிட்டு உள்ளனர். இப்புத்தகத்தை பெற விரும்புவோர்  www.bjainbooks.com எனும் வலைத்தளம் மூலமாக பெறலாம். புத்தகத்தின் விலை ரூ. 39.00இப் புத்தகத்தின் ஆசிரியர் Dr.ஜி.கெ.தக்கர் (DR G K THAKKAR) இந்த சிகிச்சை முறையை தமது WATER OF LIFE FOUNDATION (INDIA) எனும் அமைப்பின் மூலம் மும்பையில் (MUMBAI) இருந்து பரப்பி வருகிறார்.

5. Miracles of Urine Therapy.



MIRACLES OF URINE THERAPY BY DR C P MITHAL MBBS MD
விலை ரூ. 285 INCLUDING  TRANSPORT CHARGES.  AMAZON.IN வலைத் தளம் மூலமாக  இந்தப் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சிறுநீர் மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பின் பற்றி வந்த முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் அணிந்துரை இந்த நூலில் உள்ளது.

6. MANAV MOOTRA BY RAOJIBHAI MANIBHAI PATEL .. இந்த மின்னூலை இணையவெளியில் இருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். பயனடைந்தோரின் விவரங்களுடன் சிவாம்புச் சிகிச்சைகளைப் பற்றி சிறப்பான முறையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
7. சிறுநீர் சிகிச்சை பற்றிய மேலும் ஒரு சிறப்பான நூலை இந்த வலைத் தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://www.whale.to/a/The-Golden-Fountain-Coen-van-der-kroon-1994.pdf


8. பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா எனும் அமைப்பின் நிறுவனரான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் “A systematic course in the ancient tantric techniques of Shivambu by Swami Satyananda Saraswati, Bihar School of Yoga” நூலில் சிவாம்பு சிகிச்சை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
.
9. சிறுநீரை மேற்பூச்சாக வெளி உபயோகம் செய்வது எப்படி எனும் விளக்கத்தை காணொளி மூலம் காண விரும்புவோர். இந்த youtube தளத்தை நாடலாம். Urine Therapy: External use of Shivambu or Urine Therapy 

திரு அ.மெய்யப்பன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்களையோ அல்லது புத்தகங்களையோ பெற விரும்பினால் அவரது முகவரி மற்றும் அலைபேசி/தொலைத் தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மின் பொறியாளர்  திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip in Yoga 
இல்ல முகவர்: புதிய எண்:15, முதல் தளம், 
திரு.வி.க. மூன்றாவது தெரு, 
கேசரி உயர்நிலைப் பள்ளி அருகில்,
மைலாப்பூர், சென்னை 600004
அலைபேசி: 9444323730
தரை இணைப்பு: (044)24990565

 to change your lifestyle.practice yoga and adopt nature cure and eat more fruits and vegetable salads.

சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐந்து பகுதிகளை பொறுமையாகப் படித்த வலைப்பூ வாசகர்களுக்கு நன்றி. இந்த முறையிலான மருத்துவம் மிகச் சிறந்த மருத்துவம். பொருட் செலவோ, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியமற்ற சிகிச்சை முறை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதனை இந்த சிகிச்சையின் மூலம் பயன் பெற்றவர்களை கொண்டு அறியலாம். இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது. 

வாழி நலம் சூழ.. வலைப்பூவில் மேலும் பல நலவாழ்வியல் செய்திகளை படித்து பயன் பெற்று மகிழ அழைக்கிறோம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி நான்கு


வாழி நலம் சூழ வலைப் பூவின் வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த மூன்று பகுதிகளில் நாம் முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுத தாரணை என்றெல்லாம் அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றி பல செய்திகளைப் படித்தோம். உலகளாவிய அளவில் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஆய்வுகள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன. சிறுநீரில் இருக்கும் பொருட்களின் துணை கொண்டு அலோபதி மருந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் Google தேடலில் Auto Urine Therapy (AUT) என தட்டச்சிட்டு தேடினால் சிறுநீரின் பயன்கள் பற்றிய லட்சக்கணக்கான பக்கங்கள் உலகளாவிய அளவில் காணக் கிடைக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்களில் சிறுநீரின் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக றிகிறோம்.

தமிழ்நாட்டில் பலர் இந்த காசு செலவில்லாத, எளிய மருத்துவ முறையைப் பயன்படுத்தி சொரியாசிஸ் (Psoriasis), கான்சர் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அலோபதியினால் நெடுங்காலமாக தீர்க்கமுடியாத நலக்கேடுகளுக்கு ஆரோக்கியத் தீர்வுகளைப் பெற்று வருகிறார்கள்.

இந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒரு பெரியவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வதில் வாழி நலம் சூழ வலைப்பூ பெருமிதம் கொள்கிறது.

மின்பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., M.B.A., PGDip(Yoga) அவர்கள் சிறுநீர் சிகிச்சையில் வல்லுநர். யோகா ஆசிரியராகவும், இயற்கை நலவாழ்வியல் அறிஞராகவும் திகழும் அவர் இயற்கை நலவாழ்வியல் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

திரு அ.மெய்யப்பன் எழுதிய நூல்கள்: 

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் 

உயிர் காக்கும் உணவு மருத்துவம். 
 

இன்றளவிலும் சேவைகளில் முன்னோடியாகத் திகழும் மதுரை காந்தி சங்கத்தின் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ அறக்கட்டளை போன்ற தமிழகத்தின் முன்னணி இயற்கை நல இயக்கங்களின் நிறுவன காலத்தில் இருந்தே உறுப்பினராகவும், அந்த அமைப்புக்களின் பலவேறு பதவிகளில் இருந்து கொண்டும் தளராத சேவை செய்து வருபவர். தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் Post Graduate Diploma in Yoga பட்டயம் பெற்றவர். புனேவில் உள்ள இயற்கை மருத்துவக் கழகத்தின் இயற்கை மருத்துவக் கல்வி  பயிற்சி பெற்றவர்,

இயற்கை நலவாழ்வு குறித்த புத்தகங்களை எழுதிய தமிழகத்தின் நலவாழ்வியல் முன்னோடி (சரஸ்வதி சங்கம் நிறுவனர்) தவத்திரு.பிக்ஷு சுவாமிகளின் அடிப்பொடி என தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர். தமிழகத்தின் முன்னோடி இயற்கை நல வாழ்வியல் அறிஞர்களான, திரு.ம.கி.பாண்டுரங்கனார், சிவசைலம் மு.இராமகிருஷ்ணன் போன்றோரின் வழித் தோன்றல்களான

மு.ஆ.அப்பன் (குலசேகரப்பட்டினம்), திரு இர.இராமலிங்கம் (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்), திரு. ஸ்ரீராமுலு (காந்தி இயற்கை மருத்துவமனை, மதுராந்தகம்), யோகாகுரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் (திருமூலர் இயற்கை மருத்துவ அறக்கட்டளை) போன்றோருடன் இணைந்து செயல்படுபவர். தமிழகமெங்கும் இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்திக் கொண்டு வருபவர்,

இயற்கை நலவாழ்வியல் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரும், எழுபதுகளைத் தாண்டி சீரான ஆரோக்கியத்தை கொண்டிருப்பவருமான திரு அ. மெய்யப்பன் சிறுநீர் மருத்துவம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

தமிழ்நாட்டில் உள்ள ராசிபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிவானந்தரின் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், அமைப்பின் தலைவர் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்களை சந்தித்து சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய சர்வரோக நிவாரணி நூல் வாங்கச் சென்ற போது ராசிபுரத்தில்  சுவாமி குரு பிரகாசானந்தா அவர்கள் சிவாம்பு சிகிச்சை பற்றி சொன்ன நாளில் இருந்து சிவாம்பு அருந்தத் தொடங்கி விட்டேன். நான் 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாம்பு அருந்தி வருகிறேன். இயற்கை மருத்துவத்தையும் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு பல நூல்களைப் படித்த பிறகு ஓரளவு தெளிவு பெற்றேன். பெங்களூர் புரானி அவர்கள் சிறுநீர் நாற்றமடிக்காமலும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் இருப்பதற்கு யோசனை சொல்லியுள்ளார். இளநீர், நீர்மோர், தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரிக்காய் பார்லித்தண்ணீர் இவற்றை அருந்த வேண்டும். நாள் முழுவதும்  3லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும்.  தனக்குத் தானே வைத்தியம் செய்வதற்கும் செலவில்லாத  வைத்தியம் செய்வதற்கும் தீராத நோய்களிலிருந்து விடுதலை பெறவும் உதவுவது சிவாம்பு மருத்துவம். எளிய வைத்தியம். விருப்பு வெறுப்பு இல்லாமல் திறந்த மனத்தோடு சிவாம்புச் சிகிச்சையை முதலில் மஜாஜ் செய்வதில் தொடங்கிப் பிறகு அருந்தத் தொடங்கலாம். பலர்  பயனடைந்துள்ள போது அதை நாம் ஏன் செய்து பார்க்கக்கூடாது?  டாக்டருக்கும் பீஸில்லை. மருந்துக்கும் காசில்லை.

என்கிறார் திரு.அ. மெய்யப்பன் அவர்கள்.

சிவாம்புச் சிகிச்சை என்று அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐயங்களுக்கு தீர்வுகளையும், நோய்களுக்கான ஆலோசனைகளையும் நீங்கள் விரும்பினால் இவரிடம் இருந்து பெறலாம் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

சென்னையில் வசிக்கும் திரு.அ.மெய்யப்பன் அவர்களது அழைபேசி எண்:9841667695 / 9444323730 

இந்தத் துறையில் பலர் புத்தகங்களை பல மொழிகளில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவைகளில் சில புத்தகங்கள், குறிப்புக்கள், காணொளிகள், மின்னூல்கள் போன்ற வடிவில் உள்ளவை பற்றி அடுத்து வெளியாக விருக்கும் இத் தொடரின் இறுதிப் பகுதியில் காணவிருக்கிறோம்.

அடுத்த பகுதி. நிறைவுப் பகுதி.

வாழி நலம் சூழ...

வியாழன், 31 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று


அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திப் பகிர்வுகளின் மூன்றாம் பகுதியாக சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய 'சர்வ ரோக நிவாரணி' எனும் நூலில் இருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்.

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று

சிறுநீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

(இது நமது வாசகர் முரளிதரன்.கே நமக்கு அனுப்பி வைத்த பதிவு.. வாசகர்கள் பதிவில் கூறப்பட்டுள்ளவையை மருத்துவ ஆலோசனையின்றி நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
சமீபத்தில் சர்வரோக நிவாரணி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதை மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி பூமானந்தா அவர்கள்.
காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.

ருத்ரயாமளடாமர தந்திரம் என்ற புத்தகத்தில் சிவாம்பு கல்பம்என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரில் பத்தொன்பது போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அளவில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள். சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ளவராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலையில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.

உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு கழுவுவதால், மூலவியாதி, வலி, எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிறது.

சிறுநீரின் உபயோகம்:
இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நோயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும். சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள் வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால் (Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்கக் கூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ள வேண்டும். இருதய நோய் இல்லாதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப் பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வளர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கியத்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.


வீடியோ இணைப்புக்கு:


அடுத்த பகுதியில் நிறைவு.


ஞாயிறு, 27 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி இரண்டு


பகுதி இரண்டு

பகுதி இரண்டுக்குள் செல்லுமுன்:

முற்காலத்தில் சித்தர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்த மருத்துவமுறை இடையில் சுணக்கம் கொண்டிருந்தாலும், தற்காலத்தில் மீண்டும் மக்கள் மத்தியிலும், வெளி நாடுகளிலும் பெருமளவில் புகழ் பெற்றுவருகின்றது. 

சிறுநீர் மருத்துவம் பற்றிய திருமூலரின் திருமந்திரத்தில் அமுரிதாரணை எனும் தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. திருமந்திரத்துக்குள் அமுரி தாரணையைப் பற்றி காண்போமா?
--------------------------

(அமுரி - வீரியம்தாரணை - தரித்தல்அமுரிதாரணையாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர்சிவநீர்வானநீர்ஆகாய கங்கைஅமுத நீர்உவரிதேறல்மதுகள்மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும்சூக்குமத்தில் ஒளியாகவும்பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின் பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரிஅமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)

849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்துமிளகுநெல்லிப் பருப்புகஸ்தூரிமஞ்சள்வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும்ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது
--------------------------------------------------------------------------------------
ஆதாரம்: தமிழ்க்கச்சேரி வலைப்பூ.
இணைப்பு: http://tamilkacheri.blogspot.in/2014/10/blog-post_6701.html
தொடரும் (பகுதி மூன்றில் மற்றொரு செய்தி)
அடுத்து வெளியாக இருக்கும் பகுதி மூன்றில் தவத்திரு பூமானந்தா அவர்கள் எழுதிய நூல் ஒன்றில் இருந்து சில பகுதிகளை காண இருக்கிறோம். மேலும் சென்னையைச் சேர்ந்த பெரியவர் திரு அ.மெய்யப்பன் அய்யா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கப் போகிறோம்.