செவ்வாய், 6 டிசம்பர், 2011

பழனி-கொடைக்கானலில் யோகா மற்றும் இயற்கை நல வாழ்வு முகாம்

பழனி-கொடைக்கானலில் 
ஐந்து நாள் யோகா-இயற்கை 
நலவாழ்வியல் முகாம்.

அவசரமான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் செயற்கை, வேகம் என்று வாழ்க்கை மின்னல் வேகத்தில் விவேகம் இல்லாமல் ஓடிக கொண்டிருக்கிறது. தவறான வாழ்க்கை முறை, எந்திரத்தனமான இயக்கங்கள், தவறான உணவுப் பழக்கங்கள் என்று எல்லாமே தவறாகிப் போன காலகட்டத்தில் எது சிறந்த வாழ்க்கை முறை? என்பதை ஐந்து நாட்கள் இயற்கை சூழலில் வாழ்ந்து பார்க்க விரும்புகிறீர்களா?


மனசுக்கு அமைதியும், உடலுக்கு புத்துணர்வும் தெம்பும் ஊட்டவல்ல பழனி-கொடைக்கானல் மலைச்சாரலின் எழில் சூழ்ந்த இயற்கை வனப்பகுதியில் இம்மாதம் இருபத்து ஆறாம் தேதி முதல் முப்பது தேதி வரை (From 26-12-2011 to 30-12-2011)யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடை பெற உள்ளது.


சலசலத்து ஓடிவரும் நதிப் பிரவாகம், விண்ணில் இருந்து கீழே வீழும் அருவிகள்,  சிலு சிலுவென வீசும் மாசற்ற காற்று, நகரத்தின் சந்தடி இல்லாத இயற்கை அன்னையின் அமைதியான மடியில் தலை சாய்ந்து நிம்மதி பெற்றிட, விண்ணின் சொர்க்கத்தை மண்ணில் இருந்து கொண்டே நவீனத்தின் கோரப் பிடியில் இருந்து விடுபட்டு இந்த ஐந்து நாட்களில் நீங்கள் பெறும் பயிற்சி, எதிர் வரும் ஆண்டுகளில் நோயற்ற வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். 

இந்தப் பயிற்சியின் போது கீழ்க்கண்ட பலன்களை பெறலாம்.
  • யோக ஆசனம்
  • பிராணாயாமம்
  • தியானம்
  • முத்திரைகள்
  • ஆற்றுக் குளியல்
  • மண் குளியல்
  • வாழை இலைக குளியல்
  • சூரிய ஒளிக் குளியல்
  • கண் பயிற்சி
  • ஷட்கிரியாக்கள்
  • ஆழ்நிலை தளர்வுப் பயிற்சி,
  • நலவாழ்வியல் பயிற்சிகளான ஆளுமை திறன் மேம்பாடு
  • உடல், மனம், ஆன்மா சிறப்பான விதத்தில் இயங்கிடத் தேவையான குறிப்புகள்
  • மருத்துவ பரிசோதனைகள் (இரத்த அழுத்தம், உடல் எடை, ரத்த சர்க்கரை போன்றவை)
  • தலை சிறந்த அறிஞர்களின் உரைகள்
  • மூன்று வேளையும் இயற்கை உணவு
  • ஒரு நாள் கொடைக்கானல் சுற்றுலா
  • கோடை மலைச்சாரலில் உள்ள ஒரு இயற்கையான சூழலில் ஒரு நாள் தங்குதல் 
  • பழனி திருக்கோவிலில் தரிசனம்
என பல வகையான அனுபவங்களைப் பெற்று வரவிருக்கும் புத்தாண்டில் புதுமையான புத்துணர்வு பெற்றிட இந்த முகாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  


பழனி கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள சுவாமி தயானந்த குருகுலத்தில் பயிற்சி நடைபெறும். 

கடந்த ஆண்டுகளில் இங்கே நடைபெற்ற முகாம்களின் போது பலர் பங்குபெற்று பயன் பெற்று மகிழ்ந்தார்கள். மிகக் குறைவான எண்ணிக்கையில் அனுமதி நடைபெறுவதினால் பயிற்சியின் போது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். 

பயிற்சிக் கட்டணம்:
மேலே குறிப்பிட்ட அனைத்து பயன்களையும் (தங்கும் வசதி உட்பட) பெற்றிட முகாமுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1250/- மட்டுமே. உங்கள் வளமான வாழ்வுக்கு நீங்கள் செய்யும் சிறிய முதலீடு இது. (ஒருநாளைக்கு ரூ.250)

பணத்தை வங்கிக கணக்கில் செலுத்தலாம். வங்கிக கணக்கு எண்:
Deposit to: R.Murugan
A/C No: 11161453897
Bank: STATE BANK OF INDIA
Branch: PALANI
Branch Code: 0894 (SBI TO SBI) | 
(OTHER BANKs to SBI) SBIN0000894 

முக்கிய குறிப்பு:
டிசம்பர் 2011, இருபதாம் தேதி வரை முழுக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்வோருக்கே முகாமில் அனுமதி உண்டு.

SWAMY DAYANANDHA GURUKULAM
176, Laxmipuram,
Palani - 624601.
Tamilnadu, South India.
Phone: 91-04545-243779
Mobile: -91-9965358991, 98946 85500..
E-mail: contact@yogapoornavidya.com


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள :
திரு.யோகி R.முருகன், பழனி
செல் எண்:98946 85500
வலைத்தளம்:  yogapoornavidya.com
மின்னஞ்சல்: contact@yogapoornavidya.com

A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), சென்னை.
செல் எண்: 9444171339
www.frutarians.blogspot.com
email: ashvinjee@gmail.com

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சமையல் எரிவாயுவுக்கு (கியாசுக்கு) குட் பை சொல்லுங்க...

கியாசிற்கு குட்பை சொல்லுங்க!
 செயலர் திரு வாசுதேவ், 
விவேகானந்தா கேந்திரா அபிவிருத்தி மையம், கன்னியாகுமரி. 
விலை உயர்வு, தட்டுப்பாடு, என்பதற்காக மட்டுமல்ல... ஒரு காலத்தில், இந்த சமையல் காஸ் இல்லாமல் போகப் போகிறது... ஒரு கட்டத்தில், அனைத்துப் எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எதிர்காலத்தில், கியாசை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக் கொள்வதும் கற்றுக் கொள்வதும் காலத்தின் அவசியம். வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக் கழிவிலிருந்தே, எரிவாயு உற்பத்தி செய்யலாம். அதற்காகவே, "சக்தி சுரபி' எனும், எரிவாயு கலனை எங்கள் மையம் உருவாக்கி உள்ளது. 

இதில், இரண்டு வகைகள் உள்ளன:
ஒன்று இடம் விட்டு இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக் கூடிய வகையில், பிளாஸ்டிக் கலனால் ஆனது; 
சக்தி சுரபி (பிளாஸ்டிக் கலன்) நன்றி: vknardep.org
மற்றொன்று, நிலையானது; அது, சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது. கழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயு கொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை, இத்தனையும் சேர்ந்தது தான், சக்தி சுரபி. 

வேண்டாம் என, நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே, இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம், ஒரு நாளைக்கு ஒரு கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். இது, நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்திற்கு போதுமானது. இந்த கலனை, நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும். மாநகரம் அல்லாது, பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானது தான். அப்படி வளர்ப்பவர்களுக்கு, சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். 

வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள் கூட, துணிந்து காசிற்கு குட்பை சொல்லி விடலாம் அல்லது அக்கம் பக்கம் யாராவது மாடு வளர்த்தால் கூட, சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும், 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்திற்கு, ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு, அரசு மானியமும் இருக்கிறது! 
(நன்றி தினமலர் நாளிதழ் - 04-12-2011)

சக்தி சுரபி குறித்த மேலதிக விவரம் பெற இங்கே சொடுக்குக: விவேகானந்த கேந்திரா அபிவிருத்தி மையம் (கன்னியாகுமரி). மையத்தின் இந்த வலைதளம் சக்தி சுரபியை எப்படி உங்கள் இல்லத்தில் நிறுவுவது என்ற முழு விவரங்களையும் உங்களுக்கு அளிக்கிறது. சக்தி சுரபி இயற்கை எரிவாயு கலனை உங்கள் இல்லத்தில் அமைத்து பயன் பெற வேண்டுகிறோம். 


வாழி நலம் சூழ.