வெள்ளி, 31 டிசம்பர், 2010

பகுதி 1:- இயற்கை நலவாழ்வியல் புத்தகங்கள்.

இயற்கை நலவாழ்வியல் தொடர்பான புத்தகங்களைப் பற்றி அறிமுகம் செய்வதற்காக இந்த பதிவினை தொடங்கி உள்ளேன்.

நான் படித்த புத்தகங்களில் இருந்து நான் ரசித்த சுவையான சில பகுதிகளை பதிவிடுகிறேன்.

புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் பெயர், புத்தகத்தின் மதிப்பு, மற்றும் கிடைக்கும் முகவரி போன்றவற்றையும் காணலாம்.

இந்த வகையில் நான் படித்து பெரிதும் விரும்பிய ஒரு புத்தகம் பற்றி இங்கே கூற விரும்புகிறேன்.

1.  புத்தகத்தின் பெயர்:  இயற்கை வாழ்வியல் கலை. (An Art of Natural Life)
2 .  ஆசிரியரின் பெயர்: பிரம்மஸ்ரீ கோ.எத்திராஜ் 

3.  பதிப்பக முகவரி: சித்த வித்தை தவ மையம், சித்த வித்யார்த்தி ஃபௌண்டேஷன், சித்தர் வழிச் சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.  

4.  புத்தக விவரம்:    இயற்கை நலவாழ்வியல் பற்றிய அற்புதத் தொகுப்பு

5. 103 பக்கங்கள்,

6. விலை ரூ.60 மட்டும். (இந்த பணத்தை தவ மைய வளர்ச்சிக்காக பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் கூறி உள்ளார்)

புத்தகத்தில் இருந்து சில சுவையான பகுதிகளை வெளியிடுகிறோம்.

இயற்கை அன்னையின் பேராற்றலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜீவ ராசிகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று துவங்கும் நூல் ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:

முன்னுரை:
''அன்றாட வாழ்க்கையில் இன்றைய நவீன மனித குலம் நெறியற்ற, முறையற்ற தனது உணவுப் பழக்கத்தினால் தன்னைத் தான் இழந்து கொண்டே வருகிறது.''
''உடல் பிரச்சினைகளோடும், மனக் குழப்பங்களோடும், வியாதியைப் பற்றிய சந்தேகங்கலோடும், பக்குவமில்லாத கேள்விகளோடும், நிறைந்து கிடைக்கும் நிறைவின்மைகளோடும் வாழப் பழகி விட்ட மனித சமுதாயம், அவைகளிலிருந்து தம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ளவும், வருங்காலத் தலைமுறைகளுக்கு தெளிவான தீர்வினை அளிக்கவும் தவறிவிட்டது.''
மனிதன் ''பொருளாதாரத்தில் சில இலக்குகளை இவனாகவே நிர்ணயம் செய்து கொண்டு, உடல் பற்றியும், உயிர் பற்றியும் எந்த ஒரு சிந்தனையும், ஆலோசனையும் இன்றி வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றியமைத்துக் கொண்டான். போருலாதாரங்களைத் தேடிக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற தவறான கொள்கையையும் வளர்த்துக்  கொண்டான்....
நிர்ணயித்த பொருளாதார இலக்கை அடைந்த பிறகு, மனிதன் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது, திரும்பப் பெறவே முடியாத பொக்கிஷங்களான அமைதியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் இழந்ததாகவே அவன் அனுபவத்தில் உணருகிறான்.....''
''இழந்தவற்றைஎல்லா திரும்பப் பெறுகின்ற முயற்சியின் போது, அவன் நம்பியிருந்த பொருளாதாரமும் அவனைக் கைவிட்டு விடுகிறது.'' ......
''வாழ்வதற்கு பொருள் அவசியம் வேண்டும் என்ற மனிதன், ''வாழ்வதிலும் பொருள் வேண்டும்'' என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதனால் தான் அவனுக்கு இவ்வளவு தொல்லை''.
''சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிப்பதில்லை. தீர்வுகள் இல்லாமல் எந்தப் பிரச்சினைகளும் உருவாவதில்லை. மனித உடல் மற்றும், மனம் சார்ந்த எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு.

முழு இயற்கை வாழ்வியல் முறையில்  
வாழ முயற்சிப்பது தான்.
''இயற்கை வாழ்வியல் கலை என்பது 500 வருடங்களோ, அல்லது 1000 வருடங்களோ வாழ்வதற்கான வழி முறை அல்ல. மனிதன் வாழும் வரை எவ்வித நோய்களுமின்றி, மருந்துகளும் இன்றி, துன்பங்களின்றி பேரானந்த வாழ்வு வாழ்வதற்கான முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.''
''உலகோரைத் திருத்தவோ அல்லது எனது சுயகருத்துக்களை உங்களிடம் திணிப்பதோ இந்நூலின் நோக்கமில்லை! அது நம்முடைய வேலையும் அல்ல! உலகோருக்கு தெரிவிப்பது நமது கடமை ! திருந்துவதும் திருந்தாமல் போவதும் அவர்களது உரிமை! உண்மையில் நம்மை நாம் திருத்திக் கொள்வதில் தான் பிறவியின் இரகசியம் ஒளிந்திருக்கிறது !
அன்புடன்,
கோ.எத்திராஜ்
சின்னாளப்பட்டி.

நூலாசிரியர் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பட்டியலிட்டு விட்டு பின்னர் அதோடு விட்டு விடாமல் எளிய முறையிலான தீர்வுகளையும் இந்த நூலில் சொல்லுகிறார். 

புத்தகம் பற்றிய செய்திகளையும், சில பகுதிகளையும் வெளியிட அனுமதி தந்தபிரம்மஸ்ரீ கோ. எத்திராஜ் அவர்களுக்கு நன்றி.

முக்கியத் தலைப்புகளில் ஆசிரியரின் தீர்வுகள் பற்றிய சுருக்கப்பட்ட விவரங்கள் கொண்ட பதிவுகள் தொடரும். 


 
அன்பான வேண்டுகோள்:

ஆசிரியர் ஒரு பி.இ. பட்டதாரி இளைஞர். வடகரை சிவானந்தரின் தவ வாழ்க்கை நெறியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திண்டுக்கல் அருகாமையில் ஆத்தூர் அருகே இயற்கை சூழலில், கொடைக்கானல் மலைச் சாரலில் தவமையம் அமைத்து இயற்கை நலவாழ்வினை வாழ்ந்து வருபவர். வடகரை சிவானந்தரின் சித்தவித்தையை ஆர்வம் உள்ளோருக்கு கற்றுத் தந்து வருகிறார்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய அரிய கருத்துக்கள் கொண்ட இப்புத்தகத்தினை ஆசிரியர் எந்தக் கடையிலும் விற்க ஏற்பாடு செய்யவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியரை தபால் மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தினைப் பெறலாம். லாப நோக்கில்லாமல் இந்தப் புத்தகத்தினை வெளியிட்டிருப்பதாலும், தவமைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு புத்தகத்தின் விலை குறிக்கப்பட்டிருப்பதாலும், ஆர்வம் கொண்ட நண்பர்கள் பத்து அல்லது இருபது புத்தகங்களாக மொத்தமாக வாங்கி தங்களுக்குள் விநியோகித்துக் கொள்வது ஒரு சிறந்த முறை. மற்றும் பிறந்த நாள், மண நாள் வாழ்த்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வாழ்த்து சொல்வது போன்ற நேரங்களில் இந்தப் புத்தகத்தை பரிசளிப்பது மற்றொரு சிறந்த முறை.
 
நன்றி.
எளியேனின் 
வலைப்பூவைத் 
தொடர்ந்து பார்வையிட்டு 
ஆசி கூறியும், ஆதரித்தும், 
என்னை வாழ்த்தும்
அன்பு நெஞ்சங்கள் 
அனைவருக்கும் 
எனது நெஞ்சு நிறைந்த 
ஆங்கிலப் புத்தாண்டு  
வாழ்த்துக்கள். 



எதிர் வரும் நாட்களில் 
அன்பர்கள் வாழ்வில் 
அன்பு, ஆனந்தம்,  
தேக நலம்,  ஆன்ம நலம், 
மற்றும் எல்லா வளங்களும், 
அமைதியும், ஆனந்தமும் 
பொங்கிப் பிரவகிக்க 
என் ஈசன் ஆடல் வல்லான் 
அருட்துணையை 
நாடி வணங்குகிறேன். 

அன்புடன்:
 
வாழி நலம் சூழ.
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
 
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com

வியாழன், 30 டிசம்பர், 2010


இயற்கையே இறைவன்;
இயற்கை வழி வாழ்தலே இறை வழிபாடு.


யோகக் கலையின் தமிழ் நூலான திருமந்திரம் அருளிய திருமூலநாயனார். உடல் நலத்தின் சிறப்புகளை பலவாறு பாடியுள்ளார்.
''உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவனே சிவலிங்கம்''
என்றும்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிற்குள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஒம்புகின்றனே.
எனவும்,
உடம்பாரழியிர் உயிராலழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பினை வழக்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
எனவும்,
அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள  
கண்டங் கருத்த கபாலியுமாமே.
என்றெல்லாம் அவர் உடல் நலத்தினை பேணிக்காப்பதைப் பற்றி கூறுகிறார்.
அது போலவே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் மிக அழகாக இதையே
''மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றியுணின்''
எனவும்,
''மாறுபாடில்லா வுண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு''
எனவும் கூறியுள்ளார்.

செய்தியை தந்தவர்: 
திரு மூ.ஆ.அப்பன்,
இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர் 
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்)

புதன், 29 டிசம்பர், 2010


ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட்ஃபுட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
 நன்றி: வெப்துனியா.
இயற்கை உணவும் இரத்தத்தின் தன்மையும்...
(உங்கள் குடும்ப டாக்டர் உங்களிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம் இதோ):

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. 

இயற்கை உணவும் காரத்தன்மை உடையது.  எனவே இயற்கை உணவு  எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். 

ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது  இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். 

உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.  

அந்த போராட்டத்தில் உடல் (நலிவடையும் போது) தோல்வியடையும் போது நாம் நோய் வாய்ப்படுகிறோம்.

அல்லோபதி மருந்துகளும் நச்சத் தன்மை கொண்டிருப்பதினால், உங்கள் இரத்தத்தின் காரத் தன்மையை அமிலத் தன்மையாக மாற்றும் வல்லமை கொண்டவை. 
 
இயற்கை உணவுக்கு மாறுங்கள். உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  

மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவின் மற்ற பகுதிகளைப் படியுங்கள். 

செவ்வாய், 28 டிசம்பர், 2010

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும்.

“இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” என்பது போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப்படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப்படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்றுவரை எடுத்து வந்துள்ளன.

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.

பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித்தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித்தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப்படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப்பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. 

மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப்பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத்தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.













  • தனுராசனம் (வில்)



























































 கீழ் நோக்கும் நாய்
























மேல் நோக்கும் நாய்




































































கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.











எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.











முனிவர்களின் பெயரால்
பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.































தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.























இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.


















இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும்படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே
                              - திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

நன்றி -- ஜடாயு.

திங்கள், 27 டிசம்பர், 2010

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


  
மூன்று நாட்கள் இயற்கை மருத்துவ முகாம்

நாள்:- 21-01-2011 to 23-01-2011 
(வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில்.

நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 


 
ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள: 
திரு Dr. மூ.ஆனையப்பன், 
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465 


நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இயற்கை நலவாழ்வியல். 

நமக்கு நாமே நலம் சேர்ப்போம்.

 நீரின்றி அமையாது உலகு (திருவள்ளுவர்).

நீர் சிகிச்சை முறைகள்.

ஜலநேத்தி கிரியா - மூக்கு கழுவும் உபகரணம்

ஜல நேத்தி கருவி  மூக்கின் உட்பகுதிகளை கழுவிச் சுத்தம் செய்யும் உபகரணமாகும். பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட இவ்வுபகரணம் நீண்ட குழலை தனது மூக்காக கொண்டிருக்கும். 
  
ஜலநேதி கருவி

இதைப் பயன்படுத்தி மூக்கைக் கழுவும் பொழுது, சளி தங்கியிருக்கக் கூடிய குழிகளைச் சுத்தம் செய்து, மூக்கு வழியை ஈரப்படுத்தி, காற்றுப்பாதையின் ஆரோக்கியத்தை மீளக் கொண்டுவருகின்றது. அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக் காரணிகள், தடிமன், தலையிடி, சளியடைப்பினால் ஏற்ப்படும் தலைக்குத்து (சைனசிட்டிஸ்) போன்றவற்றிலிருந்து விடுதலை பெற உதவுகின்றது.

மிகப்பழைமையான யோகா அப்பியாச முறையான கிரியாக்களில் இதுவும் ஒன்று.  சளி, ஜலதோஷம், ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு நல்ல நிவாரணம் தரும் இயற்கை வழியிலான நல வாழ்வியல் பொருட்களில் ஜலநேத்தி கருவி பெரிதும் துணையாகிறது.

ஸ்கன்டினேவியா நாட்டில் ஜலதோஷம் வந்தால் குணப்படுத்தும் முதல் உதவி சாதனமாக இதையே பயன்படுத்துவார்கள் என அறியும் பொழுது இயற்கை நலவாழ்வியல் கருத்துக்கள் எந்த அளவு உலகெங்கிலும் பின்பற்றப் பட்டுள்ளன என்று புரிய வருகிறது. 

ஐரோப்பிய நாட்டின் சிறுவன் ஒருவன் ஜலநேத்தி செய்து கொள்ளுதல்.

கடல் உப்பு நீரின் தொற்று நீக்கும், குணமாக்கும் தன்மைகள் பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து போன்ற நாடுகளில் நன்றே அறியப்பட்டுள்ளன. இன்றைய நாட்களில், மூக்கு வழியை நன்றே சுத்தம் செய்யும் முறையானது, மருந்துகள், மூக்கினுள் சிந்தப்படும் துளிகள், உள்ளுறிஞ்சிகள், தெளிப்புகள் (ஸ்ப்ரே) போன்றவற்றுடன் ஒப்பிடும் பொழுது சிறந்ததாகவும், பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இந்த ஜலநேத்தி உபகரணம் பயன்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது? 
தூளாக்கப்பட்ட சமையல் உப்பை இளந்சூட்டு நீரில் நன்கு கரைத்து ஜலநேத்தி கருவிக்குள் ஊற்றவும். 

உபயோகிக்கத் துவங்கு முன்பாக உப்பு நன்றாக கரைந்து விட்டதை உறுதி செய்து கொள்ளவும். 

குளியலறையில் முகம் கழுவும் தொட்டியின் முன் குனிந்து, தலையை ஒருபக்கமாக சாய்த்து, ஒரு கையில் உபகரணத்தை வைத்துக் கொள்ளவும். 

மூக்கின் பின்புறமாக அமைந்த எலும்புக் குழியிலும் (சைனஸ்), ம்யூகஸ் மேம்பரீன் எனப்படும் சளியப்படை மேற்பரப்புகளிலும், மிகவும் நுண்ணிய (உருப்பெருக்கு கண்ணாடியால் மட்டுமே பார்க்ககூடிய) மயிர் வளர்ச்சிகள் காணப்படுகின்றன. இந்த முடிகளின் அசைவானது, வயலில் காற்று வீசும் பொழுது நெற்பயிரானது ஒரேதிசையில் சாய்ந்து அசைவது போன்றிருக்கும். மெல்லிய சளியப்படையினால் போர்த்தப்பட்டிருக்கும் இம்மயிர்த் தொகுதிகளில் பாக்டீரியாக்கள், பூக்களின் மகரந்தத் துகள்கள், சிறிய தூசுகள் மற்றும் இறந்த செல்களின் சிறுதுணுக்குகள் போன்றவை இச்சளியப்படையில் ஒட்டிக்கொள்கின்றன. 

ஆரம்பத்தில்  மயிர் வளர்ச்சியின் அசைவின் பொழுது ஒட்டிக் கொண்ட இவைகள், பின்னர் ஏற்படும் தொடர் அசைவின் காரணமாக மூக்கின் அடிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக தொண்டை வழியாக இரைப்பையை சென்றடையும். மலத்தில் சளி காணப்படுவது இவ்வகையில்தான். 

வைரஸ் நோய்க்கிருமிகளும், ஒவ்வாமைக் காரணிகளும், மயிர்வளர்ச்சியின் செயற்பாட்டை திறனிழக்கச் செய்யும் பொழுதோ அல்லது சளியப்படை உலர்ந்து, கடினமாகும் பொழுதோ, இயல்பான மூக்கின் செயல்பாடு தடைப் படுகிறது. 

மூக்கின் அடிப்பகுதியை உப்பு நீர் கொண்டு கழுவும் பொழுது, காய்ந்த சளியப்படை, தூசி, மகரந்ததூள்கள், வைரஸ், ஒவ்வாமைக் காரணிகள் அகற்றப்படுவதோடு, சளியப்படை ஈரப்படுத்தப்பட்டு, மயிர் வளர்ச்சியின் இயல்பான அசைவுகள் திரும்பவும் செயல்படுத்தப்படுகிறது. மூக்கின் உட்பள்ளமானது, எலும்புக்குழி(சைனஸ்)களுடன் சிறிய வழிகளினால் இணைக்கப்பட்டுள்ளது.

சளிய மென்படை, நோய் தொற்றின் போது (உதாரணம்: சாதாரண ஜலதோஷம் (காமன் கோல்ட்) வீக்கமடையும். அச்சமயத்தில் சிறு வழிகள் அடைக்கப்பட்டு சைனஸ் தோன்ற (சைனசிட்டிஸ்) வாய்ப்பளிக்கிறது. 

 
முறையாக தொடர்ந்து மூக்கை கழுவி வந்தால், சிறுவழிகள் அடைப்புக்களின்றி தெளிவாக இருப்பதோடு, உப்புத் தண்ணீர் பயன்படுத்தப்படுவதனால், காரநிலை (alkalinity) செயல்படுத்தப்படுகிறது. இதனால் வைரஸ் நோய்க்காரணிகள் வளரமுடியாது போகின்றன. 

ஆஸ்த்மா வியாதி உள்ளவர்களின் நோய்த் தாக்கத்தின் பொழுது, சளியப்படை வீக்கமடைந்து, நாசியின் உட்சுவாச வழி அடைபடுகிறது.  அதனால்தான் அவர்களுக்கு மூச்சிறைப்பு ஏற்படுகிறது. இதனால் வாய்வழிச் சுவாசம் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இவர்கள் ஜலநேத்தி கருவி கொண்டு முறையாக மூக்கைக் கழுவுவதனால் இந்நிலை நீங்க உதவி செய்யும். 

ஏன் இதை நாம் பயன்படுத்த வேண்டும்?  
நோய் நிலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மூக்கை தொடர்ந்து கழுவி வந்தால், மூக்குக்குழி, மேல் சுவாசத் தொகுதி ஆகியவற்றில் ஏற்ப்படக் கூடிய நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம். காது, மூக்கு, தொண்டை நோய்க்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ள மிக எளிய வழியாகும் இது. 

ஆதிகாலத்தில் முனிவர்கள், சாதுக்கள் தங்கள் கையில் கமண்டலத்தை வைத்திருப்பதை படங்களில் பார்த்திருப்பீர்கள். அவர்களது ஆரோக்கியத்துக்கான யோகக் கிரியைகளை செய்யும் கையடக்கக் கருவியாக கமண்டலங்கள் பயன்பட்டன என்பது இப்போது தெளிவாகிறது. 
 
மேலே - கமண்டலத்தின் இந்நாள் வடிவம். 


மேலே - யோகிகளின் கையில் உள்ள கமண்டலம்.

பயன்படுத்தும் முறை - 
  • கருவியை தயாராக வைத்துக்கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி உப்பை கருவிக்குள் இட்டு, பின்னர் இளந் சூட்டு நீரில் (8 அவுன்ஸ்) நன்கு கரைக்கவும். நன்கு கரையாத உப்பு துகள்கள் நாசியில் அரிப்பை ஏற்படுத்தும், உப்பு நன்கு கரைந்திருந்தால் அரிப்பு ஏற்படாது.  (குறிப்பு: முதன் முறை பயன்படுத்தும் பொழுது, 1 தேக்கரண்டியிலும் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம். சில நாட்கள் அனுபவத்தின் பின்னர், அளவை 1 தேக்கரண்டிக்கு உயர்த்திக் கொள்ளலாம். (உப்புக் கரைசலை ஒரு பாத்திரத்தில் முன்னதாக தயாரித்து பின்னர் ஜலநேத்தி கருவிக்குள் விடலாம்). 
  • முகம் கழுவும் தொட்டியின் முன் நின்று கொண்டு தலையை ஒரு புறம் சாய்க்கவும் - (ஒரு காது கீழே படுக்கவாட்டாகவும், மற்றையது மேலாகவும் வரும்வரை)
  • கருவியின் நீண்ட மூக்கை, மேற்புற மூக்குத் துவாரத்தினுள் உட்புகக் கூடிய தூரம் வரை செலுத்திய பின், கருவியை சற்று உயர்த்தி மெதுவாக உப்பு நீரை உள்ளே விடவும். இந்த நேரத்தில் தொடர்ந்து வாயினால் மட்டுமே சுவாசிக்க வேண்டும். அப்போது மற்ற மூக்குத் துவாரத்தின் வழியாக நீர் வெளியேறும்.
  • ஏறக்குறைய பாதி நீரை ஒரு மூக்குத் துவாரத்தினுள் விட்டபின் நிறுத்தி, தலையை மறுபக்கம் சாய்ந்து, மேற்புற மூக்குத் துவாரத்திற்குள் முன்பு போல எஞ்சிய நீரை விடவும். 
 நாசியைச் சுத்தப்படுத்தும் முறை. 
படம் (B)யில் தலையின் கோணத்தைக் கவனிக்கவும்.
  • இப்பொழுது மூக்குத் துவாரம் சற்று காயும் வண்ணமாக, வேகமாக வெளிச் சுவாசம் செய்யவும். அதாவது காற்றை இழுத்து வேகமாக வெளி விடவும். வெளி வரக் கூடிய கழிவுகளைச் சிந்தி அகற்றவும். சில சமயங்களில் பலதடவை சிந்தி கழிவுகளை வேண்டியிருக்கும். 
  • இப் பயிற்சியினை ஆரம்பத்தில், காலையிலும், மாலையிலும் செய்யலாம். அதிகமாக கழிவு தங்கியிருந்தால், நாளுக்கு 3 - 4 தடவை செய்யலாம். ஒரு வாரத்திகுப் பிறகு, மூக்கு அடைப்பின்றி, சுத்தமாக இருப்பதை உணர்வீர்கள். சுத்தமான இந்நிலையில, தினமும் காலையில் ஒரு முறை செய்து வந்தால் போதுமானதாகும். 
  • மேலும் மூக்கடைப்பு அல்லது சளிகூடி அடிக்கடி சிந்தவேண்டியாதாக வேண்டி வந்தாலோ, சளி ஒழுகினாலோ அப்போது எல்லாம் அடிக்கடி மூக்கை இதே முறையில் கழுவிக் கொள்ளலாம். 
முறையாக தொடர்ந்து மூக்கைக் கழுவுவதனால் ஏற்படும் பல நன்மைகளில் சில:- 
  • நாசித் துவாரங்களில் தெளிவான, அடைப்பில்லாத வழி கிடைப்பதனால் சுவாசம் இலகுவாகிறது. அதிகமாக சுரந்த சளி, மற்றும் அதில் சிக்கிய கிருமிகள், ஒவ்வாமைக் காரணிகளும், கழிவுகளும், தூசி, புகை, அரிப்பை ஏற்படுத்தும் அடைப்புகள் எதுவாகிலும் கழுவி அகற்றப்படுகிறது. 
  • நாசித் துவாரங்கள் உலர்ந்து போயிருந்தால் அவற்றை இந்த முறையிலான மூக்குக் கழுவுதல் ஈரப்படுத்துகின்றது. இதன் மூலமாக மூக்கின் உலர் நிலையால் ஏற்படும் சளித் தேக்கத்தை அகற்ற உதவுவதோடு, மூக்கு இரத்த போக்கு தவிர்க்கப் படுகிறது. 
  • உடலின் முதல் நோயெதிர்ப்பு செயல்பாடு அமைந்துள்ள மெல்லிய சளியப்படையலுக்குள் (mucus membreen) கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் சிக்குவதினால் சளியப்படையலின் நோய் எதிர்ப்பு செயல்பாடு குறைந்து போகிறது. இந்த முறையில் சுத்தம் செய்யும் போது சளியப்படைத் தொகுதிகள் திறம்பட செயல்படத் துவங்குகின்றன. 
  • இந்த செயல் முறை சுலபமானது. இயற்கை வழியிலானது, மருந்துகளற்றது, எனவே பக்க விளைவுகள் அற்றது. மேலும் செலவு குறைந்தது, எவரும் பிறர் துணையின்றி தனக்குத்தானே எளிமையாக செய்துகொள்ளக் கூடியது. 
  • மூக்கின் உட்புறம் ஆரோக்கியமாக இருப்பதனால் சுவையுணர்வும், முகர்வுணர்வும் (மோப்பம்) மேம்படுகிறது.
  • சுவாசத் தொகுதி சம்பந்தமான நோய்களான ஆஸ்மா, மகரந்தக் காய்ச்சல் (ஹேஃபீவர்),  நீண்ட நாளாக இருக்கும் ஜலதோஷம் (கோல்ட்), சளியினால் தோன்றும் காய்ச்சல் (இன்புளுயன்சா), சைனஸ் என்னும் சளிச் சேர்க்கை, போன்ற தொல்லைக்களில் இருந்து நலத்துக்கு மீண்டு வர மிகவும் பயனுள்ளதாகும். 
  • மூக்கு குழல்களின் பாதைகள் சுத்தமாவதினால் அதுவரை செய்து வந்த  வாய்வழிச் சுவாசம், இயல்பான மூக்கு வழிச் சுவாசத்திற்கு மாற்றப்படுகின்றது.
  • மூக்கைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பதனால், தொண்டை, சுவாசக் குழல் பாதைகள் சுத்தமாக இருப்பதுடன் பார்வை தெளிவுறுவதுடன், தெளிவான சிந்திக்க வழி உண்டாகிறது. 
  • நோய்க் காரணிகள் அகற்றப்படுவதனால் உடலின் நோயெதிர்ப்பு செயற்பாட்டிற்கான தேவை குறைக்கப்படுகிறது. நோய் எதிர்க்கும் செயல்களைச் செய்ய உடலுக்கு நிறைய சக்தி தேவைப் படும். அச் சக்தி விரயமாகாமல் தடுக்கப்படுவதினால் நமது ஆரோக்கிய நல வாழ்வு மேம்படுகிறது.
முக்கிய குறிப்பு: ஜல நேத்திக் கிரியா முறையில் மூக்கு கழுவும் முறையானது, மிகவும் நாள்பட்ட நோய்களுக்கு (chronic diseases) சிகிச்சை தரும் முறை ஆகாது. மூக்கு, காது, தொண்டை வழிகளில் நீண்ட நாள் நோய்கண்டவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

நன்றி: கூகிள் இமேஜஸ் படங்கள்.


இடுகைக்கு நன்றி: நலமே பொலிக வலைப்பூவில் இருந்து மீள்பதிவிட்டவர் : அஷ்வின்ஜி.

சனி, 18 டிசம்பர், 2010

20.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...
பகுதி 18 :         ஏ.சி.வரமா? சாபமா?
பகுதி 19 :    சில இயற்கை உணவு குறிப்புகள்
மேலும் தொடர்கிறது....

நிறைவுப் பதிவு.

40.  இயற்கை உணவு: உலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு
(1) பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம். பிளாஸ்டிக்  பைகளை உபயோகிக்க தேவையில்லை.  பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில்  அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது.  தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும்.
(2) கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும்.
(3) அஹிம்சை தழைக்கும்.
(4) அமைதி நிலைக்கும்.
(5) ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச வித்தியாசங்கள் மறைந்து விடும்.
(6) ஒற்றுமை ஓங்கும்.
(7) மக்கள் தொகை பெருக்கம் இருக்காது.
(8) மூட பழக்க வழக்கங்கள் இருக்காது.
(9) பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர்.
(10) கணவன் & மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.  அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும்.
(11) எரி பொருள் (எரி வாயு, விறகு) தேவை இருக்காது.  எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை.  அந்நிய செலாவணி  மிச்சமாகும்.  விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை.
கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம்.
(12) பொருளாதாரம் முன்னேறும்.
(13) பஞ்சம் இருக்காது.
(14) தீ விபத்துக்கள் இருக்காது.
(15) வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும்.
(16) சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும்.
(17) மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.(செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது).
(18) மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும்.
(19) மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் ’க்ளோபல் வார்மிங்’ தடுக்கப்பட்டு விடும்.
(20) மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும்.
(21) குற்றங்கள் மறைந்து விடும்.
(22) உணவு கலப்படம் செய்ய முடியாது.
(23) உணவுப் பதுக்கல், கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது.  இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது.   மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும்.
(24) பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும்.
(25) ஓருலகம், ஒரு இனம், ஒரு கூட்டாட்சி உருவாகும்.


41.        பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
               ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
               தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை

பழக்கங்கள் உருவான பிறகு அதை விடுவது மிகவும் கடினம்.  சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளவயதில் அவர்கள் விருப்பியதை எல்லாம்  வாங்கித் தருவார்கள்.  நடுத்தர வயது வந்த பிறகு அவர்கள் கட்டுப்பாடாக இருந்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.  இது ஒரு பெரிய  தவறாகும்.  இதனால் குழந்தைகள் ருசிக்கு அடிமையாகிறார்கள்.  அளவுக்கதிகமான உணவை குழந்தைகளுக்கு திணிக்காதீர்கள்.  அது மூளையின்  திறனை பாதிக்கும்.  அவர்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கெடுதல் செய்கிறார்கள்.  கொஞ்சமாக கொடுத்தாலும்  சத்துள்ளதாக கொடுங்கள்.  நமது அன்பை உணவை திணித்து காட்ட வேண்டியதில்லை.  அவர்கள் உணவை மறுத்தால் பட்டினியாக இருக்கட் டும்.  ஒரு வேளை உணவு உண்ணாவிட்டால் பெரிய தவறேதும் இல்லை. நன்மையே.  நன்கு பசியான பிறகு அவர்கள் தானாக சாப்பிடுவார்கள்.   குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை.  சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.  புதிதாக திருமணம்  ஆனவர்களும் கர்ப்பிணி பெண்களும் தங்கள் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொண்டு உடல், மன அளவில் ஆரோக்கியமான குழந் தைகளை பெறலாம்.  பெற்றோர்களும், ஆசிரியர்களூம் இந்த செய்தியினை ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  கு ழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.  எனவே அவர்கள் இயற்கை உணவு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், கதைகள், பொம்மலாட்டம், விளையாட்டுகள், படக்காட்சிகள் மூலம் விளக்கலாம். நோயில்லா  ஆரோக்கியமான உலகம் வருங்காலத்தில் மலரும்.


42.        இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு

மேற்கூறியவை சிலருக்கு நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று தோன்றலாம்.  ஆனால் தனி மனித மாற்றமின்றி சமுதாயத்தில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  இது வரை அதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன.  சிறு துளி பெருவெள்ளம்.  எனவே சமுதாய மாற்றத்திற்கு இயற்கை உணவு, அக்குபிரஷர், தியானம் மட்டுமே உதவும்.  சமுதாயத்தில் உள்ள அத்தனை  தீமைகளுக்கும் சமைத்த உணவே காரணம்.  ஒரு தீமையை ஒழிக்க நாம் அது உருவாகும் ஆணி வேரை அழிக்க வேண்டும்.  மேலெழுந்த வாரியான  தீர்வுகள் ஒரு போதும் பயன் தராது.  
 
மதர் தெரஸா,  ''உலக அமைதி என்பது ஒருவரின் இல்லத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்''. 
 
உள்ள அமைதிக்கும், உலக அமைதிக்கும் பழங்களே உன்னத பலனை த ரும்.


இயற்கை உணவு குறித்த தங்கள் சந்தேகங்களை e-mail: lram12062000@gmail.com என்ற முகவரிக்கு  அனுப்பலாம்.

 43.       மனிதன்: பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி
மனிதனின் அடிப்படை தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம்
 
(1) உணவு: பழங்களூம் கொட்டைபருப்புகளும்
 
(2) உடை: உண்பது நாழி, உடுப்பது இரண்டே.
எனவே 2 உடைகள் போதுமானது.  பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சை பெற்றுக் கொள்ளலாம். அதை  இராட்டையின் மூலம் உடையாக்கிக் கொள்ளலாம்.  பெரிய பெரிய ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது.  துணிகளுக்கு  சாயம் ஏற்றுவதால் ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
 
(3) இருப்பிடம்: சிறு சிறு மண் வீடுகளும், பனை, தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசைகளுமே போதுமானது.  (பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள்  மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது.  மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியே இறக்கிறான்.

மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசு படுத்த வேண்டியதில்லை.  இயற்கை சுழற்சி சமநிலையில் இருக்கும்.  விஷங்களை  கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை.  இவையே மனிதனின் தேவைக்கானவை.  மற்றவை மனிதனின் பேராசைக்கானவை.  நமது  பேராசையே நம்மை ஆயுதங்கள், பஞ்சம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது.


44. ஆவதும் அவனாலே(டெஸ்டுட்யூப்,க்ளோனிங்) அழிவதும் அவனாலே(ஆயுதங்கள்) என்ற நிலைக்கு வந்து விட்டான்.  அவன் ஒரே சமயத்தில் முட்டாளாகவும் அறிவாளியாகவும்  இருந்து வருகிறான்.  எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.  வேறு எந்த  உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது.

    இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன் 
பணத்தை சாப்பிட, சுவாசிக்க முடியாது 
என்பதை மனிதன் உணருவானா?

நிறைவு.
அன்புள்ள நெஞ்சங்களே..

''ஆரோக்கியம் ஆனந்தம்'' என்கிற இந்த தொடரை இங்கே பதிப்பிக்க அனுமதி தந்தமைக்கு திருமதி ரதி லோகநாதன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரியில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இந்த பதிவுகளில் நீங்கள் படித்த விஷயங்கள் புத்தக வடிவில் கிடைக்கும். அனைவரும் வாங்கிப் படித்து, பின்பற்றவும். உங்கள் சந்ததியினரும் படித்துப் பயன் பெறும் வகையில் புத்தகத்தை அவர்களையும் படிக்கச் சொல்லவும். மற்றவர்களுக்கும் பரிசளிக்கலாம். வீடும் நாடும் பயனடைவதின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாத்து, இந்த பூமியையும் பாது காக்கலாம். 

நன்றி.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

19.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...

பகுதி18 :         ஏ.சி.வரமா? சாபமா?

மேலும் தொடர்கிறது....

37.    சில இயற்கை உணவு குறிப்புகள்
(1) இயற்கை பால்: தேங்காய் பால்.  வெல்லம், கருப்பட்டி, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
(2) கேரட் ஜுஸ்: தேங்காய்+கேரட்+இஞ்சி(சிறிய துண்டு)
(3) இயற்கை சாக்லேட் பால்: தேங்காய்+பேரிச்சை மிக்ஸியின் உதவியுடன் இவைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம்.  டின்னில்  அடைக்கப்பட்ட பழரசங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
(4) காய்கறி சாலட்: உப்பு குறைவாக+மிளகு பொடி+ எலுமிச்சை துளிகள். ஜீரகத்தூள், மல்லித்தூள் சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
(5)பழ சாலட்: பழத்துண்டுகள்+தேன்
(6) பழம்+பேரிச்சை அரைத்து லட்டு போல பிடித்து அதற்கு மேல் முந்திரி+உலர் திராட்சை அழகுக்கு வைத்து குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரமாக  கொடுக்கலாம்.
(7) பழரசம் : பழத்துண்டுகள் மிதக்க விட்டு கொடுக்கலாம்.


38.   நமது குடும்பத் தேவைகளுக்கேற்பவும் கிடைக்கும்
பழங்கள், கொட்டைபருப்புகள், காய்கறிகளுக்கேற்பவும் நாமே பல வித உணவுகளை உருவாக்கலாம். உணவு தயாரித்த உடனேயே உண்டு விட  வேண்டும்.  தாமதிக்காமல் உண்ணுவது நல்லது.
      
39.  இயற்கை உணவு - சுருக்கமாக
உட்கொள்ள வேண்டிய உணவுகள்: தேங்காய், கொட்டை பருப்புகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா & வறுக்காதது), பேரிச்சை, வாழைப்பழம், சீசனுக்கு  கிடைக்கும் எல்லா பழங்களும், பச்சை காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்: அசைவ உணவு, முட்டை, பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடை, பனீர்(பால், பால் பொருட்கள்)
 

சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு:
 
தவிர்க்க வேண்டியது        மாற்று உணவு
                   
(1) சர்க்கரை                         வெல்லம், கரும்பு சர்க்கரை, கருப்பட்டி
(2) பொடி உப்பு                      கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு   கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்  
(4) மிளகாய்                                    மிளகு
(5) புளி                                                எலுமிச்சை
(6) கடுகு                                            சீரகம்
(7) காபி, டீ                          லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காபி, வரக் காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி        அவல், சிகப்பரிசி (கைக்குத்தல் வகைகள்)
 
குறிப்பு: இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம், தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை இயற்கை  உணவுகள் அல்ல.  அவை தீமைகள் குறைவாக செய்யும்.
 
முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும்.  இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது. (உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த  நேரமே போதும்.  எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும்.)  ஜீரணக் கோளாறுகளும் குறையும்.  முடியாதவர்கள்  காலை உணவாக ஆரம்பிக்கலாம்.  அளவு, கலோரி கணக்குகள் கிடையாது. பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம்.   தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.  கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல்  வெளியேற்றும்.

(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை

புதன், 15 டிசம்பர், 2010

18.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
 
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
 

பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...
 
மேலும் தொடர்கிறது....

35.  ஏ.சி.வரமா? சாபமா?
ஏ.சி. ஒரு மிகப் பெரிய சாபமாகும்.  அது தேவையேயில்லை. நம் முன்னோர்கள் சமைத்த உணவு உண்டாலும் அவர்கள் நன்றாக  வெயிலில் வேலை செய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது.  சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது.  எனவே அவர்கள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள்.  நாம் நீராவிக் குளியல், வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்கு வெளியேற எடுக்கிறோம்.  ஆனால் ஏ.சி.  வியர்க்க விடுவதில்லை.  இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம்.  ஆனால் இது மிகவும் கெடுதலானது.  எனவே நாம் நம்  அறைகளில் ஏ.சி. இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது.  இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை.  மேலும் நாம்  தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.  பிறகு ஏ.சி., பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி. யில் இருப்பதை போல உணரலாம்.  ஏ.சி. மற்றும் குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள்  ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன.  இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து (அல்ட்ரா வயலட் ரேஸ்) காக்கின்றன என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.

36. இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்
(1) உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும்.  களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

(2) தோல் மிருதுவாகவும், இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும்.  மற்ற முறைகள் ( உடற்பயிற்சி, ஜிம், உணவுக் கட்டுப்பாடு,ம ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.

(3) கூந்தல் மென்மையாக இருக்கும்.

(4) அழகு க்ரீம்கள், ஷாம்பூ, எண்ணெய் போன்றவை தேவையிருக்காது.  தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு (பாசிப் பயிறு, கடலை மாவு)  போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.  வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம்.   கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும், கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம்.  கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம்.  அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும், வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும்.  இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும், தொட்லிகளிலும் வளர்க்கலாம்.  மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.
 
(5) கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும்.
 
(6) நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
 
(7) உடல் இறகு போல இலேசாக இருக்கும்.
 
(8) உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.  நாம் உடலை தூக்க வேண்டியதில்லை.
 
(9) நகங்கள் உடைவது நிற்கும்.  நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது.
 
(10) பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும். ஈறுகளில் இரத்தம் வடியாது.
 
(11) பொடுகு மறைந்து விடும்.
 
(12) நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும்.
 
(13) கருவளையங்கள் மறையும்.
 
(14) புத்தி கூர்மையடையும்.
 
(15) மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும். மூச்சு இரைக்காது.
 
(16) இளமையாக் காட்சியளிக்கலாம்.
 
(17) புண்களில் சீழ் பிடிக்காது.  வலியிருக்காது.  விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது.
 
(18) குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும்.
 
(19) உடலின் உள், வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும்.
 
(20) அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும்.

(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.