வியாழன், 2 டிசம்பர், 2010

13.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.


பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

பகுதி 12 : ஸ்பேஸ் லா (வெளி விதி) மற்றும் தினசரி உணவில் தவிர்க்க/குறைக்க வேண்டிய சங்கதிகள்.


ஆரோக்கியம் ஆனந்தம் தொடர்கிறது......

22. சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)

வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம்.  இதில் பழச்சாறுகள்  மட்டுமே அருந்த வேண்டும்.  
 
நன்மைகள்:   

(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு.  எனவே உடலின் ஆற்றல் முழுவதும்  கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
 
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும். 
 
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால் உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.

(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர். 

23. சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
    
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
    
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது  உகந்தது அல்ல.  அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண வேண்டும்.
    
(3) சாறு ண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.


புதன், 1 டிசம்பர், 2010

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


ஏழு நாட்கள் நடைபெறும் 
யோகா இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம். 

இடம்: திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள கருங்குளம் என்னும் ஊரில் நடை பெறுகிறது. 


நாள்: 05-12-2010 to 11-12-2010 

வழங்குபவர்கள்:இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

----------------------------------------------------------------------------------

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் 
விழிப்புணர்வு மூன்று நாள் முகாம். 


இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 


நாள்: 17-12-2010 to 19-12-2010 

வழங்குபவர்கள்:
இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

---

ஞாயிறு, 28 நவம்பர், 2010

12.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.


பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

ஆரோக்கியம் ஆனந்தம் தொடருகிறது....

20. ஸ்பேஸ் லா(வெளி விதி)

வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை  உண்டு வந்தாலே போதும்.  வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை.  வேறு எந்த ஜீவராசிகளும் உணவை  இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும் பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன.  எதில்  புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்பு, விட்டமின்கள், உப்புகள் இருக்கிறது என பார்த்து உண்பதுல்லை.  ஆனால் அவை தங்களின் வாழ்நாளை  ஆரோக்கியமாகவே கழிக்கிறது.  இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய், பேரிச்சை, வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள்  அனைத்து உள்ளன.  இவை வருடம் முழுவதும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.  மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும்  உண்ணலாம்.  (மாம்பழம், சப்போட்டா, தர்பூஸ் போன்றவை). விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப் பால்,  காய்கறிகளின் ஜுஸ்கள், கீரை(புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பாலாக்கு) ஜுஸ்கள் பருகலாம்.  டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,  புரதச்சத்து கொண்ட உணவுகள், ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை.  இயற்கை உணவு உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற  சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும் நினைத்துப் பார்க்கவேண்டும். யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும் அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.

21. சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு

குறைக்க வேண்டியது - மாற்று உணவு
(1) சர்க்கரை குறைக்கவும். மாற்று:வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு 
குறைக்கவும். மாற்று:
 கல் உப்பு

(3)கரையாத கொழுப்பு குறைக்கவும். மாற்று: கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்

(4) மிளகாய் குறைக்கவும். மாற்று: மிளகு
(5) புளி குறைக்கவும். மாற்று:எலுமிச்சை
(6) கடுகு குறைக்கவும். மாற்று:சீரகம்
(7) காபி,டீ   குறைக்கவும். மாற்று: லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி குறைக்கவும். மாற்று: அவல், சிகப்பரிசி


இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை (முற்றிலும்) இயற்கை  உணவு அல்ல.  ஆனால் இவற்றினால் சிறிது தீமை குறைவு.

ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: கோவை ரதி லோகநாதன்.