சனி, 30 அக்டோபர், 2010

6. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
இரதி லோகநாதன், கோவை
16.  கேள்விகள் பல;  ஆனால் பதில் ஒன்று

(1) மனிதனுக்கு மட்டும் ஏன் வியர்க்கிறது?

(2)ஏன் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும் சோர்வடைவதில்லை? ஏன் மனிதனுக்கு சிறிது தூரம் பயணம் செய்தவுடன் பயணக்களைப்பு ஏற்படுகிறது?

(3) ஏன் மனிதனுக்கு மட்டும் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், புற்று நோய், வலிப்பு நோய், தொழு நோய் போன்ற நோய்கள் வந்து தன் ஆயுட்  காலம் முடியுமுன்னரே இறக்கிறான்?

(4) பணம் இருந்தும் மனிதன் ஏன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை?

(5) ஏன் மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?

(6) ஏன் மனிதன் தான் இறந்த பிறகு சிறு தூசியை கூட எடுத்துச் செல்ல முடியாது என தெரிந்தும் பணம், புகழ் என முட்டாள்தனமாக  அலைகிறான்?

(7) உண்பது நாழி, உடுப்பது இரண்டே எனும் பொழுது ஏன் மனிதர்கள் ஆடை அணிகலன்கள் மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்?

(8) பணமும், படிப்பும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றால் படித்த பணக்கார மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

விடை: ஏனென்றால் மனிதன் மட்டுமே உணவை சமைத்து உண்கிறான்.

17.  யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், உடற்பயிற்சிகள் சில உண்மைகள்

இயற்கை உணவை உண்ண ஆரம்பித்த உடன் உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.  குரங்குகள், அணில்கள் போன்ற  விலங்குகள் மரத்திற்கு மரம் தாவி குதித்தாலும் கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை.  அவை ஜிம்முக்கோ யோகா வகுப்புக்கோ   செல்வதில்லை. இயற்கை  உணவு உண்டால் நாம் பல யோகாசனங்களை  சுலபமாக செய்யலாம். தினசரி யோகா   உடற்பயிற்சி செய்ய தேவையில்லை.  அந்த நேரத்தை நாம் தியானம் செய்ய பயன்படுத்தலாம்.  

உடற்பயிற்சியினால் வெளிப்புற தசை வளர்ச்சி மட்டுமே அதிகரிக்கும்.  உள் உறுப்புகள் உறுதியாகாது.  நோயில்லாமல் இருக்கவும் உத்திரவாதமில்லை.  பலவான்கள் எனக் கூறிக் கொள்ளும் பலர் வாழ்க்கையின் சிறிய பிரச்னைகளை சந்திக்க கூட பயப்படுவர்.  இயற்கை  உணவும் தியானமும் மட்டுமே உடல், மனம் இரண்டையும் வலுவாக்கும்.  நோயற்ற வாழ்விற்கும் உட்புற மனமகிழ்ச்சிக்கும் இயற்கை உணவே  சிறந்தது.  உடற்பயிற்சியால் எடையை வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆரோக்கியத்திற்கு உத்திரவாதமில்லை.

18. பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்

(1) இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.அ.அப்பன்
(2)நம் நலம் நம் கையில்  -  தேவேந்திர வோரா
(3)எளிய முறை உடற்பயிற்சி - வேதாத்திரி மகரிஷி

மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு

(1)எது மனித உணவு? - ம.கி. பாண்டுரங்கம், சென்னை
(2)நோயின்றி வாழ முடியாதா? -  மூ. இராமகிருஷ்ணன்
(3)தென்னைச் செல்வம் - கே.எஸ். லெட்சுமணன்
(4) வாழைச் செல்வம் - கே.எஸ்.லெட்சுமணன்
(5)இயற்கை மருத்துவம் - க. அருணாச்சலம்
(6) மருந்தில்லா மருத்துவம் - கே.ஆர். வேலாயுதராஜா

19.  இயற்கை சிகிச்சை முறைகள்

    (1) வாழையிலைக் குளியல்
    (2) மண் குளியல்
    (3) நீராவிக் குளியல்
    (4) முதுகு தண்டுக் குளியல்
    (5) இடுப்புக் குளியல்
    (6) கண் குவளை
    (7) மூக்கு குவளை
    (8) எனிமா
    (9) ஈரத்துணிப்பட்டி
    (10) ஈரமண் பட்டி
    (11) சூரிய ஒளி குளியல்

அடுத்த பதிவில் இருந்து மேலே குறிப்பிட்ட இயற்கை சிகிச்சை முறைகளைப் பற்றிய விளக்கங்கள் தொடரும்....

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக