வியாழன், 21 அக்டோபர், 2010

2. ஆரோக்கியம் ஆனந்தம்.


இயற்கை நலவாழ்வியல்.

முந்தைய பகுதிகள்

அறிமுகம். 
பகுதி: 1

2.  இயற்கை உணவு என்றால் என்ன?

இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவையே இயற்கை உணவு என்கிறோம். (சூரிய வெப்பத்தால் சமைக்கப்பட்ட உணவு). இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல் சமைக்கமால், வேகவைக்காமல், வறுக்காமல் அப்படியே பச்சையாக உண்ண வேண்டும்.  நாம் உணவை சமைப்பதால் அதன் சத்துக்கள் அழிந்து விடுகின்றன. நாம் இறந்த உணவையே உண்கிறோம். அதனால் தான் மனிதன்  நோயாளி  ஆகிறான்.  உலகில் வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை.
        
3. மனிதன் சைவமா?

(1) மனிதன் மற்றும் தாவர பட்சிணிகள் நீரை உறிஞ்சி குடிக்கும். ஆனால் மாமிச உணவுகள் நீரை நக்கி குடிக்கும்.
 
(2) மனிதனுக்கும், தாவர பட்சிணிகளுக்கும் நீளமான சிறுகுடல் இருக்கும். ஆனால் மாமிச பட்சிணிகளுக்கு சிறுகுடல் நீளம் குறைவாக இருக்கும்.
 
(3) மாமிச பட்சிணிகளுக்கு மாமிசத்தை கிழித்து உண்ண கோரைப் பற்கள் உண்டு.  ஆனால் நமக்கு உணவை நன்கு மென்று உண்ணக் கூடிய  வகையில் பற்கள் அமைந்துள்ளது.
 
(4)சைவ உணவு உண்போருடைய ஆயுட்காலம் அசைவ உணவு உண்போருடைய ஆயுட்காலத்தை விட அதிகம்.
        
4. மனிதன் ஒரு பழந்தின்னி

(1)நிலத்திற்கு கீழ் விளையும் பொருட்களை உண்ணும் வகையில் பன்றி, எலி, முயல், போன்ற மிருகங்களுடைய வாய் அமைப்பு நிலத்தை தோண்டு வதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கும். 
 
(2)மேய்ச்சல் மிருகங்களின் பற்கள் மற்றும் வாய் அமைப்பு புற்களை அசை போட்டு சாப்பிடும் வகையில் 
அமைந்திருக்கும்.
 
(3)குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்களுக்கு மரத்திற்கு மரம் தாவி பழங்களை உண்ணும் வகையில் அதனுடைய உடலமைப்பு இருக்கும். 
 
(4)மனிதனால் மட்டும் தான் இரண்டு கால்களால் நின்று பழங்களை பறிக்கவும், உயர்ந்த மரங்களில் ஏறவும் முடியும். 
    
இதனால் நாம் பழந்தின்னி வகையை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம். அதனால் நாம் மெதுவாக அசைவ உணவிலிருந்து--- சைவ உணவிற்கும் பிறகு அதில் பால் பொருட்களை தவிர்த்தும் பிறகு  இயற்கை உணவிற்கும் பிறகு பழ உணவிற்கும் மாற முயற்சிக்க- வேண்டும்.

(தொடரும்)
நன்றி: இரதி லோகநாதன், கோவை.


முந்தைய கட்டுரையைக் காண: 1. ஆரோக்கியம் ஆனந்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக