செவ்வாய், 24 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம். பகுதி மூன்று: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.

முந்தைய பகுதிக்கு செல்ல, கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குக.
பகுதி 2: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.

ஒரு வேண்டுகோள்: யோகாசனங்களை  கற்றுத் தேர்ந்த ஆசிரியர் ஒருவரின் துணையுடன் செய்யவும்.  புத்தகங்களின் துணை கொண்டு செய்தல் தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.


பகுதி 3: சங்கப் பிரக்ஷாலனக் கிரியா.

4. திரியகபுஜங்காசனம்

புஜங்காசனத்தின் இறுதி நிலைக்குச்சென்று கால்களை அரைமீட்டர் அகட்டி வைக்கவும். கால் விரல்களில் இருக்கவும். குதிகால்களை உயர்த்தவும். முன்னால் தலை உயர்த்திப் பார்க்கவும். பின்னர் மெதுவாக தலையைத் திருப்பவும். மேல் முதுகெலும்பு திரும்பி இருக்கட்டும். பின்னர் இடது தோளைப் பார்க்கவும்.வலது குதிகாலைப் பார்க்கவும். கைகள் சிறிது வளைந்தும் இருக்கலாம். வயிற்றின் மூலை மட்டப் பக்க நீட்டத்தை உணரவும். முதுகைத் தளர்வாகவும் தொப்புள் தரையில் படும்படியும் வைத்துக்கொள்ளவும் சிறிதுநேரம் கடைசிநிலையில் இருக்கவும் அடுத்த பக்கமும் திரும்பிச் செய்யவும். நடுநிலைக்கு வந்து உடலைக்கீழே இறக்கவும்.

இது ஒரு சுற்று.

மூச்சு: மேலே வரும் போது உள்மூச்சு. உடலைத் திரும்பிப் பார்க்கும் போது மூச்சை வெளிவிடுக.
முதுகுத்தசை குடல்களின் மேல் நினைவை வைக்கவும். ஸ்வாதிஸ்டானச் சக்கரத்தில் நினைவை வைக்கவும்.


முதுகந்தண்டில் எலும்புகளுக்கு இடையில் உள்ள வில்லைகளை நல்ல நிலையில் வைக்கும். முதுகுவலியை அகற்றும் முதுகெலும்பை வளையுந்தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். விறைப்பான முதுகெலும்பு மூளையிலிருந்து நரம்புகள் வழியாகச் செல்லும் செய்திகள் உடலுக்குச் செல்வதற்கு இடையூறாக உள்ளது. முதுகை வளைப்பதால் முதுகில் இரத்தஓட்டம் கூடி நரம்புகள் பலப்பட்டு நல்ல செய்தித்தொடர்பு மூளைக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஏற்படும். கருப்பை மாதவிலக்கு மற்ற பெண்கள் நோய்கள் அகலுகின்றன பசியைத் தூண்டுகிறது. கல்லீரல் சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அட்ரினல் சுரப்பி சிறப்பாகச் செயல்படுகிறது. தைராய்டுசுரப்பி சுரக்கும் கார்டிசான் நன்கு சுரக்கிறது.ஸ்வாதிஸ்டானம் மணிபூரகம் அனஹாதம் விசுத்தி ஆகிய சக்கரங்களில் பிராணசக்தி கூடுகிறது. குடல்கள்மேல் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.

5. உதரகர்சனாசனா[ABDOMINAL STRETCH]
போர்ட்டர் உட்காருவதுபோல் உட்காரவும். கால்களை அகட்டி வைக்கவும். முழங்கால்கள் மேல் கைகளை வைக்கவும்.

மூச்சு: ஆழ்ந்தமூச்சு. வெளி மூச்சு விட்டு வலது முழங்காலை இடது பாதத்திற்கு அருகில் தரையைத் தொடுமாறு கொண்டு வருக. இடது கையை நெம்பு கோலாகப் பயன்படுத்தி இடது முழங்காலை வலப்பக்கம் திருப்புக.

அதேசமயம் உடலை இடப்பக்கம் திருப்புக. தொடைகள் இரண்டினாலும் அடிவயிற்றை அழுத்தவும்.அடி வயிற்றைப் பிழியவும். இடது தோளைப் பார்க்கவும். வெளிமூச்சு பகீரக கும்பகம். இந்த நிலையில் ஐந்து விநாடி இருக்கவும்.
பழைய நிலைக்கு தொடக்க நிலைக்குச் செல்லும் போது மூச்சை உள்ளே இழுக்கவும். அதே போல் வலப்பக்கம் திரும்புக. இரண்டும் சேர்த்து ஒரு சுற்று.

நினைவு: மூச்சுடன் இயைபுபடுத்தி இடம் வலம் திரும்புக. சுவர் அருகிலிருந்தும் செய்யலாம். 20செமீ தள்ளி அமரலாம்.

நன்மை:வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். வயிற்றில் உள்ள உறுப்புகளையும் தசைகளையும் அழுத்தும். நீளச்செய்யும். மலச்சிக்கல் அகலும். மேற்சொன்ன ஆசனங்களை வரிசைப்படி விரைவாகச் செய்யவும். இது ஒருசுற்று.சுற்றுக்கிடையில் ஓய்வு வேண்டாம்.

எட்டுச் சுற்றுகள் செய்யவும்.

மறுபடி மேலும் இரண்டு குவளை வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரைப் பருகவும். மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டு முறை செய்யவும். மூன்றாம் முறை மேலும் இரண்டு குவளை வெது வெதுப்பான உப்புகலந்தநீரைப் பருகவும்.

மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டுமுறை செய்யவும்.

மூன்றாம் சுற்றுக்குப் பிறகு கழிவறைக்குச் செல்லவும்.வயிறு அசைகிறதா மலக் கழிவு உணர்வு வருகிறதா என்பதைப் பார்க்கவும்..சிரமப்படவேண்டாம்.

மலங்கழிந்தாலும் கழியாவிட்டாலும் கழிவறையை விட்டு வெளியேவரவும்.

மறுபடி மேலும் இரண்டுகுவளை வெதுவெதுப்பான உப்புகலந்தநீரைப் பருகவும்.

மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டுமுறை செய்யவும்.

பிறகு கழிவறைக்குச் செல்லவும். மலக்கழிவுஅழுத்தம் வந்தால் மலம்கழிக்கச் செல்க. கழிவறையில் குறைவான நேரத்தைச் செலவிடுக. குடலைத்தூய்மை செய்யும் அழுத்தத்தை உண்டாக்குவதுதான் குறிக்கோள்.

திடக்கழிவு முதலில் வெளியேறும். பிறகு திடக்கழிவும் திரவமும் வெளியேறும். பிறகு தண்ணீர் அதிகமாகவும் திடக் கழிவு குறைவாகவும் வெளியாகும்.

மேகம் போன்ற கலங்கல் மஞ்சள்நிறத்தில் நீர் வெளியேறும். பிறகு தெளிவாக வெளியேறும். கலங்கலாக வெளி வரும் போதே கிரியை முடித்துக் கொள்க. பொதுவாக 16தம்ளர் தண்ணீர் போதுமானது. ஆளுக்கு ஆள் அளவு வேறுபடும். மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். சிலர் விரைவாக முடிப்பார்கள். சிலருக்கு அதிகநேரம் எடுககலாம். தளர்வான ஓய்வான மனநிலையில் பயிற்சிசெய்க.

குஞ்சால்கிரியையும் ஜலநேத்தியையும் சங்கப்பிரச்சாலனாக்கிரியை முடித்து பத்து நிமிடம் கழித்துச் செய்க. பிறகு ஓய்வு கொள்க. முழுஓய்வாக இருப்பது அவசியம். சாந்திஆசனத்தில் 45நிமிடங்கள் இருக்கவும்.தூங்கக்கூடாது.தூங்கினால் தலைவலி ஜலதோஷம் உண்டாகலாம். ஓய்வான சமயம் உடலைச் சூடாக வைத்திருங்கள்.

மௌனம் சாதிக்கவும்.செரிமான உறுப்புகள் புதுப்பிக்க வாய்ப்பளிக்கிறோம். சிறுநீர் கழித்தல் இயல்பானதே.

(தொடரும்) 
நிறைவுப் பகுதி அடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக