வியாழன், 7 ஜூலை, 2011

13. கனி இருப்ப... (இயற்கை நலவாழ்வியல் சிந்தனைத் தொடர்)



வணக்கம். 

கடந்த பதிவில் அருகம்புல் சாறு பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் வல்லாரைச் சாறு பற்றி பார்க்கப் போகிறோம். வல்லாரை ஒரு அற்புத மூலிகை. தெய்வீக ஞான மூலிகைகளில் ஒன்று வல்லாரை. மனித உடலின் ஞான பாகம் என்று அழைக்கப்படும் சிரசு (தலை)பகுதியில் அமைந்துள்ள மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மூலிகை வல்லாரை ஆகும். கல்வி, ஞானம், அறிவு இவற்றிற்கு தெய்வமாக விளங்கும் கலைவாணியின் பெயரால், சரஸ்வதி மூலிகை என்று அழைக்கப்படும் வல்லாரை இலையின் அமைப்பும், மூளையின் அமைப்பும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் அதிசயத்தை கீழே உள்ள படங்களில் இருந்து ஒப்பு நோக்கி அறியலாம்.


 வல்லாரை இலை.
மனித மூளை.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது தமிழ் நாட்டின் சித்தர்கள் ஆய்வின் மூலமே வல்லாரை என்னும் இம்மாமருந்து உலகிற்கு அறியப்படுத்தப்பட்டது. வடமொழியில் இந்த மூலிகை பிரம்மி என்று அழைக்கப்படுகிறது. காய கல்ப மூலிகைகளில் வல்லாரையும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இன்று வணிக ரீதியாக வல்லாரை கலந்த மருந்து மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் போன்றவை விற்கப் படுகின்றன. ஆயினும் வல்லாரைச் சாறு அருந்துவதன் மூலம் ஒருவர் நேரடியான பலனை உடனுக்குடன் பெற்றிடலாம்.

இப்படிப்பட்ட ஒரு தெய்வீக ஞான மூலிகையான வல்லாரை இலைச் சாற்றினை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஏற்படும் பயன்களைப் பற்றி திரு.மூ.ஆனையப்பன் அவர்களின் ‘நோயின்றி வாழ’’ என்னும் கட்டுரையின் அடுத்த பகுதியைக் கீழே காணலாம்.

வல்லாரைச் சாறு.

வல்லாரை தழைகளை பிழிந்து சாறு எடுத்து நீர் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தவும்.


வல்லாரை இலைச் சாறு குணப்படுத்தும் நோய்கள்.

1.         நரம்புத் தளர்ச்சி.
2.         நினைவாற்றல் இன்மை.
3.         மூளை வளர்ச்சிக் குறைவு.
4.         வயிற்றுப் புண்
5.         காமாலை.
6.         தொழு நோய்.
7.         வாதம்.
8.         நீரிழிவு.
9.         சளி.
10.      சிறுநீர் அடைப்பு.
11.      மாதவிடாய்க் கோளாறுகள்.
12.      யானைக் கால்
13.      காய்ச்சல்.
14.      இதய பலம் இன்மை.
15.      தாதுக் குறைவு.
16.      காமம் தொடர்பான குறைபாடுகள்/நோய்கள்.


(நல வாழ்வியல் சிந்தனைகள் தொடரும்)

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ. 

நன்றி: இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு. மூ.ஆ. அப்பன், குலசேகரன்பட்டினம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக