ஞாயிறு, 3 ஜூலை, 2011

12. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.

கனி இருப்ப... எனும் இந்த தொடர் கட்டுரையைப் படித்து ஆதரித்து வரும் வலைப் பதிவு அன்பர்களுக்கு என் வணக்கம்.

இயற்கை நலவாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நோயின்றி வாழலாம். மருத்துவரை அணுகத் தேவையில்லை.மருந்துகள் உண்ணத் தேவையில்லை. பெரும் பொருட்செலவையும், மன உளைச்சலையும் மிச்சப்படுத்தலாம். இயற்கை நலவாழ்வியலைப் பின்பற்ற வயது ஒரு தடை இல்லை. 


இயற்கை நலவாழ்வியல் முறைகளை இளம் வயதில் இருந்தே (அதுவும் குழந்தைப் பருவத்தில் இருந்தே) பின்பற்றினால் கிடைக்கும் பயன்கள் எண்ணற்றவை . 


இளம் யுவர்களும், யுவதிகளும் திருமணத்துக்கு முன்பிருந்தே பின்பற்றினால் இல்லறம் சிறந்து நன்மக்களைப் பெறலாம். இந்த முறையிலான வாழ்க்கையை வாழ்பவர்களின் குழந்தைகள் ஆரோக்கியக் குழந்தைகளாக பிறப்பார்கள். நோயின்றி, அறிவுக் கூர்மையுடன் சிறந்து வாழுவார்கள். 

மெடிகல் இன்சூரன்ஸ் என்றெல்லாம் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளிலும், அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பதிலும், இயற்கை நலவாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவோருடன் இணைந்து செயல்படுதலும் (சத்சங்கம்), தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் "நோயற்ற நலவாழ்வை'" தரும். ப்ரீமியம் செலுத்தாத, மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்காத, மருந்துகளை அருந்த வேண்டி இருக்காத ஒரு மருத்துவக் காப்பீடு தேவை எனில் அது இயற்கை நலவாழ்வியல் முறை ஒன்றுதான். நல்ல மனம், நல்ல உடல் பெற்றால் தான் நல்ல எண்ணங்கள் தோன்றும், வாழ்க்கை வளமும், நலமும் பெற்றிட அமைதியான ஆனந்த வாழ்வு வாழ்ந்திட இயற்கை நலவாழ்வியலை பின்பற்றுங்கள். 

யோகா பயிற்சிகள், தியானம், பிராணாயாமம், இயற்கை உணவுகளை உண்ணுதல், நலவாழிவியல் பயிற்சிகளை பெறுதல், அது தொடர்பான கல்விகளைக் கற்றல் போன்றவை உங்களை மருத்துவத்தை மறுத்து மகத்துவமாக வாழ வைக்கும். 

இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகளில் தமிழகத்தின் முன்னணி இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு. மூ.ஆனையப்பன் அவர்களின் ''நோயின்றி வாழ.''கட்டுரை தொடருகிறது.


நோயின்றி வாழ.. 
மூ.ஆ.அப்பன்.

இயற்கை மூலிகைகள்:
தினம் காலையில் வெறும் வயிற்றில் கீழ்க் குறிப்பிட்ட மூலிகைச் சாறுகளை ஒருவேளை மட்டும் அருந்தி, இரண்டு மணி நேரம் எந்த திரவ/திட உணவை அருந்தாமல் இருந்தால் நோயின்றி வாழலாம். இந்த வகையில் முதலாவதாக அருகம்புல் சாறு பற்றிப் பார்க்கலாம்.

அருகம்புல் சாறு:

நன்றி: கூகிள் இமேஜஸ் 

அருகம்புல் சாறு குணப்படுத்தும் நோய்கள்:
  1. உடல் தளர்ச்சி.
  2. நரம்புத் தளர்ச்சி.
  3. அமிலத் தன்மை.
  4. மலச் சிக்கல்.
  5. பல் நோய்.
  6. வாய் துர்நாற்றம்.
  7. ஆண்மைக் குறைவு.
  8. தாய்ப்பால் பற்றாக்குறை.
  9. சளி.
  10. சர்க்கரை நோய் (அ) நீரிழிவு நோய்.
  11. இரத்த அழுத்தம்.
  12. ஆஸ்துமா.
  13. சொறி, சிரங்கு.
  14. வெண்குஷ்டம்.
  15. தோல் நோய்கள்.
  16. வயிற்றுப் புண்.
  17. கொலஸ்ட்ரால்.
  18. தூக்கமின்மை.
  19. இரத்தப் புற்று நோய்.
  20. அனீமியா (அ) இரத்த சோகை.
  21. இதயக் கோளாறுகள்.
  22. உடலில் தேங்கி உள்ள நச்சு தன்மை ஆகியன.

செய்முறை:
அருகம் புல்லை சுத்தமாக கழுவி, துண்டுகளாக வெட்டி, மிக்சியில் அடித்து சாறு எடுத்து, நீர் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தவும்.  
(தொடரும்) 


அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ. 
நன்றி : திரு.மூ.ஆ.அப்பன், குலசேகரன்பட்டினம் (திருச்செந்தூர்) தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக