திங்கள், 3 பிப்ரவரி, 2014

நினைத்தது நிறைவேற குபேர தியானம் - 1

நம் வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாம் நிறைவேறுவது இல்லை. சில ஆசைகள் நிறைவேறுகின்றன. பல ஆசைகள் நிறைவேறாமலேயே போய் விடுகின்றன.

நாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மந்திரக்கோல் நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நாம் நினைப்பதுண்டு. ஹெரால்டு ஷெர்மன் என்னும் அறிஞர் ""மகிழ்ச்சியின் சாவி உங்களிடமே" [YOUR KEY TO HAPPINESS] என்னும் நூலில் அந்த மந்திரக்கோல் நம் மனதிடமே உள்ளது என்று கூறுகிறார்.

மனதின் நான்கு நிலைகள்:

மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். நம் மூளையிலிருந்து தொடர்ந்து மெல்லிய மின் வீச்சுகள் வெளிப்படுகின்றன. அந்த மின்வீச்சுகளின் வேகம் அவ்வப்பொழுது நமது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்து மாறக் கூடியது. இதுவினாடிக்கு இத்தனை சைக்கிள்கள் என்று கணக்கிடப்படுகிறது. அதனைக் கொண்டு நமது மூளையின் செயல்பாட்டை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளார்கள்.

அவை
1பீட்டாநிலை
2ஆல்ஃபாநிலை
3தீட்டாநிலை
4டெல்ட்டாநிலை
என்பவையாகும்.

நாம் விழித்திருக்கும் நிலையே பீட்டா நிலையாகும். அப்போது நமது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 14 சைக்கிள்களுக்கு  மேல் இருக்கும்.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையே ஆல்ஃபா நிலையாகும். இந்த நிலையில் நமது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 7முதல்14  சைக்கிள்கள் வரை இருக்கும்.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நிலையே தீட்டா நிலையாகும். இப்போது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 4முதல்7 சைக்கிள்கள் வரையிருக்கும். கோமா நிலையே டெல்ட்டா நிலையாகும். அப்போது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 0முதல்4 சைக்கிள்கள் வரை இருக்கும். மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 0நிலையில் வருவதே இறப்பு நிலையாகும்.

மந்திரக்கோல்

நாம் நினைப்பதை நிறைவேற்றும் மந்திரக்கோல் ஆல்ஃபா நிலையிலே இருக்கிறது. விழித்திருக்கும் போது தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் இடப் பக்க மூளை ஆல்ஃபா நிலையில் சற்று அமைதியடைகிறது. வலது பக்க மூளை அப்போது செயல்படுகிறது.  குட்டியாக இருக்கும்போது பாகனின் சங்கிலிக்குக் கட்டுப்பட்ட யானை வளர்ந்து வலிமை பெற்ற பிறகும் அந்தச் சங்கிலிக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. அது போல நம் மனதில் ஏற்கனவே ஆழமாகப் பதிந்துள்ள எண்ணங்களுக்கு ஏற்ப நாம் விழித்திருக்கும் பீட்டா நிலையில் மூளை செயல்படுகிறது. அந்த எண்ணங்களே நம் முன்னேற்றத்திற்குத் தடைச் சங்கிலிகளாக அமைந்து விடுகின்றன. நமது முழு சக்தியையும் வெளிப்படுத்த விடாமல் தடுத்து நிறுத்தி விடுகின்றன.

ஆல்ஃபா நிலையில் நமது வலது பக்க மூளை செயல்பட ஆரம்பித்து நமது முழு ஆற்றலை உணரச் செய்கிறது. நம் ஆழ்மனத்துடன் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. அப்போது தான் நம் மனம் மிகவும் வலிமையாகவும் உள்ளுணர்வுடனும் ஆக்க பூர்வமாகவும் சிந்திக்கிறது. இந்த நிலையில் மனதில் எந்த எண்ணத்தைப் பதித்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறும்.

குபேர தியானம் செய்வது எப்படி?

குபேர நிலைக்கு [ஆல்ஃபா நிலைக்கு] போக உகந்த நேரம் அதிகாலை நேரமே. அதற்கு அடுத்தது நாம் உறங்கச் செல்லும் இரவு நேரம் ஆகும். அந்த நேரங்களில் குபேர தியானத்தினைக் கீழ்க் கண்டவாறு செய்து நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

குபேர தியானம்

குபேர முத்திரையுடன் உடலை முழுவதும் தளர்த்தி முழு ஓய்வு கொள்ளுதல், மனதை முழுவதும் தளர்த்தி அமைதிப் படுத்துதல் மற்றும் மிகவும் பிடித்த இடத்திற்கு மனதால் சென்று வருதல் ஆகிய  பயிற்சிகளைப் பார்ப்போம்.


இந்தப் பயிற்சியின் முடிவில் நீங்கள் குபேர நிலையை அடைந்து விடுவீர்கள். குபேர நிலையில் உங்கள் மனம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும். உடலும் உள்ளமும் பூரண அமைதியுடன் இருக்கும். இந்த நிலையில் இயங்கும் போது உங்கள் சிந்தனை மிகுந்த உள்ளுணர்வுடனும் மிகுந்த சக்தியுடனும் தன்னம்பிக்கையுடனும் ஆக்க பூர்வமாகவும் இருக்கும். இந்த நிலையில் இயங்குவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த நிலையில் மனதில் எதைப் பதிய வைத்தாலும் நிச்சயம் உங்கள் வாழ்வில் அது நடைபெறும்.

(தொடரும்)

நன்றி:
பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip in Yoga
யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நல வாழ்வியல் நெறியாளர்.
சென்னை-600004

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கத்திற்கு நன்றி... தொடர்கிறேன்...

கோமதி அரசு சொன்னது…

குபேர தியானம் நன்றாக இருக்கிறது.
உடலும், உள்ளமும் பூரண அமைதியுடன் இருக்கும் போது தான் நினைத்ததை செயல் படுத்தமுடியும்.
அடுத்த பதிவை படிக்கிறேன்.

Ashwin Ji சொன்னது…

வருக வருக திண்டுக்கல் தனபாலன் சார்.
வாழி நலம் சூழ தொடருங்கள்.

கருத்துரையிடுக