திங்கள், 17 மே, 2010

சேவை செய்திகள்.

ஒரு முக்கிய அறிவிப்பு.
ஏழு நாட்கள் யோகா & இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம்.

இடம்: இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, (தமிழ்நாடு)

நாள்: 18.052010 முதல் 24-05-2010 முடிய.

மனிதனுக்கு மருத்துவமே அவசியமில்லை என திருவள்ளுவர் கூறியுள்ளார்; ஆம், எதை உண்ண வேண்டும்? எப்போது உண்ண வேண்டும்: எவ்வாறு உண்ண வேண்டும்? எனும் இம்மூன்று வினாக்களுக்கு விடைகள் அறிந்தால், எங்கு அலைந்தும் உடல், உள நலம் கிட்டாதவர்கட்கு, எளிதில் மருந்தின்றி, அறுவையின்றி, மாற்று உறுப்பு பொருத்துதல் இன்றி, எளிதில் உடல்/உள நலம் கிட்டிவிடும்.

இந்த முகாமில் ''சீரோ பட்ஜெட்'' மருத்துவம் விளக்கம் அளிக்கப் படுகிறது. தம்பதியராக இம்முகாமில் கலந்து கொள்வது உயர்வு. இம்முகாமில் நோய் தராத, நோய் நீக்கும் உணவுகள் வழங்கப்படும்.

இந்திய அரசுக்கு சொந்தமான (NIN, PUNE) நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி, பூனே இந்த முகாமை வழங்குகிறது. இணைந்து முகாமை நடத்துபவர்கள் Natural Life Centre, Kulasekaranpattinam, Tuticorin District (Tamil Nadu) PIN:628206.

நன்கொடை: நபர் ஒருவருக்கு முன்னூறு ரூபாய் மட்டுமே.
மேல் விவரங்கள் பெற: 9380873645 & 9944042986

முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கூட மேற்கண்ட தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திரு.மூ.ஆ.அப்பன் அவர்களிடம் மற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை அறியலாம்.

4 கருத்துகள்:

Ananya Mahadevan சொன்னது…

அஷ்வின் ஜி,
இந்த நோட்டீஸை கொஞ்சம் முன்னாடியே போட்டு இருக்கலாமோ? நாளை தொடங்குதே! என் ப்ளாக்ல போடுறதுக்கு தயாரா இருக்கேன். மேற்கொண்டு முகாம்கள் இருப்பின் தெரிவிக்கவும்.

Ashwin Ji சொன்னது…

சாரி அநன்யா
இன்னைக்கு மாலை வீட்டுக்கு வந்த போது அஞ்சலில் இந்த அழைப்பினை கண்டேன். அதனால் தான் அழைப்பினை உடனே வெளியிட்டு விட்டு பின்னர் திரு.மூ.ஆ.அப்பனின் அலைபேசி எண்களைத் தந்தேன்.அவர் தமிழ் நாட்டின் முன்னோடி இயற்கை நல வாழ்வியல் நெறி பரப்புநர். அவருக்கு வயது எழுபத்துக்கும் மேலாகிறது. கடந்த டிசம்பரில் அவரது ஏழு நாள் முகாம் ஒன்று பழனியில் நடைபெற்ற போது கூட அதில் கலந்து கொண்டேன். மீண்டும் வாய்ப்புகள் வரும். அப்போது கொஞ்சம் முன்னதாகவே செய்திகள் தருவேன். ஆர்வத்துக்கு நன்றி அநன்யா.

எல் கே சொன்னது…

ungalai en pathivil arimugap paduthi ullen http://lksthoughts.blogspot.com/2010/05/i.html

Ashwin Ji சொன்னது…

நன்றி கார்த்திக். அறிமுகத்துக்கு.
நன்றி அனன்யா. அறிமுகத்துக்கு.

கருத்துரையிடுக