ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

பகுதி 7 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம். 

ஆனால் போதிய வசதியுள்ள சாதாரண மக்கள் நேரம் தவறாது சாப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். உடலில் அழுக்கு சேர்ந்து சிறிது காலம் தாழ்த்தி பிராணசக்தியைக் கொண்டு அதனை வெளியேற்றுகின்ற போது துன்பம் ஏற்படுகிறது.

தும்மல் சாதாரணமாக வரப்போகிற காய்ச்சலுக்கு அறிகுறியாக இருக்கலாம். தும்மலுக்கு மருந்து ஏதும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் தலைவலி, தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறுகள் முதலியன வரலாம். காய்ச்சல் வந்துவிட்டால் உடம்பினுள் இருக்கும் வேண்டாப் பொருட்கள் உடம்பு முழுவதையும் போர்த்தியிருக்கும் தோல் வழியாக வெளி வந்துவிடும்.

இந்தக் காய்ச்சல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். இதனை ஹே·பீவர் (hayfever) என்று சொல்கிறார்கள். இதற்கும் வைக்கோலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பொதுவாக இக்காய்ச்சல் மரங்களும், செடிகளும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வருகிறது. அச்சமயங்களில் காற்றில் பூக்களிலுள்ள மகரந்தத்தூள் பரவலாகக் கலந்திருப்பதால் இதைச் சுவாசிக்கும் சிலருக்கு அழற்சியினால் காய்ச்சல் வருகிறது என்று நினைக்கிறார்கள். தும்மல் வரும் சமயம் மூக்கில் ஒருவித அரிப்பு இருக்கும். அதைப்போக்க எபி டிரைன் சல்பேட் மூக்குத்துளி (Nose drops) சொட்டு மருந்து போட்டு தற்காலிகக் குணம் பெறுகிறார்கள். ஆனால் அழுக்குகள் வெளிவருவதற்கு அவை உதவமாட்டா இதற்கு சிறந்த மருத்துவம் உபவாசம்தான். காய்ச்சல் காலமாகிய மூன்று நாட்களும் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரண்டு வேலை புனர்பாகக் கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் காய்ச்சலும் நின்று விடும் உடம்பிலுள்ள அழுக்கும் குறைந்து தும்மலுக்கு நிரந்தரப் பரிகாரம் காணலாம்.

தும்மல் என்பது அறிகுறிதான் உடம்பிலுள்ள அழுக்கை வெளியேற்ற பிராணசக்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மேலும் உணவு உட்கொண்டு பிராண சக்தியைச் செரிமான வேலையில் ஈடுபடுத்தினால் நோய் அதிகரிக்குமேயொழிய குறையாது.

இந்த உண்மையைத்தான் 'நோய் நமக்கு நண்பன்' அது நாற்சந்தியிலுள்ள கைகாட்டி மரம் போல் நமக்கு வழிகாட்டி உதவுகிறது என்று இயற்கை வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

இது நோயைப்பற்றிய நல்ல ஒரு மனப்பான்மை

இதனைப் புரிந்து கொள்ளாது நோயைக் கண்டு பயப்படுகிறவர்கள் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

(இயற்கை வளரும்)

2 கருத்துகள்:

Ananya Mahadevan சொன்னது…

ஜுரம் வந்தா உபவாசம் இருக்கணும்ன்னு தெரியாது! பல நல்ல தகவல்கள்.
நன்றி

Ashwin Ji சொன்னது…

நன்றி அனன்யா,
உபவாசம் போன்றதொரு அற்புதமான மருந்தில்லா மருத்துவம் எங்கணும் கிடையாது. தொடர்ந்து படித்து வாருங்கள். மிக நல்ல விஷயங்கள் உங்களுக்கு அறியக் கிடைக்கலாம்.

--
அன்பே சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
-----------------------------

கருத்துரையிடுக