ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஜெய விஜயீ பவா.




ஜெய விஜயீ பவா.





எல்லார் வாழ்விலும் 

விஜய ஆண்டு 

வெற்றி தரும் ஆண்டாக மலர 

வாழ்த்துக்கள்.

பணிவான வணக்கங்களுடன்,

அஷ்வின்

சனி, 6 ஏப்ரல், 2013

28வது இயற்கை 
நலவாழ்வியல் 

முகாம்-2013  

திருப்பனந்தாள்

நோயில் தள்ளும் உணவுப் பழக்கங்களையும், நவீன வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த நலவாழ்வு வாழ ஓர் அரிய வாய்ப்பு. 

யோகப் பயிற்சி, தீமை தரும் சமையல் உணவுக்குப் பதிலாகபழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் நலவாழ்வு வாழ, நோயற்ற வாழ்வு வாழக் கற்றுக் கொள்ள வாருங்கள்.  


சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 


இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இயற்கை வாழ்வியல் பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த பயிற்சி முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சிகளை பீஷ்மாச்சார்யா, யோகரத்னா திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலம் நேரிடையாகப் பெற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுடன் வழங்கப்படும். 

இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள ஆண், பெண் எவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு நிறைபயன் பெறலாம்.

முகாம் துவங்கும் நாள் : 06-05-2013 ( 2 P.M முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 12-05-2013 ( 2 P.M. வரை)

பயிற்சி நடைபெறும் இடம்: ஸ்ரீகுமரகுருபரர் மெட்ரிக் ஹையர்செகண்டரி பள்ளி திருப்பனந்தாள் - 612504, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: 
ஆடவர் ரூ.1800, மகளிர் ரூ.1600
மாணவ, மாணவியர் (வயது 10 முதல் 18க்குள்) ரூ.1200.

இரயிலில் வருபவர்கள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு செல்லவும். அங்கிருந்து 9, 34, 44, 27, 64 ஆகிய இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாள் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி முகாமுக்கு வரலாம்.

முன்பதிவு செய்து கொள்பவர்க்கே முன்னுரிமை.

எனவே பயிற்சியில் கலந்து கொள்ள விழைபவர் ஒரு கடிதம் மூலம் தங்கள் முகவரியை கீழ்க்கண்ட விலாசத்தில் தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ளவும். பணத்தை நேரில் வரும் போது மட்டுமே செலுத்தினால் போதும். பணத்தை முன் கூட்டியே அனுப்பவேண்டாம். பதிவு செய்யாமல் பயிற்சிக்கு வருவதை தவிர்க்கவும். பயிற்சி முகாமின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். 

அமைப்பாளர் முகவரி: 
திரு.இர.இராமலிங்கஅம் அவர்கள்,
செயலர்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
14, அக்ரஹாரம், 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.

0435-2472816 ( 8a.m to 9 a.m.)

நலம் நாடி வெளியிடுபவர்:

அஷ்வின்ஜி@

A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), M.Sc(YogaTherapy)

வாழி நலம் சூழ...

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

ஓம் சிவாய நம..

ஆங்கிலப் புத்தாண்டு 
மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.



வாழி நலம் சூழ என 
வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்...

அன்புடன் 

அஷ்வின்ஜி
வலைப்பூ நிறுவனர்

திங்கள், 3 டிசம்பர், 2012

யோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..



நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும். 

யோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை. 

ஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.

முறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

கிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.

இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.

எல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங்கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.  உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.

குடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.

இரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.

எளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:

காலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.

உப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:

தாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.

முன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.

ஒரு இனிய செய்தி:

இம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பன்னிரண்டு) இருபத்தேழு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது  தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

நான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவைக் கற்றுக் கொள்ளலாம்இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள் :27-12-2012 (பிற்பகல் இரண்டு மணிக்கு)
முகாம் நிறைவடையும் நாள்: 30-12-2012 (மாலை நான்கு மணிக்கு)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி, 
திருப்பனந்தாள் - 612504, 
தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1000 (ஆயிரம்) மட்டுமே.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு திசம்பர் திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 9486768930 
இல்லம்: 0435-2472816

வாழி நலம் சூழ...

செவ்வாய், 13 நவம்பர், 2012

தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்.



இந்நாள் மட்டுமின்றி எந்நாளும்
இனிக்கட்டும் இறையருள் 
நிறையட்டும் சிவனருள். 
  
சிவாய நம.



வலைப்பதிவர் 
அனைவர்க்கும் 
என் இதயம்  நிறைந்த 
தீபாவளி நன்னாள் 
 வாழ்த்துக்கள்.

அஷ்வின்ஜி 

புதன், 17 அக்டோபர், 2012

யோக நலமே வாழ்வின் வளம்.


யோக நலமே வாழ்வின் வளம்.

யோகா ஆசான் டாக்டர் தி.ஆ. கிருஷ்ணன் 

தமிழ் நாடு விளையாட்டுக் கல்வி பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து யோகா பாடப் பிரிவுகளையும், சென்னை திருமூலர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வு மையத்தின் ஸ்தாபகராகவும், இயக்குனராகவும் விளங்கி வரும் யோக ரத்னா, யோக பீஷ்மாச்சாரியா டாக்டர் திரு. தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலமாக நிறையப் பேர் யோகா கற்றுக் கொண்டு  யோகா ஆசிரியர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.  பல்கலையின் இந்த ஆண்டு சேர்க்கை துவங்கி உள்ளது.  

Certificate Course In Yoga
Diploma in Yoga
PGDiploma in Yoga
MSc (Yoga)
MSc (Yoga Therapy)
போன்ற பாடப் பிரிவுகளில் கற்றுத் தேர்ச்சி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும், சுயமாக வகுப்புகள் நடத்தவும் தலை சிறந்த ஆசிரியர்களின் மேற்பார்வையில் நேரடி பயிற்சி பெற்றிட ஒரு நல்வாய்ப்பு.

யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளோர் திருமூலர் யோகா மையத்தின் ஸ்தாபகரும், இயக்குனருமான யோகி திரு.தி.ஆ.கிருஷ்ணன் ஆசான் அவர்களை  9444837114 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

யோகா கற்றுக் கொள்வீர்; 
வாழ்வின் வளம் சேர்ப்பீர்.

வாழி நலம் சூழ...

வியாழன், 11 அக்டோபர், 2012

முக்கிய அறிவிப்பு


வாழி நலம் சூழ...

யோக நலமே, வாழ்வின் வளம்.

முக்கிய அறிவிப்பு 

ஆசனா ஆண்டியப்பன்

யோகி தி.ஆ.கிருஷ்ணன் 

12.10.2012 அன்று காலை 06.15 கலைஞர் தொலைக்காட்சியில் தமிழகத்தின் தலைசிறந்த யோகா விற்பன்னர்களாக திகழும் திருவாளர்கள் டாக்டர் ஆசனா ஆண்டியப்பன் அவர்களுடன் யோகி Dr.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் இணைந்து வழங்கும் யோகாசனம் பற்றிய ஒரு சிறப்பு நேர்முகத்தினை கண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

வாழி நலம் சூழ..

அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு, என் பிரியமான வணக்கங்கள்.

நான் நலமே. நீங்கள் நலமா?


தவிர்க்க இயலாத காரணங்களால் நீண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் எழுதாமல் விட்டு விட்டேன். 

மன்னியுங்கள். 

விரைவில் பயன் தரு செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். 

உங்கள் அனைவரின் பொறுமைக்கும், நல் ஆதரவுக்கும், மாறா அன்புக்கும் என் இதய நன்றிகள்.

அஷ்வின்ஜி.

புதன், 13 ஜூன், 2012

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?


இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவினைப் பற்றி சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்(S&P) எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவைவிட இந்திய பொருளாதாரம் முன்னுக்கு சென்றுவிடுமோ என்ற பயம் தான். அதனால் தான் இந்த கோமாளி அமைப்பை (சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்) வைத்து நம்மைப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் பின் தங்க காரணம் நாம் தான். யாரும் அரசாங்கத்தை குறை சொல்ல கூடாது. ஏன் என்றால் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை உண்டு வந்த நாம் இப்போது, மக்டொனல்ட், கே.எஃப்.சி என்று மாறிவிட்டோம். இயற்கையான ச்த்துக்களைக் கொண்ட ஆப்பிள், மேங்கோ பழச் சாறுகளைக் குடிப்பதற்கு பதிலா பெப்சி, கோக், ஸ்பிரைட் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்கை பானங்களைக் குடிக்கிறோம். இவற்றின் உண்மையான விலை வெறும் ௦.90 பைசா தான் ஆனால் இதை 10 ரூபாய்க்கு மேல் வாங்கி குடிக்கிறோம். உங்கள் ஆரோக்கியம் மேம்படவும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படவும் சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குவது என்று நீங்கள் முடிவெடுத்தால் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவிலேயே மாறிவிடும். இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்:

பருகிட ஏற்றவை: இயற்கையான எலுமிச்சம் சாறு, இயற்கையான பழச் சாறுகள், லஸ்ஸி,  மோர், இளநீர், ஜல்ஜீரா, மசாலா பால் போன்றவற்றினை பருகுங்கள்.
தவிர்க்க:- கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா, ஸ்ப்ரைட் போன்ற செயற்கையான குளிர்பானங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை.

குளியல் சோப்புகள், வாங்க:: சிந்தால் போன்ற காத்ரெஜ் நிறுவனத்தின் பொருட்கள். சந்தூர், விப்ரோ சிகைக்காய், மைசூர் சாண்டல், மார்கோ, எவிட்டா,  மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா குளியல் சோப் மற்றும் சந்திரிகா.
தவிர்க்க: லக்ஸ், லைபாய், ரேக்சொனா, லிரில், டவ், பியர்ஸ், ஹமாம், லிசான்சி, காமே, பால்மாலிவ் போன்றவற்றை வாங்காதீர்கள்.

பற்பசைகள்:. ப்ரூடன்ட், அஜந்தா, ப்ராமிஸ், நீம், பாபுல், விக்கோ வஜ்ரதந்தி, டாபர், மிஸ்வாக் போன்ற இந்திய தயாரிப்புகளை கேட்டு வாங்கவும்:.
தவிர்க்க: கோல்கெட், க்ளோஸ்அப், பெப்சொடன்ட், போர்ஹான்ஸ், ஓரல்-பி போன்றவை.

சவர பிளேடுகள்: சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா வாங்கவும்.
தவிர்க்க:- செவன் ஓ கிளாக், 365, ஜில்லட் தயாரிப்புகள்.

முகப்பவுடர் வாங்க: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்லஸ்.
தவிர்க்க: பாண்ட்ஸ், ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன்ஸ்& ஜான்சன்ஸ், ஷவர் டு ஷவர்,

பால் பவுடர்: வாங்குக: இந்தியானா, அமுல, அமுலா, ஆவின் தயாரிப்புகள்.
தவிர்க்க:- ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

ஷாம்பூக்கள்: வாங்கவும்:- NIRMA, VELVETTE.
தவிர்க்க:- HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

உணவுப் பொருட்கள்: வாங்கவும்:- Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.
தவிர்க்க:- KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது
இந்தியத் தயாரிப்புக்களை கேட்டு வாங்குங்கள்
இந்தியனாய் இருங்கள்.

BUY INDIAN TO BE AN INDIAN FOR EVER.

வியாழன், 12 ஏப்ரல், 2012

இயற்கை நலவாழ்வியல் முகாம் - மே மாதம் - திருப்பனந்தாள்

நோயில் தள்ளும் உணவுப் பழக்கங்களையும், நவீன வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த நலவாழ்வு வாழ ஓர் அரிய வாய்ப்பு. 

யோகப் பயிற்சி, தீமை தரும் சமையல் உணவுக்குப் பதிலாக பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் நலவாழ்வு வாழ, நோயற்ற வாழ்வு வாழக் கற்றுக் கொள்ள வாருங்கள்.  

சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 
இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இயற்கை வாழ்வியல் பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த பயிற்சி முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சிகளை பீஷ்மாச்சார்யா, யோகரத்னா திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலம் நேரிடையாகப் பெற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுடன் வழங்கப்படும். 

இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள ஆண், பெண் எவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு நிறைபயன் பெறலாம்.

முகாம் துவங்கும் நாள் :06-05-2012 ( 2 P.M முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 12-05-2012 ( 2 P.M. வரை)

பயிற்சி நடைபெறும் இடம்: ஸ்ரீகுமரகுருபரர் மெட்ரிக் ஹையர்செகண்டரி பள்ளி திருப்பனந்தாள் - 612504, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1200 (ஆயிரத்து இருநூறு) மட்டுமே.

இரயிலில் வருபவர்கள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு செல்லவும். அங்கிருந்து 9, 34, 44, 27, 64 ஆகிய இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்து கொள்பவர்க்கே முன்னுரிமை.
எனவே பயிற்சியில் கலந்து கொள்ள விழைபவர் ஒரு கடிதம் மூலம் தங்கள் முகவரியை கீழ்க்கண்ட விலாசத்தில் தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ளவும். பணத்தை நேரில் செலுத்தினால் போதும். பணத்தை முன் கூட்டியே அனுப்பவேண்டாம். பதிவு செய்யாமல் பயிற்சிக்கு வருவதை தவிர்க்கவும். பயிற்சி முகாமின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். 
அமைப்பாளர் முகவரி: 
திரு.இர.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 94867688930
இல்லம்: 0435-2472816
நலம் நாடி வெளியிடுபவர்:
அஷ்வின்ஜி@A.T.ஹரிஹரன், M.Sc(Yoga)
வாழி நலம் சூழ...

வியாழன், 29 மார்ச், 2012

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி?
மா.உலகநாதன், திருநீலக்குடி

என்னங்க, இதுகூட எங்களுக்குத் தெரியாதா?பெரிசா சொல்ல வந்தீட்டிங்கன்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது! 

ஆனால், நாம தெரிஞ்சு வச்சிருக்கிறதெல்லாம் தெரிஞ்சதா ஆகுமா? 

சாப்பிட வாங்க. அம்மா கூப்பிடறாங்க.

இன்னைக்கி இருக்கிற யந்திர உலகத்தில, மணி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? பசி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? 

மணியைப் பாத்துக்கிட்டே, நேரமாயிடுச்சி, இருக்கறதைக் குடு, நெறைய வேலை கிடக்குன்னு நின்ன நெலயிலேயே சாப்பிடறவங்க ரொம்பப்பேர்! 

அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் ?  அதுனாலதான் இந்த முன்னுரை! 

எனவே ஆரோக்கியத்துக்காக உண்ணுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர் கடைப் பிடிக்கவேண்டிய டிப்ஸ்:
  1. உண்ணும உணவை நன்றாக மென்று கூழாக்கி, உமிழ் நீரோடு  உள் இறக்க வேண்டும். பல்லுக்கு நல்லா வேலைகுடுங்க (ஏன்னா வயத்துல பல் கிடையாதுல்ல!) 
  2. சாப்பிடுவதை ஒரு தவமாக, உணவின் மீது கவனம் வைத்து உண்ண வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்!
  3. எனவே, உணவு உண்பதற்கென சாவகாசமாக நேரம் ஒதுக்கி, குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக சாப்பிடலாமே. 
  4. சோறு இரண்டு பங்கும், நீர் ஒரு பங்கும் உண்ணவேண்டும். காற்றுக்காக கால் பங்கு இடம் காலியாக இருக்க வேண்டும். 
  5. சுவையுள்ள உணவு நிம்மதி, வலிமை, உற்சாகம் ஆகியவற்றைத் தரும். 
  6. வறண்ட உணவும், மிகக் குளிர்ச்சியான உணவும் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. இதனால் செரிமானக் கோளாறு வரலாம். மிகச் சூடான உணவு குடல் வலிமையைக் கெடுக்கும்.
  7. சுறுசுறுப்பு, உற்சாகம், பசி, தாகம் உள்ள நேரங்களில் சாப்பிடுவது உகந்தது. 
  8. உணவு உட்கொள்வதையும், மலம் சிறுநீர் கழிப்பதையும் , கலவியையும் தனிமையில் செய்ய வேண்டும்.இந்த விஷயத்துல காக்கை குணம் வேண்டுமாம். அது என்ன காக்கைக் குணம்? 
காலை எழுந்திருத்தல்,காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல்---சால உற்றாரோடு உண்ணல், உறவாடல், இவ் ஆறும்
கற்றாயோ காக்கைக் குணம்.   (பழம் பாடல்) 
உணவு உண்ணும முறைமைகளைப் பற்றிய மேலும் சில பயனுள்ள குறிப்புகள்:
  • தினந்தோறும்,அறுசுவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் சுவையுள்ள உணவுகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். 
  • செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கடினமான உணவு பொருட்களை விலக்க வேண்டும்.  
  • சரி! ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை வேளை உண்ண வேண்டும்? .   
ஒரு போது உண்பவன் யோகி!
இரு வேளை உண்பவன் போகி!!
முப்போதும் உண்பவன் ரோகி!!!
அதற்கு மேலும் சாப்பிடுபவன் துரோகி!
ஏனெனில், அடுத்தவன் உணவையுமல்லவா எடுத்துக்கொள்கிறான் ? நம் முன்னோர்கள் உணவின் குணங்களை அறிந்திருந்தார்கள். அதனால், அவர்கள் உணவை வேண்டும் போது கூட்டியும், வேண்டாத போது குறைத்தும், விலக்கியும் மருந்து போலப் பயன்படுத்தி வந்தனர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள்)

உண்ணும் போது தவிர்க்க வேண்டிய ஒன்று உண்டு: 
உண்ணும் போது சிலர் ஒரு வாய் சோறு ஒரு வாய் தண்ணீர் எனச் சாப்பிடுவர். இதனால் இரைப்பையில் சுரக்கும் செரிமான நீர் நீர்த்துப் போய், செரிமானம் கெடும். எனவே,சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்தோ தான் தண்ணீர் அருந்தவேண்டும். 
  • நம் உடலைச் சோற்றுத்துருத்தி என்பார் பட்டினத்தார்.
  • ஐயம் இட்டு உண்! என்று ஆத்திசூடி சொல்லும். 
  • இக் கருத்தையே, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்  என்று  கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.
  • வேளாளன்  என்பவன் விருந்திருக்க உண்ணாதவன்! என்ற முதுமொழியும் உண்டு..
பார்த்தீர்களா? உணவைப் பற்றி எப்படியெல்லாம், முன்னோர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் பெருந்தீனி குறித்து நிறையவே பேசியுள்ளார். சிலர் அறியாமையின் காரணமாக ,கிடைக்கிறதை எல்லாம் வாரி உள்ளே தள்ளுவார்கள். உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ணவேண்டும். இதையே வள்ளுவப் பெருமானார் "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" என்று தமது குறள் மொழியாக தருகிறார். ஒருவன் நிரம்ப உண்ண வேண்டும்என்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவுக்கு குறைத்து உண்டால், அவனுக்கு நோயினால் துன்பம் உண்டாவதில்லை என்பார் வள்ளுவர்.  அக்காலத்தில் மன்னர்கள் மண்கலத்தில் சமைத்து, பொன் கலத்தில் உண்பார்களாம்.

சரி! நேரமாச்சு! சாப்பிடப் போகலாமா? ஆனா, சாப்பிடறதுக்கு முன்னே பசிக்குதான்னு   பாத்துக்குங்க!!

நன்றி:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய முன்னாள் பயிர் நிபுணர் திரு.சு. வைரவன் அவர்கள்  ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் ஆற்றிய உரைக்கு கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்து நமது வலைப்பூவுக்கு அளித்திருக்கும் திரு.மா.உலகநாதன், திருநீலக்குடி அவர்களுக்கு என் நன்றி. 

ஞாயிறு, 18 மார்ச், 2012

மகளிர் நலம்: கலந்தொடா மகளிர் - பூப்பு முதல் மூப்பு வரை


மகளிர் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரை.

கலந்தொடா மகளிர் 
(பூப்பு முதல் மூப்பு வரை)
திரு. மா.உலகநாதன், எம்.ஏ.


இறைவன் படைப்பில் பெண் அற்புதமானவள். அடுத்த தலைமுறையை அவள்தான் உருவாக்குகிறாள். அவள் தாயாக, தெய்வமாக மதிக்கப்படுகிறாள்; போற்றப்படுகிறாள்.

பொன்னுடையரேனும் புகழுடையரேனும்  மற்
றென்னுடையரேனும் உடையரோ? – இன்னடிசில்
பூக்களையும் தாமரைக் கைப்பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லாதவர். -நளவெண்பா.

இந்த வரத்தைப் பெறுவதற்குள் அவர்கள் படுகின்ற அவத்தைகளோ ஆயிரம் ஆயிரம். அதில் ஒன்றுதான் அவர்கள் உடலாலும் மனதாலும் மாதந்தோறும் அடையும் அவத்தையான மாதவிலக்கு. இதை தூரம், மாதாந்தரம், தீட்டு எனப் பல பெயரிட்டு அழைப்பர். மிக அதிகமாக சேர்ந்து விடுகிற இரத்தத்தை வெளியேற்றி, நல்ல உடல் நலம் ஏற்படச் செய்வது மாதவிடாயின் பணி. மாதவிடாயின் போது வெளிப்படும் குருதியானது சாதாரண குருதியினின்றும் வேறுபட்டது. கருப்பையிலிருந்து கருமை நிறமுடைய, உறையாத தன்மையுள்ள இரத்தம் ஒவ்வொரு மாதவிடாயின் போதும் சுமார் நூறு மி.லி. வெளியேறும்.

மாதவிலக்குக்கு முன்னர் பெண்களுக்கு மனரீதியாக கோபம, எரிச்சல், சிடுசிடுப்பு தோன்றும். உடல்ரீதியாக முதுகு வலி, உடல் வலி ஏற்படும். இதை Pre-Menstrural Syndrom என மருத்துவ அறிவியல் கூறுகிறது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிலிருந்து விலகி முழு ஓய்வு கொள்வது அவர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயக்கும். மாதவிலக்கின் போது பெண்களின் சருமத்திலிருந்து மினோகொலின் என்ற நச்சுப் பொருள் சுரக்கும். அந்நச்சுப் பொருள் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் என பிஷோக் என்ற அறிஞர் கூறியுள்ளார். அவர்கள் முன்னிலையில் தயாரிக்கப்படும் அப்பளம், ஊறுகாய் முதலிய உணவுகள் விரைவில் கெட்டுவிடுமாம். அதுமட்டுமல்ல. செடிகொடிகளின் பக்கம் போனாலும் கூட அவை வாடிவிடும் என்கிறார்கள்.

பெண்கள் பூப்புற்று இருக்கும் (மாதவிடாய்க்) காலங்களில் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அக்காலங்களில் வீட்டுப் பண்டங்களை தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தமையால் அவர்கள் கலந்தொடா மகளிர் எனப்பட்டனர். இந்நிலை இன்றும் இருந்து வருகிறது. மாதவிலக்குக் கொண்ட பெண் ஒருத்தி இனிய பழந்தரும் மரத்தினடியில் நின்றால், அம்மரத்தின் பழம் கொடிய கசப்பாக மாறி விடும். அவள் தானியத்தைத் தொட்டால் அது விதைப்பதற்கு உதவாது. வளரும் பூச்செடி அருகில் சென்றால் அவை வாடி வதங்கி விடுகின்றன. கருவேப்பிலை, துளசி முதலிய மூலிகைகளின் அருகில் மாதவிலக்குக்  கொண்ட பெண் சென்றால் அவை காய்ந்து விடும் என்று இன்றும் நம்புகின்றனர். இதனால் இயற்கையின் கூறுகள் மாதவிலக்காகிய பெண்களால் பாதிக்கப்படுகின்றன என்பது பெறப்படுகின்றது. மேலும் மக்களின் நம்பிக்கையை புலப்படுத்துவதாகவும் உள்ளது எனலாம்.

புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பூப்புற்ற மகளிர் பற்றிய தெளிவான குறிப்பு ஒன்று காணப்படுகின்றது.
பருத்தி வெளிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படைமுகாம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்  
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்து
கலந்தொடா மகளிரி னிகழ்ந்து நின்றவ்வே.. 
(புறம்–299:1-7)

பருத்திப் பயிர்களால் சூழப்பட்ட சிற்றூர் மன்னனினின் உழுந்துச் சக்கையை  தின்று வளர்ந்து தளர்ந்த நடையுடைய குதிரை, கடல் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் தோணியைப் போல பகைவருடையை சேனையினிடையே சென்று போரிட, நெய்யால் அமைத்த உணவை உண்டு ஒழுங்காக கத்தரிக்கப்பட்ட பிடரியினை உடைய பகை மன்னரின் குதிரைகள் முருகன் கோட்டத்தில் பாண்டங்களை தொடுதற்கில்லாமல் விலக்குடைய மகளிரைப் போல போருக்கு அஞ்சி பின்னிட்டன என்று பொன்முடியார் என்ற புலவர் பாடுகிறார்.

சிற்றூர் மன்னனின் குதிரைத் தாக்குதலுக்கு பகை மன்னனின் குதிரை பின்னிட்டதற்கு விலக்குடைய மகளிர் பாண்டங்களைத் தொட பின் வாங்குதலை உவமையாகக் கூறுகின்றார்.

கலந்தொடா மகளிர் என்பது பூப்புற்ற மகளிரைக் குறிக்கும் என்று ஔவை சு.துரைசாமிப் பிள்ளை இப்படி பொருள் விளக்கம் கூறுகிறார். பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது விலகி நின்று தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழரது மரபு. பூப்புத் தோன்றும் மகளிருக்கு அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின் அதன் வராமையை தாம் விலகி நின்று நாணிக் காட்டும் இயல்பு பற்றி கலந்தொடா மகளிரினிகழ்ந்து நின்றவ்வே என்று கூறுகின்றார்.

பூப்புக் காலத்தில் பெண்ணை அசுத்தமாகக் கருதினரேனும் அதனை நீக்குதற்கு மேற்கொண்ட வழிகள் ஒன்றும் சங்க இலக்கியங்களில் இல்லையென்பார் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் பிள்ளை. இலக்கியத்தில் சான்றுகள் இல்லையெனினும் பூப்புற்றவர்களை சில நாட்கள் வரை ஒதுக்கி வைத்து பின்னர் நீராட்டிக் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளும் நிலை நடைமுறையில் தென்னிந்திய மக்களிடம் இருந்து வருகிறது. ஆதலால் நீராடுவதும், மாற்றாடையுமே தீட்டினை நீக்குதற்குரிய அடையாளங்கள் எனலாம். பெண்கள் பூப்புற்ற காலங்களில் கடல்தாண்டிய பயணம் செல்லக்கூடாது என்பதை  ‘முந்நீர் வழக்கம் மகடுஉ க்கில்லை என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

மாதவிலக்குப் பிரச்சினைகள்:
மாதவிடாய் தோன்றுவதற்கு இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு முன்னரே தலைவலி, வாந்தி, மனச்சோர்வு, மார்பில் அதிக வலி ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு வலியுடன் கூடிய தடைபட்டு, தடைபட்டு மாதவிலக்கு ஏற்படலாம்.

பொதுவாகவே, மாதவிலக்குக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு தலைக்குள் எதுவோ நீந்துவது போன்றிருப்பது, முன் நெற்றியில் பாரம், அழுத்தம் தோன்றுவது, இதய படபடப்பு, வயிற்றை இறுக்கிப் பிடிப்பது போன்ற அறிகுறிகள் உருவாகும்.

மாதவிலக்கான மாதர் செய்யத்தக்கன:
 நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை.
உடலை, உறுப்புக்களை சுத்தமாகப் பேண வேண்டும்.
கழிவுகள் அவ்வப்போது அகற்றப் பட வேண்டும்.
கூடுதல் வேலைகளைத் தவிர்க்கலாம்.
உண்ணும உணவில் உப்பைத் தவிர்க்கலாம்.
காபி, டீ, எண்ணையில் பொரித்த, வறுத்த உணவுகளை விலக்கலாம்.
வாய் வழி உண்ணும் கருத்தடை மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
சானிடரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும்.

மாதவிலக்கான மாதர் செய்யத்தகாதன:
கடும் உஷ்ணத்தின் முன் (அடுப்பு) நிற்கக்கூடாது.
மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ இருக்கக் கூடாது.
இரத்தப் போக்கை தடைப் படுத்தக் கூடாது.
இந்நாட்களில் நரம்பு மண்டலம் மிகவும் உணர்ச்சி மிக்கதாய் இருக்கும். 
எனவே உணர்ச்சி வசப்படக் கூடாது.
உடலுறவு அறவே கூடாது.

சூதக வயிற்று வலி, மாதவிலக்கு தடைப் படுத்தல், அதிகப்படியான குருதிப்போக்கு, இரத்த சோகை, பெரும்பாடு, வெள்ளைப்படுதல் போன்ற கர்ப்பப்பை கோளாறுகளை முற்றிலும் நீக்க கீழ்க்கண்ட இயற்கை மருத்துவ முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்.

இயற்கையோடு இயைந்து வாழுங்கள். 

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாள் தோறும் ஏதாவது ஒரு மூலிகைச் சாற்றினை அருந்தி உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐம்பெரும் (பஞ்சபூதம்) ஆற்றல் வழி, மண் சிகிச்சை, நீர்ச் சிகிச்சை, காற்றுச் சிகிச்சை, வெப்பச் சிகிச்சை, ஆகாயச் சிகிச்சை(உண்ணா நோன்பு) ஆகியவற்றைக் கடைப்பிடித்து நோய் வராமல் காத்துக் கொள்ளுங்கள். வந்த நோய்களை நீக்கிக் கொள்ளுங்கள்.

எட்டு வயது நிரம்பிய உடனேயே யோகாசனங்களைக் கற்றுக் கொண்டு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து உடல் நலனைப் பேணுங்கள். (யோகா என்பது எண்வகை யோகத்தையும், பிராணாயாமம், முத்திரைகள், கிரியைகள், பந்தங்களை உள்ளடக்கியது).

நன்றி:
1.       திரு.அ.மெய்யப்பன், யோகாசன ஆசிரியர், சென்னை அவர்கள் 18.12.2011 அன்று ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
2.       புறநானூற்றில் தமிழர் பண்பாடு என்ற நூலுக்கு.

வாழி நலம் சூழ வலைப்பூவுக்காக இக்கட்டுரையை எழுதி வழங்கியவர்:
திரு. மா.உலகநாதன், எம்.ஏ.,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
வரலாற்றுத் துறை,
திரு.வி.க அரசுக் கல்லூரி.
திருவாரூர் – 610001
அலைப்பேசி: 94442902334

வாழி நலம் சூழ வலைப்பூவுக்காக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் திரு.மா.உலகநாதன் ஐயா அவர்களுக்கும், வலைப்பூவினை தொடர்ந்து ஆதரித்து வரும் இணைய அன்பர்களுக்கும் எனது பணிவான இதய நன்றி.