ஞாயிறு, 3 மே, 2015

வாழி நலம் சூழ.... சிறு/குறு தானியங்கள்.

நலமுடன் வாழ - குறு/சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்ப்போம். 
வரகு, திணை, சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி இந்தப் பெயர் கொண்ட தானியங்களெல்லாம் ஏழை மக்களின் உணவு தானியங்களாக நகரவாழ் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டவை.
மேய்ந்த மாட்டை நக்கிய மாடு கெடுத்த கதையாக நாளடைவில் கிராம மக்களும், நகர மக்களது வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி, சிறு/குறு வகைத் தானியங்களுக்குப் பதிலாக அரிசி, மைதா, சர்க்கரை மற்றும் பலமுறை பதப்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணை/தானியங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் தாம் இரத்த சர்க்கரை, இரத்தக் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் அதன் பக்க விளைவுகளான இதய நோய்கள், உடற் பருமன், இரத்த அழுத்தம், பக்க வாதம், மூளை அடைப்பு பாதிப்பு நோய்கள், புற்று நோய் என பல வியாதிகள்... 

இவ்வியாதிகளின் பாதிப்பில் இருந்து வெளிவரத் தெரியாமல் மெல்லக் கொல்லும் நஞ்சாகிப் போன இவைகளின்  பிடிகளில் சிக்கிக் கொண்டு மனிதகுலமே தவித்து வருகிறது. 

இந்தச் சிக்கலில் இருந்து விடுதலை பெற என்ன தீர்வு?
சாவி இல்லாத பூட்டுக்களை எப்போதுமே தயாரிப்பதில்லை. சாவியைத் தொலைத்துவிடுவதினால் வரும் கேடுகளே இவை. மீண்டு வர சிறு/குறு தானியங்களை உணவில் சேர்ப்பதே சிறந்த வழி என ஊட்டச் சத்து உணவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மருத்துவ ரீதியாகவும் இந்த சிறு/குறு தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலமாக அரிசி, மைதா, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டே வரவேண்டும். இது ஒன்றே தான் தீர்வு.

அரிசி கொண்டு தயாரிக்கப்படும் அடை, தோசைகளை விட திணை (Foxtail Millet) கம்பு (Pearl Millet) போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் திணை அடை, கம்பு/ராகி தோசை போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ளன. சென்னை நகரின் பெருவாரியான ஆர்கானிக் (இயற்கை பொருட்கள் அங்காடி)கடைகளில் இப்போது இந்த சிறு/குறு தானிய வகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

வரகு (Kodo Millet), சாமை (little millet), திணை (foxtail millet) மற்றும் குதிரை வாலி (barnyard millet) போன்றவற்றை பயன்படுத்தி பிரபல உணவுவிடுதிகள் உணவுவகைகளை மீண்டும் அறிமுகப்படுத்தி வருவதை காணும் போது இவ்வகை உணவுகளின் தேவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் இந்த தானிய வகைகள் தாம் நாற்பது சதவீதம் வரை நமது உணவுகளை ஆக்கிரமித்து இருந்தன. 1960களின் உணவுப் புரட்சி (Green Revolution) காரணமாக நெல் மற்றும் கோதுமை விளைச்சலை அரசு ஊக்குவித்ததின் பயனாக விவசாயிகள் சிறு/குறு தானியங்கள் பயிரிடுதலை குறைத்துவிட நேர்ந்தது.

அரிசி கோதுமை பயிரிட நிறையத் தண்ணீர் மற்றும் இரசாயன உரங்கள் தேவை. சிறு/குறு தானியங்களை பயிரிட மிகக் குறைந்த தண்ணீரே போதுமானது. இவ்வகைத் தானியங்களுக்கு இரசாயன உரமும் தேவையில்லை. இயற்கை உரங்களே போதுமானது. இப்போதைய தண்ணீர் பற்றாக்குறை அரிசி, கோதுமை விளைச்சலை பாதிப்பதுமட்டுமின்றி உரங்களின் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே போவதினால் உற்பத்திச் செலவும் கூடிக் கொண்டே போகிறது.

அரிசி, கோதுமையினால் செய்யப்படும் பலவித உணவுப் பண்டங்களினால் ஸ்டார்ச் அதிகமாகி இரத்தச் சர்க்கரை நோய் அதிகமாகிறது. பலகாரங்கள் பல எனினும் பயன் படுத்தும் தானியம் ஒன்றேதான். Glycemic Index மிகவும் அதிகம் கொண்டவை அரிசி, மைதா, கோதுமை போன்றவை. அரிசியில் நார்ச்சத்து இல்லை. மாவுச் சத்தே அதிகம் உள்ளது. கோதுமையில் நார்ச்சத்து இருந்தாலும், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் கோதுமை மாவுகள் பலமுறை பதப்படுத்தபட்டு அவற்றில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

மக்களுக்கும், கோதுமையை வாங்கி அரைத்து பயன்படுத்த நேரமோ, ஆர்வமோ இன்றி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கோதுமை மாவுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் விளையும் தீமைகளே சர்க்கரை நோய் எனும் கொடிய அறிகுறியாகும். கோதுமையின் நார்ச்சத்து முழுவதுமாக நீக்கப்பட்டு உள்பாகத்தின் மென்மையான மாவுப்பகுதியே மைதாவாக வருகிறது. தற்போதைய உணவுகளில் மைதாவின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அதுவுமின்றி, பேக்கரியில் கிடைக்கும் அனைத்து உணவுப் பண்டங்களிலும், பரோட்டா போன்ற தின்பண்டங்களிலும் மைதாவின் பயன்பாடே அதிகம். குழந்தைகள் அதிகமாக விரும்பி இவைகளை உண்ணுவதால் அவை அவர்களுக்கு அதிக ஊறு விளைவிப்பனவாக அமைகின்றன.

பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் உண்டாகும் இத்தனை சிக்கல்களுக்கும் தீர்வினை அளிக்கவல்ல விஷயம் இப்போது உங்களுக்கு வந்து விட்டது.

பிரச்சினைகளுக்கு நல்லதொரு மாற்றாக இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்படும் சிறு/குறு தானியங்கள் நார்ச்சத்து கொண்டவையாகவும், அதிக ப்ரோட்டீன் சத்து கொண்டவையாகவும் விளங்குகின்றன என்பதுதான் ஆறுதல் அளிக்கும் செய்தி. அரிசி மற்றும் கோதுமை ரவை சார்ந்த உணவு வகைகளான உப்புமா, கேசரி, பொங்கல், தோசை, புலாவ் போன்றவற்றை சிறு/குறு தானியங்களை கொண்டே செய்துவிடலாம்.

சிறு/குறு தானியங்களின் பயன்கள்.
  • சைவ உணவு உண்பவர்களுக்கு தேவையான ப்ரோடீன் சத்துக்கள் இவற்றில் மிகுதியாக கிடைக்கின்றன.
  • இவற்றில் பி விட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், காப்பர் மற்றும் மங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் நிறைய உள்ளன.
  • நோய் எதிர்ப்புத் சக்தியை வளர்க்கும் பினால் (Phenols) எனப்படும் ஆண்டி ஆக்சிடன்ட் இவற்றில் மிகுதியாக உள்ளன. இவை கேன்சர் மற்றும் இதய வியாதிகளை வரவிடாமல் தடுக்க வல்லவை என அறியப்படுகிறது.
  • இவ்வகைத் தானியங்கள் மாவுத் தன்மை அற்றவை (Gluten-free). க்ளூடன் அலர்ஜி மற்றும் கோதுமைப் பொருட்கள் ஒவ்வாமை உள்ளோருக்கு இவ்வகைத் தானியங்கள் வரப்பிரசாதமாக அமையும் என்கிறார்கள் உணவுவல்லுனர்கள்.
  • க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் இந்த தானியங்கள் டயாபெடிக்குகளுக்கு உகந்தவை.
அரிசி, ரவா, மைதா, கோதுமை போன்ற தானிய வகைகளைக் குறைத்து அதற்கு மாற்றாக சிறு, குறு தானியங்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதகுலம் தம்மை பேரழிவின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்..

(நன்றி: மே, 3, 2015 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியான கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)

வாழி நலம் சூழ... வலைப்பூவுக்காக வெளியிட்டவர்: அஷ்வின்ஜி 

சனி, 28 மார்ச், 2015

30வது இயற்கை நல்வாழ்வுப் பயிற்சி முகாம் - திருப்பனந்தாள் (கும்பகோணம்) 1-5-2015 to 7.5.2015


இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வுயோகா மற்றும் பிராணாயாமமுத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

01-05-2015 (வெள்ளிக்கிழமை) முதல் 07-05-2015 (வியாழக்கிழமை) வரை சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும்முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முகாமில் ஏழு நாட்கள் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேறபயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும்,  முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா, யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், போன்றோரின் நெறிப்படுத்தலின் கீழ், பல சிறப்புப் பயிற்சியாளர்களிடம் இருந்து ஒரே இடத்தில், ஒரே அமர்வில் சிறந்த யோக முறைகளைப் பற்றியும், இயற்கை வழியிலான நலவாழ்வியல் நுட்பங்களை பற்றியும் கேட்டறிய நல்வாய்ப்பு.  

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்,  நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை,  மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 01-05-2015 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 07-05-2015 (பிற்பகல் இரண்டு மணி வரை)
ஏழு நாட்கள்.

இடம்: குமரகுருபரர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
(குறைந்த பட்சம்)
ரூ.2600/- (ஆடவருக்கு)
ரூ.2400/- (மகளிருக்கு)
ரூ.2200/- (10 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவியருக்கு)

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.


மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

கடந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் CAMP REGN என டைப் செய்து உங்கள் பெயர் முகவரியுடன் 9486768930 என்ற அலைபேசி எண்ணுக்கு உங்கள் பதிவுகளை SMS (குறுஞ்செய்தி) அனுப்பிட வேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் மட்டுமே காலை 8 மணி முதல் 9 மணி வரை அலைபேசி மூலம் மேற்கண்ட  தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

முகாம் நெறியாளர்: 
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)

இயற்கை நல ஆர்வலருக்கான சேவையில்..
வாழி நலம் சூழ...

புதன், 4 பிப்ரவரி, 2015

படிக்க-பகிர......புற்று நோய்க்கான மாற்று மருத்துவம்.

இன்றைய தினம் சர்வதேச புற்று நோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது ஆதரவு தெரிவிக்கவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வினை அனைத்து மக்கள் இடையே ஏற்படுத்துவதும் இந்நாளில் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமையாக  இருக்கிறது.

எப்போதோ எங்கோ லட்சத்தில் ஒருவருக்கு வந்து கொண்டிருந்த இந்த புற்று நோய்த் தாக்குதல் இப்போதெல்லாம் இல்லாத இடமே இல்லை என்கிற அளவில் பரவிக் கொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சி, வேதனை அளிக்கக் கூடிய செய்தி.

மருத்துவ விஞ்ஞானத்துக்கு சவால் தந்து கொண்டிருக்கக் கூடிய, மனித குலத்துக்கே பெரிய சாபமாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்த புற்று நோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு பயங்கர நோயா?

இவ்வளவு புற்று நோய் மருத்துவமும், மருத்துவ மனைகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்தும் பலன் ஏன் திருப்தி அளிக்கக் கூடிய அளவுக்கு இல்லை?

இந்தக் கேள்விகள் மனித குலத்தின் மனத்தைக் குடையும் கேள்விகளாகவே இருந்துவிட வேண்டியதுதானா?

அல்லோபதி மருத்துவம் மட்டுமே புற்று நோய்க்கான தீர்வுகளை தர இயலுமா? மாற்று மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து நல்லதொரு தீர்வினை காண இயலாதா?

Healing Cancer Naturally (Click this link to visit the site) எனும் வலைத் தளத்தில் இந்த கேள்விகளுக்கு விடைகளை நீங்கள் காணலாம்.


Home page of the webside: HealingCancerNaturally.com

புற்று நோய் பற்றிய விவரங்கள், இயற்கை மற்றும் மாற்று மருத்துவ முறைகளைக் கொண்டு புற்று நோய் குணப்படுத்துவதற்கான தீர்வுகள் என பல அரிய செய்திகளை இந்த வலைத் தளம் கொண்டுள்ளது.

இந்த வலைத்தளத்தை பரிந்துரைத்த என் பெருமதிப்புக்குரிய திரு.ஆ.மெய்யப்பன் (யோகாசன ஆசிரியர் மற்றும் இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர்) அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும், வணக்கங்களும்..

குறிப்பு: இந்த வலைத் தளம் எந்த மருத்துவ முறைக்கும் எதிரானது அல்ல. மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்று நோயை எதிர்கொண்டு தீர்வுகளை பெற வேண்டிய அக்கறை கொண்டுள்ள உலகளாவிய மருத்துவ மற்றும் நலவாழ்வியல் அறிஞர்களின் கருத்துக்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.

நலவாழ்வியல் செய்திகளை உங்களுக்காக பகிர்வது: வாழி நலம் சூழ.. வலைப்பூ.

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம். 26.12.2014 to 29.12.2014

இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வுயோகா மற்றும் பிராணாயாமமுத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

26.12.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 29.12.2014 (திங்கட்கிழமை) வரை சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும்முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முகாமில் நான்கு நாட்கள் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேறபயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும்,  முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா, யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், பொறியாளர் மெய்யப்பன் ஐயா போன்ற மூத்த பயிற்சியாளர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மேலும் பல சிறப்புப் பயிற்சியாளர்களிடம் இருந்து  ஒரே குடையின் கீழ் யோக முறைகளைப் பற்றியும், இயற்கை வழியிலான நலவாழ்வியல் நுட்பங்களை  கேட்டறிய நல்வாய்ப்பு.  

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்,  நல்வாழ்வு நிலையம்,  தண்டரைப்பேட்டை,  மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 26.12.2014 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 29.12.2014 (பிற்பகல் நான்கு மணி வரை)

இடம்: குமரகுருபரர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
குறைந்த பட்சம் ரூ.1400/-

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் ஆடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

இந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

50 பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப் படுவார்கள். எனவே முன்பதிவினை முதலில் பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும்..

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் CAMP REGN என டைப் செய்து உங்கள் பெயர் முகவரியுடன் 9486768930 என்ற அலைபேசி எண்ணுக்கு உங்கள் பதிவுகளை SMS (குறுஞ்செய்தி) அனுப்பிட வேண்டுகிறோம்.

முக்கிய அறிவிப்பு:
இந்த செல்பேசி எண் குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்ய மட்டுமே. மற்ற விசாரணைகளுக்கு இந்த அலைபேசியை அழைக்க வேண்டாம்...

முகாம் நெறியாளர்: 
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)

இயற்கை நல ஆர்வலருக்கான சேவையில்..
வாழி நலம் சூழ...

புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளித் திருநாள் (Diwali-2014) நல்வாழ்த்துக்கள்... வாழி நலம் சூழ...



தீப மங்கள ஜோதி நமோ நம 




வாழி நலம் சூழ...

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

அஷ்வின்ஜி(ஹரிஹரன்)
மற்றும் குடும்பத்தினர்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் - இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.


இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்


கழிவுகளின் தேக்கம்தான் நோய்க்கு காரணம். கழிவுகளை நீக்கினால் ஆரோக்கியம் தோன்றும் என்பது இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. இயற்கை மருத்துவம் என்பது பஞ்சபூதங்களை கொண்டு சிகிச்சை செய்வதுதான். அது மூலிகை மருத்துவமல்ல; சித்த மருத்துவமல்ல. ஆயுர்வேத மருத்துவமும் அல்ல.. .உடல் நலத்தை கூட்டிக் கொள்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒரே செயல் சரியான உணவு முறையே.. மருந்து சாப்பிடுபவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள படி வைத்தியம் செய்து கொள்வதற்கு முன்னர் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்க. (நூல் ஆசிரியரின் முன்னுரையில் இருந்து)
"உங்க கிட்ட 230 ரூபாய் இருக்கிறது. அதை நீங்கள் செலவு செய்தால் நான் அதற்கு கிட்டத் தட்ட 25% தள்ளுபடி தருகிறேன்" என்றால் ரூ.230/-ஐக் கொண்டு என்ன வாங்குவீர்கள்? நீங்கள் எதைவேண்டுமானாலும் வாங்குங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நீங்கள் அதே கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் “நான் ஒரு ‘ஆரோக்கியப் புதையலை’ வாங்குவேன்” என்று சொல்லுவேன். 

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் என்ற மிக அற்புதமான இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டி நூல் ஒன்றை மின்னியல் பொறியாளர் திரு.ஆ.மெய்யப்பன் அவர்கள் எழுதி அந்த புத்தகத்தை பாப்புலர் பப்ளிகேஷன் நிறுவனத்தார் ரூ.176/-க்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்போதைக்கு ஆரோக்கியத்தை வாங்கணும்னு டாக்டர்களிடம் போனால் ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் ஃபீஸ் வாங்குகிறார்கள். பின்னர் பலவித உடற்பரிசோதனைகள், மருந்து செலவு என்று தொடர் செலவுகள். அடுத்த முறை அதே டாக்டரிடம்/பரிசோதனை மையம்/மருந்தகம் போனால் தள்ளுபடி எல்லாம் கிடையாது. எல்லாரிடமும் கால் கடுக்கக் காத்திருந்து விட்டு பின்னர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுத் தான் வெளியே வரணும்.

இந்தச் சூழலில் ஓர் அற்புதமான ஆரோக்கியப் புதையலை கண்டடைய உங்களுக்கு கிடைத்திருக்கும் மந்திரச் சாவி தான் இந்த நூல். பயனுள்ள பல விவரங்கள் அடங்கிய 288பக்கங்களில் ரூ.230/- பெறுமானம் உள்ள இந்த அற்புத வழிகாட்டி நூலை வெறும் ரூ.176/-க்கு நூல் அறிமுகச் சலுகையாக பதிப்பகம் உங்களுக்கு தருகிறது.

நூலாசிரியர்: பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Diploma in Yoga. நூலாசிரியர் தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவரான சிவசைலம் இராமகிருஷ்ணரின் வழி வந்த பல்வேறு இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களிடம் நெருங்கிப் பழகி இயற்கை நலவாழ்வியல் கலையினை ஐயம் திரிபறக் கற்று தேர்ந்தவர். யோகக் கலையில் ஆசானாக விளங்கும் நூலாசிரியர், நிறைய இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களை நெறிப்படுத்திய அனுபவம் கொண்டவர். 

இயற்கை நலவாழ்வியல் கருத்துக்களை பரப்புரை செய்ய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்துச் செயல்படும் நேர்மையாளர். செட்டிநாட்டுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு கொண்டவர்; நோயால் வாடும், வசதியற்ற இயற்கை நல வாழ்வில் ஆர்வமுள்ளோருக்கு கணக்குப் பார்க்காது செலவிடும் புரவலர். 

இத்தனை செய்திகளையும் தெரிந்து வைத்திருந்தாலும் எல்லா முகாம்களிலும் மற்ற முக்கிய பேச்சாளர்கள் நடத்தும் வகுப்பில் முதல் வரிசையில், முதல் மாணாக்கராக அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும் பண்பாளர். 

எழுபதுக்கும் மேல் அகவைகள் கடந்த நிலையிலும் கடினமான யோகாசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் வல்லுநர். இவரது தொடர்பு எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் நடத்திய முகாமில் கலந்து கொண்ட போது கிடைத்தது. அந்த தொடர்பு எனக்கு இன்றளவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் யோகா வகுப்பில் நான் சேர்ந்த போது அவ்வகுப்பில் நூலாசிரியரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். 'ஐயா, நீங்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர். உங்களுக்கு எதற்கு இந்தப் பட்டயப் படிப்பு என்று வினவிய போது அவர் அளித்த பதிலில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. கல்விக்கு வயது கிடையாது. ஆர்வமும், முயற்சியும் தான் என்பதை அன்று நான் அறிந்து கொண்டேன். தொடர்ந்து நான் எம்.எஸ்.சி (யோகா) பயின்ற போது தம்மிடம் உள்ள நல்ல நூல்களையெல்லாம் எனக்குத் தந்து உதவிய பாங்கினை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். நான் தயாரித்த தீசிசுக்கு அவர் அளித்த உதவிகளை எப்படி மறக்க முடியும்? அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவரது சேவைகளை கண்கூடாக அருகில் இருந்து பார்த்து வருபவன் என்ற வகையில் இந்த நூலை பற்றி அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
     
இந்த நூலுக்கான செய்திகளை இவர் பல ஆண்டுகளாக திரட்டிச் சேர்த்திருக்கிறார். அதற்கான உதவிகளை செய்தவர்களை எல்லாம் நன்றி மறவாமல் அவர்களை இந்நூலின் துணை ஆசிரியர்களாக கவுரவப்படுத்தி இருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களிலும் தான் பெற்ற நலவாழ்வியல் அனுபவங்களை, அதற்குக் காரணமானவர்கள் எல்லாரையும் இந்தப் புத்தகத்தில் மறவாமல் நினைவு கூர்ந்திருக்கும் இவரது நேர்மைப் பாங்கு போற்றற்குரியது.

இந்த நூலின் அனைத்துப் பக்கங்களில் உள்ள அரிய பல செய்திகளை உள்வாங்கி, அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தினாலே போதும். வேறு எந்த நூலையும் நீங்கள் கற்க வேண்டியதில்லை என்ற உறுதியினை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ஏனெனில் நூலாசிரியர் மட்டுமின்றி, இந்நூலின் மற்ற ஆசிரியர்களையும் நான் நேரில் கண்டு பழகி இருக்கிறேன். அவர்களிடம் நலவாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறேன். துறை வல்லுனர்களை இந்த நூலின் ஆக்கத்தில் ஈடுபடுத்தி இந்த நூலில் செழுமை, கருத்து வளம் மேம்பட உழைத்திருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. தமிழகம் எங்கும் இயற்கை நலவாழ்வு முகாம்கள் நடக்கும் இடம், நடத்துபவர்களின் பெயர்கள், அமைப்புகளின் முகவரி, மற்றும் நலவாழ்வியல் அறிஞர்களின் முகவரிகள், தொடர்பு எண்கள் போன்ற செய்திகள் அனைத்தும் ஒரு நூலுக்குள்ளேயே ஒருங்கமைந்து இருப்பது உங்கள் வாழ்நாள் முழுதும் பயன் அளிக்கவல்லவை. 

இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும் பக்கங்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். நூலை முழுதும் ஊன்றிப் படித்து ஒவ்வொரு நடைமுறைகளையும் முயன்று பின்பற்றினால், அதன் பின்னர் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. இந்தச் செய்திகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை நலவாழ்வுக்கு இட்டுச் செல்ல, நீங்களும் ஒரு நலவாழ்வியல் ஆலோசகராக சேவை செய்ய இந்த புத்தகம் உதவும்... மேலும் மற்றவர்களுக்கு இந்த நல்லதொரு அற்புதப் புதையலைப் பரிசளிப்பதின் ஒரு நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நீங்களும் பங்கெடுக்கும் ஒரு அற்புத நல்வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.  

நூல் விவரம்:

தலைப்பு: இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்

பக்கங்கள்: 288 (தரமான அச்சுக் கோர்ப்பு நேர்த்தியான கட்டுமானம்).

61 தலைப்புக்களில் அரிய செய்திகள்.

பதிப்பாசிரியர்; வி.சு.வள்ளுவன்

நூல் வெளியீடு/விற்பனையாளர்: 
பாப்புலர் பப்ளிகேஷன்ஸ், 
10/3, எத்திராஜ் தெரு, 
பத்மநாப நகர், 
சூளை மேடு, 
சென்னை – 94,

Mobile No.9787555182/9566063452
இது ஒரு சேவைச் செய்தி.

இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களின் நலவாழ்வுக்காக தொடர் சேவையில்... 

அஷ்வின்ஜி@ A.T.Hariharan, M.Sc (Yoga)
வாழி நலம் சூழ..

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

75000 பார்வைகள்




75000 பார்வைகளை இந்த வலைப்பூவில் பதித்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் இதய நன்றி.


வெள்ளி, 28 மார்ச், 2014

யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம்.

இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வு, யோகா மற்றும் பிராணாயாம, முத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

28.04.2014 to 04.05.2014 ஆகிய ஏழு நாட்களில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும், முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேற, பயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 28.04.2014 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 04.05.2014 (பிற்பகல் இரண்டு மணி வரை)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
ஆண்கள்: ரூ.2400 /-
பெண்கள் ரூ.2200/-
மாணவர்கள் ரூ.2000/-

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் ஆடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

கடந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் முகாம் இயக்குனரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலாளர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்,
தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு.

முன்பதிவுக்காக மட்டும் முகாம் இயக்குனரை அவரது இல்லத் தொலைபேசி 0435-2472816 எனும் எண்ணில் காலை எட்டு மணிமுதல் ஒன்பது வரையிலும், இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையில் அழைக்கவும்.

முகாம் பற்றிய மற்ற விவரங்களுக்கு திரு.அ.மெய்யப்பன், (சென்னை) அவர்களை 9444323730 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாழி நலம் சூழ...